Horoscope

ஞாயிறு, செப்டம்பர் 13

தேவதையின் வரங்கள்

முதல் வரம்: ஜாதி இல்லாத நாடு


ரெண்டாவது வரம்: டிவி பார்க்கும்போது கரண்டே போகக்கூடாது

மூணாவது வரம்: எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேண்டும்.

நாலாவது வரம்: விஜய் ஒரு படத்திலையாவது நடிக்கணும்

ஐந்தாவது வரம்: சன் பிக்சர் படத்தோட டிரைலர் சன் டிவி குரூப்ல ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் போடணும்.

ஆறாவது வரம்: அரசி சீரியல் சீக்கிரம் முடியனும். அப்படியே ராதிகாவ க்ளோஸ்-அப்ல காட்டுறத நிறுத்தனும்.

ஏழாவது வரம்: சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் ராஜ் டிவி செய்திகள் சேர்த்து பார்த்துட்டு பைத்தியம் பிடிக்காம இருக்கணும்.

எட்டாவது வரம்: ஒரு படமாவது அஜித் நடிச்சு ஹிட்டாகணும்.

ஒன்பதாவது வரம்: என்னோட BLOGSa எல்லோரும் படிச்சு கமெண்டும் ஓட்டும் போடணும்

பத்தாவது வரம்: மேல உள்ள ஒன்பது வரங்களும் ஒழுங்கா நடக்கணும். இல்லேன்னா இன்னொரு பத்து வரம் கேட்பேன்
 
நன்றி: ப்ரியமுடன் வசந்த்

உயிரெழுத்து கேள்விகள்-குமரன் குடிலுக்கு பதில்

அழைத்ததற்கு நன்றி சரவணன்


1. அன்புக்குரியவர்கள் : ஆபீஸ் இல் என்னுடைய வேலையை சேர்த்து செய்பவர்கள்
2 . ஆசைக்குரியவர் : தேடிகிட்டு இருக்கிறேன்
3. இலவசமாய் கிடைப்பது : திட்டு, வார்னிங் லெட்டர் (ஆபீஸ் இல்)
4. ஈதலில் சிறந்தது : பீர்ல லாஸ்ட் மடக்கு .
5. உலகத்தில் பயப்படுவது : பயத்துக்கு மட்டும் பயம் .
6. ஊக்கமளிப்பவர்கள் : டாஸ்மார்க் ல வேலை செய்பவர்கள் .
7. எப்போதும் உடனிருப்பது : கடன்
8. ஏன் இந்த பதிவு : ஏன் இந்த பதிவு கூடாதுன்னு சொல்லுங்க
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா வா ?
10.ஒரு ரகசியம் : எனக்கு 15 வயசுதான் ஆகுது.
11.ஓசையில் பிடித்தது : மழலை சிரிப்பு(கண்ணாடி முன்னாடி).
12.ஔவை மொழி ஒன்று : அப்படின்னா K.B. சுந்தராம்பாளா?.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: என்னோட 2 வீலர்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் குமரன் குடில் சரவணன்


1. A – Avatar (Blogger) Name / Original Name : /சிரிப்பு/ போலீஸ்/ரமேஷ்
2. B – Best friend? : கிருஷ்ணமூர்த்தி
3. C – Cake or Pie? : pie
4. D – Drink of choice? : வாட்டர் (குவாட்டர் இல்லைங்க)
5. E – Essential item you use every day? : செருப்பு
6. F – Favorite color? : ஊதா(ஆனா சிகரெட் ஊதுறது பிடிக்காது)
7. G – Gummy Bears Or Worms : அப்படின்னா?
8. H – Hometown? : கோவில்பட்டி
9. I – Indulgence? : என்னோட தமிழ் டிக்சனரி தொலைஞ்சிட்டது. இதுக்கு என்ன அர்த்தம்
10. J – January or February? : பிப்ரவரி 14(சத்தியமா படம் இல்ல)
11. K – Kids & their names?::பெமினா
12. L – Life is incomplete without?: கடன்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ரெண்டு அக்கா
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : எங்க டேமேஜர் சாரி மானேஜர்.
17. Q – Quote for today? : இன்னிக்காவது குளிக்கணும்(அட ரெண்டாவது தடவையாப்பா)
18. R – Reason to smile? : நான் என்ன லூசா? சும்மா சிரிக்கிறதுக்கு?
19. S – Season? Jodi No.1 ஆ? மானாட மயிலாட வா? எந்த சீசன் பா?
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? நீங்க எவ்ளோ நல்லவரு(Reason to smile?)
22. V – Vegetable you don't like? பீட்ரூட், கருனைகிழங்கு( எனக்கு கருணை இருக்குப்பா)
23. W – Worst habit? : அப்படின்னா? யாருப்பா இப்படி தப்புதப்பா கேள்விகளை அனுப்புறது?
24. X – X-rays you've had? ஆமா? நல்லவேளை தலையில எடுக்கல.
25. Y – Your favorite food? : ஓசில வாங்கிகொடுக்கிற எல்லாம்
26. Z – Zodiac sign? நாங்கெல்லாம் சிங்கம்ல

அய்யயோ. இங்கிலிஷ்ல 26 எழுத்துதானா?

நான் அழைக்கும் நால்வர்.

Cable annan(Varuvaaranu theriyala)

ப்ரியமுடன் வசந்த்

யுவகிருஷ்ணா

குறை ஒன்றும் இல்லை !!!

வெள்ளி, செப்டம்பர் 4

நினைத்தாலே இனிக்கும் -- விமர்சனம்

பிப்ரவரி 14 + ஒரு கல்லூரியின் கதை = நினைத்தாலே இனிக்கும்


சிவா(ப்ரித்வி), சக்தி(ஷக்தி), மீரா(ப்ரியாமணி), கார்த்தி(லொள்ளுசபா ஜீவா) மற்றும் வாசு(கார்த்தி குமார்) வகுப்பில் படிப்பவர்கள். வாசுவுக்கும் சிவாவுக்கும் ஆகவே ஆகாது. சிவாவும் மீராவும் காதலிக்கிறார்கள். காலேஜ் எலெக்சனில் சிவா வை பழி வாங்க வாசு மீராவையே சிவாவுக்கு எதிராக நிக்கும்படி செய்கிறான். மீரா எவ்வளவு சொல்லியும் சிவா மீரா மீது கோபம் கொள்கிறான்.

வாசு எலெக்சன் பெட்டியில் மீரா மற்றும் சிவா சேர்ந்து எடுத்த போட்டோவை போட்டுவிடுகிறான். சிவாதான் செய்ததாக நினைத்து வாசு எதிர்பார்த்த படியே சிவாவும் மீராவும் பிரிகின்றனர். அப்போது சக்தி ஜெனரேடர் ரூமில் இறந்து கிடக்கிறான்.

8 வருடம் கழித்து எல்லா நண்பர்களும் காலேஜில் சந்திக்கிறார்கள். அப்போது யாரோ சிவாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அனைவரும் வாசுவை சந்தேகப் படுகிறார்கள்.

சக்தியை கொலை செய்தது யார்? சிவாவை கொலை செய்ய முயன்றது யார்? மீராவும் சிவாவும் சேர்ந்தார்களா என்ற கேள்விக்கு நீ..............ண்ட நேரத்துக்குப் பிறகு விடை கிடக்கிறது. யார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

படத்தில் உண்மையான ஹீரோ விஜய் ஆண்டனியும் ஒளிப்பதிவாளரும் தான்.



இந்த படத்திற்கு பிறகு நான் எடுத்த சில முக்கியமான முடிவுகள்:

1. சன் பிச்சர் படத்தை இனிமேல் தியேட்டரில் போய் பார்க்க கூடாது(அயன் விதிவிலக்கு)
2. சங்கம் தியேட்டரில் போய் படம் பார்க்க கூடாது(சங்கம் தியேட்டரில் நான் பார்த்த எல்லா படமும் மொக்கை. தென்றல், இதயத் திருடன், அ ஆ, பொக்கிஷம் மற்றும் நினைத்தாலே இனிக்கும்)
காதலில் விழுந்தேன் -- கிணத்துலையே விழலாம்


தெனாவெட்டு -- படம் பார்த்த எல்லோருக்கும் ஒரு தெனாவெட்டு தான்(நாங்களும் உயிரோடு இருக்கம்ல படம் பார்த்துட்டு)

தீ -- அடியில தீயப் பத்தவச்ச மாதிரி இருந்தது

மாசி(ல்)லாமணி -- கொஞ்சம் அழுக்குதான்

திண்டுக்கல் சாரதி- தியேட்டர்ல திண்டுகள் பூட்டுதான்

நினைத்தாலே இனிக்கும் -- சுகர் பேசன்ட்டுக்கு மட்டும்

சனி, ஆகஸ்ட் 29

சினிமா விமர்சனங்கள் -- ஒரு பயமான பார்வை

பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்?

அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...

நன்றி: தமிழ்சினிமா டாட் காம்

திங்கள், ஆகஸ்ட் 24

பிடித்த வேற்று மொழி படங்கள்.

1. Jurasic Park: நான் முதன் முதலாக தியேட்டர்ல பார்த்த இங்கிலீஷ் படம். அப்பெல்லாம் இங்கிலீஷ் படம் நா அந்த மாதிரி படம் நு நினெச்சு பசங்க சீ நு சொன்னாங்க, அப்புறம் இந்த படத்துக்கு எல்லா பள்ளிகூடத்தில் இருந்தும் பசங்கள கூட்டி போனாங்க.

2. Hum Appke Hain Houn: ஹிந்தி படமே ரிலீஸ் ஆகாத எங்க ஊர்ல ரிலீஸ் ஆகி 50 நாள் ஓடுச்சு.பாட்டும் படமும் சூப்பர் ஹிட்.

3. ரங்கீலா: A.R.Rahman மியூசிக் க்கு காகவே எங்க ஊர்ல ஓடுச்சு.

4. Bommarillu(Telugu): இந்த படம்தான் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆக ரீமேக் ஆச்சு. ஜெயம் ரவிய விட சித்தார்த் நல்ல நடிச்சிருப்பார்.

5. Vikramaarkudu(Telugu): ரவி தேஜா 2 வேடங்களில் நடித்த ஆக்ஷன் + காமடி படம். நான் முதன் முதலாக தியேட்டர் ல பார்த்த தெலுங்கு படம். இந்த படம் தான் இப்ப பருத்தி வீரன் கார்த்தி நடிப்பில் "சிறுத்தை" யாக வருகிறது.

6. Aarya(Telugu): அல்லு அர்ஜுன் நடித்த படம். காதலர்களை ஹீரோ பயங்கரமா கலாக்கிரதுதான் படம். பயங்கர ஜாலியாப் போகும் படம். இந்த படம் தான் தனுஷ் நடிப்பில் "குட்டி" யாக ரிலீஸ் ஆகப் போகுது.

7. KICK (Telugu): இதுவும் ரவி தேஜாவோட அக்மார்க் ஆக்ஷன் + காமடி படம். நம்ம ஊர் ஷாம் போலீஸ் ஆபீஸ் ஆ வருவார். இது தான் ஜெயம் ரவி நடிப்பில் "தில்லாலங்கடி" யா வரப் போகுது.

8. Taata Birla (Telugu): சிவாஜி, நாகேந்திர பிரசாத்(வாசகி படத்துல ஹீரோ வா வருவார் அவர்தான்), லயா (சாணக்யா, கஜேந்திரா படத்துல நடிச்சவர்) நடிச்ச புல் காமடி படம். நம்ம ஊர் டாடா பிர்லா கதைதான். ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர இந்த படம் கேரன்ட்டி.

9. Evil Dead(All Parts): பேய் படம் அப்படின்னு சொன்னாலே intha padam thaan gnabakam varum. த்ரில்லேர் படம். நான் உண்மையிலேயே பயந்தேன்.

10 . Winners and Sinners: Jacki Jhan நடித்தது. ஆக்ஷன் + காமடி மொவயே. விஜய் டி. வீ ல அடிக்கடி போடுவாங்க.

இன்னும் நிறைய இருக்கு. டைம் கிடைக்கும் பொது சொல்றேன். இதுக்கு அப்படியே பின்னூட்டம் போட்டு போங்களேன்.

புதன், ஜூலை 22

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் கேட்டீங்களா. விஜய் ஆண்டனி coming back. எல்லா பாடல்களும் அருமை.
1. பையா பையா -- அருமையான குத்துப்பாட்டு. ஆத்திச்சூடி பாட்டு மாதிரி

2. அல்லா அல்லா -- இதுவும் அருமையான குத்துப்பாட்டு

3. அழகாய் பூக்குதே -- அருமையான மெலடி சாங்

4. கல்லூரி -- நம் கல்லூரி வாழ்கையை மனதில் கொண்டுவரும் இனிமையான பாடல்

5. நண்பனை பார்த்த -- இதுவும் ஒரு அருமையான மெலடி சாங்

6. நாட்கள் நகர்ந்து -- சோகமான பாடல். இந்த பாடல் ஏற்கனவே கேட்ட ஒரு பாடல் மாதிரியே இருந்தாலும் ஒரு தடவை கேக்கலாம்.(பெப்ரவரி 14 padathil இதே மாதிரி ஒரு பாடல் உண்டு)

7. செக்ஸ்சி லேடி -- பாப் சாங். ஆட்டம் போட வாய்ப்புள்ளது

For Download click the link below:

http://tamilmp3newsongs.blogspot.com/2009/07/ninaithale-inikkum2009-high-quality.html

வெள்ளி, ஜூலை 10

யாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:

யாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:
மொத்தம் ஆறு பாடல்கள். ஒவ்வொரு பாடல்களும் தேன். கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்கள். இசை ஜேம்ஸ் வசந்தன்.
1. கூத்தடிசிடவா. (டப்பா பாட்டில் வச்சு மியூசிக் போட்டிருக்கார் )2. பேசும் மின்சாரம் 3. பார்த்ததும் கரைந்தேனே (அருமையான மெலடி)4. திகட்ட திகட்ட காதல்5. யாதுமாகி 6. யாரது யாரோ யாரோ

பள்ளிகூட நகைசுவையான அனுபவம்

பள்ளிகூட அனுபவம்:
நான் அருப்புகோட்டை ஸ்கூல் விடுதில படிக்கும்போது நடந்த நகைசுவையான சம்பவம். (சிரிப்பு வரலைனா நான் பொருப்பில்லபா).
1) விடுதி மெஸ் ல யாரும் பேசக் கூடாது. நானும் என்னோட நண்பன் சாந்தா ராமும் பேசினத விடுதி வார்டன் பாத்துட்டாரு. சாப்பிட்டு வந்து எண்ணை பாருன்னு சொல்லிட்டு போய்ட்டார். நான் வந்து தட்ட கழுவிட்டு போய் அடி வாங்கிட்டேன். சாந்தா ராம் தட்ட கழுவாம கைய மட்டும் கழுவிட்டு வார்டன் கிட்ட வந்தான். வார்டன் உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். கைய நீட்டு டா னு சொல்லி அடி பின்னிட்டாரு.
பின்ன வந்து தட்ட கழுவிட்டு போகும் போது வார்டன் மறுபடியும் கூப்பிட்டு மெஸ் ல ஏண்டா பேசினேன்னு மறுபடியும் அடி பின்னிட்டாரு. அடிச்சா பிறகு உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். இப்பதானடா உன் பேர சொல்லி ஒருத்தன் அடி வாங்கிட்டு போறான் னு கேட்டார். அது நான்தான் சார் னு அவன் அழுதுகிட்டே சொல்ல எனக்கு அந்த வலிலையும் (நான் ஏற்கனவே அடி வாங்கிட்டேன்) சிரிச்சிட்டேன். இப்ப நினைச்சாலும் மறக்க முடியாது.
2) 9 படிக்கும் போது +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நான் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி கூட பத்துக்கு போய்ட்டோம். நாட்டாமை படம் அது.
நம்ம நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிச்சைல பெயில். நாதாரி பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான் னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமை யா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. உக்கார்ற எடத்துல கட்டி(ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)

தீபாவளி அன்றும் இன்றும்

அன்று:
காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் எண்ணை தேச்சு ஊற வச்சிடுவாங்க. ரெண்டு மணி நேரம் கழிச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டு புது துணி உடுத்துவோம். அம்மா சுட்ட பலகாரம் திருடி சாப்பிடுவோம். ஒன்பது மணிக்கு பொதிகைல சிறப்பு நிகழ்சிகள் ஆரம்பிச்சுடும்(கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் சன் டிவி மட்டும்தான். வேற டிவி இல்ல) பாக்க ஆரமிசிடுவோம். விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம்.
Program போகும்போது ஊர்ல எங்கயுமே வெடி சத்தம் கேட்காது. எல்லோரும் டிவி தான் பாப்பாங்க. விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம். பின்ன மதியம் நண்பர்கள் வீட்டுக்கு போய் பலகாரம் சாப்பிடுவோம். சாயந்தரம் டிவி ல எதாச்சும் படம் பாத்துட்டு இரவு ரெண்டாவது ஆட்டத்துக்கு போக அம்மா கிட்ட சின்ன கெஞ்சல். அம்மா அப்பாகிட்ட permission வாங்கிடுவாங்க. தீபாவளி முடிஞ்சது.
இன்று:
12 AM: Happy Deepavali Machaan -- SMS

9 AM: Happay Deepavali அம்மா அப்பா தங்கை

10 AM: கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல வாங்கின ஸ்வீட்ஸ் கொஞ்சம் சாப்பிடனும்.

12 PM: சிக்கன் அல்லது மட்டன் சாப்பாடு

1PM: கொஞ்சநேரம் டிவி

2PM: மச்சான் புது படத்துக்கு டிக்கெட் கிடசிருக்குடா. சத்யம் வந்துடு. ஓகே டா.

6 PM: Project Manager: ஆபீஸ் ல வேல இருக்கு உடனே வாங்க. 10 நிமிஷம் வந்துடுறேன்.

9PM: அம்மா ஆபீஸ்ல லேட் ஆகும் நான் இங்கயே சாப்பிடுகிறேன்.

ஆமா பட்டாசு பட்டாசு னு ஒன்னு வெடிப்பமே எங்கப்பா அது?

வியாழன், ஜூன் 18

விஜயை பார்த்தால் யாருக்கு பயம்

குமுதம்: ரசிகர்களை எல்லாம் அழைத்து என்ன பேசினீர்கள்?
SA Chandrasekar: தமிழகம் முழுக்க உள்ள விஜயின் ரசிகர்கலியா அழைத்து அவர்களின் விருபத்தை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள். வரும் ஜனவரியில் சென்னையில் மாநாடு நடக்கும் பொது மீதியை அறிவிப்போம்.

குமுதம்: விஜயகாந்த் கூட கட்சி ஆரமித்து இப்போது கணிசமான ஓட்டுவங்கியை உருவாகியிருக்கிறார். உங்களுக்கும் ஓட்டு கிடைக்குமா?
SAC: ஏன் இல்லை. தமிழ் நாட்டில் யாரை கேட்டலும் பெண்களின் அதிக செல்வாக்கை பெற்றவர் விஜய். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன் விஜயகாந்தே விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி பயப்படுகிறாரே?

குமுதம்: அவர் பயப்படுகிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
SAC: அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தனது அச்சத்தை வெளிபடுத்தினார் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது சும்மா இல்லைங்க. SAC கொடுத்த பெட்டிதான். வேணும்னா இன்னிக்கு குமுதம் வாங்கி இத படிங்க. இப்பவே கண்ணா கேட்டுதே.

வெள்ளி, ஜூன் 12

இவர்கள் இனி என்ன பண்ணலாம்?

இவர்கள் இனி என்ன பண்ணலாம்?


விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.


அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.


சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)


விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்


விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி


ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்


இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.

அன்புமணி ராமதாஸ் -- பெட்டிக் கடை ஆரம்மிக்கலாம் (No cigarete, no panparaag)

T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.

ஞாயிறு, ஜூன் 7

வேலை கிடைக்குமா

ஹாய் வேலை தேடுறீங்களா? டிப்ஸ் வேணுமா. வெயிட் பண்ணுங்க. அடுத்த ப்ளாக்ல அய்டீயா தர்றேன்

ஐடி டவுன்

இப்போ ஐடி டவுன் ஆயிடுச்சே. இனிமே என்ன பண்ணலாம். பத்து யோசனைகள்:
1. விஷால் படத்துக்கு பன்ச் டயலாக் எழுதலாம்.2

2. விஜய் படத்துக்கு கதை ரெடி பண்ணலாம்.

3. ஜெயலலிதா வுக்கு தமிழ்நாடு நிலவரதப் பத்தி கோட நாட்டுக்கு ரிப்போர்ட் அனுப்பலாம்.

4. கலைஞர்க்கு தந்தி (டேலேக்ராம்) வாங்கி கொடுக்கலாம்.

5. ராம தாஸ்க்கு மெமரி பிளஸ் அனுப்பலாம்.

6. வை கோ வுக்கு கிளிசரின் வாங்கி தரலாம்.

7. ஜெ.கே.ரித்திஷ் கொடுக்குற பிரியாணி பொட்டலம் கான்ராக்ட் எடுக்கலாம்.

8தேவா, ஸ்ரீகாந்த் தேவா க்கு ஜெராக்ஸ் கடை வச்சு கொடுக்கலாம்.

இன்னும் ரெண்டு என்னனு யோசிக்கல. நான் சொல்லியா கேக்க போறீங்க. எதாச்சும் பன்னுட்டு போங்க.

யோசிக்க டைம் வேணும்

ப்ளாக்ஸ் எழுத கொஞ்சம் டைம் வேணும்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது