Horoscope

புதன், ஜூலை 22

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் கேட்டீங்களா. விஜய் ஆண்டனி coming back. எல்லா பாடல்களும் அருமை.
1. பையா பையா -- அருமையான குத்துப்பாட்டு. ஆத்திச்சூடி பாட்டு மாதிரி

2. அல்லா அல்லா -- இதுவும் அருமையான குத்துப்பாட்டு

3. அழகாய் பூக்குதே -- அருமையான மெலடி சாங்

4. கல்லூரி -- நம் கல்லூரி வாழ்கையை மனதில் கொண்டுவரும் இனிமையான பாடல்

5. நண்பனை பார்த்த -- இதுவும் ஒரு அருமையான மெலடி சாங்

6. நாட்கள் நகர்ந்து -- சோகமான பாடல். இந்த பாடல் ஏற்கனவே கேட்ட ஒரு பாடல் மாதிரியே இருந்தாலும் ஒரு தடவை கேக்கலாம்.(பெப்ரவரி 14 padathil இதே மாதிரி ஒரு பாடல் உண்டு)

7. செக்ஸ்சி லேடி -- பாப் சாங். ஆட்டம் போட வாய்ப்புள்ளது

For Download click the link below:

http://tamilmp3newsongs.blogspot.com/2009/07/ninaithale-inikkum2009-high-quality.html

வெள்ளி, ஜூலை 10

யாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:

யாதுமாகி மனதை மயக்கும் பாடல்கள்:
மொத்தம் ஆறு பாடல்கள். ஒவ்வொரு பாடல்களும் தேன். கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்கள். இசை ஜேம்ஸ் வசந்தன்.
1. கூத்தடிசிடவா. (டப்பா பாட்டில் வச்சு மியூசிக் போட்டிருக்கார் )2. பேசும் மின்சாரம் 3. பார்த்ததும் கரைந்தேனே (அருமையான மெலடி)4. திகட்ட திகட்ட காதல்5. யாதுமாகி 6. யாரது யாரோ யாரோ

பள்ளிகூட நகைசுவையான அனுபவம்

பள்ளிகூட அனுபவம்:
நான் அருப்புகோட்டை ஸ்கூல் விடுதில படிக்கும்போது நடந்த நகைசுவையான சம்பவம். (சிரிப்பு வரலைனா நான் பொருப்பில்லபா).
1) விடுதி மெஸ் ல யாரும் பேசக் கூடாது. நானும் என்னோட நண்பன் சாந்தா ராமும் பேசினத விடுதி வார்டன் பாத்துட்டாரு. சாப்பிட்டு வந்து எண்ணை பாருன்னு சொல்லிட்டு போய்ட்டார். நான் வந்து தட்ட கழுவிட்டு போய் அடி வாங்கிட்டேன். சாந்தா ராம் தட்ட கழுவாம கைய மட்டும் கழுவிட்டு வார்டன் கிட்ட வந்தான். வார்டன் உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். கைய நீட்டு டா னு சொல்லி அடி பின்னிட்டாரு.
பின்ன வந்து தட்ட கழுவிட்டு போகும் போது வார்டன் மறுபடியும் கூப்பிட்டு மெஸ் ல ஏண்டா பேசினேன்னு மறுபடியும் அடி பின்னிட்டாரு. அடிச்சா பிறகு உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். இப்பதானடா உன் பேர சொல்லி ஒருத்தன் அடி வாங்கிட்டு போறான் னு கேட்டார். அது நான்தான் சார் னு அவன் அழுதுகிட்டே சொல்ல எனக்கு அந்த வலிலையும் (நான் ஏற்கனவே அடி வாங்கிட்டேன்) சிரிச்சிட்டேன். இப்ப நினைச்சாலும் மறக்க முடியாது.
2) 9 படிக்கும் போது +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நான் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி கூட பத்துக்கு போய்ட்டோம். நாட்டாமை படம் அது.
நம்ம நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிச்சைல பெயில். நாதாரி பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான் னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமை யா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. உக்கார்ற எடத்துல கட்டி(ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)

தீபாவளி அன்றும் இன்றும்

அன்று:
காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் எண்ணை தேச்சு ஊற வச்சிடுவாங்க. ரெண்டு மணி நேரம் கழிச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டு புது துணி உடுத்துவோம். அம்மா சுட்ட பலகாரம் திருடி சாப்பிடுவோம். ஒன்பது மணிக்கு பொதிகைல சிறப்பு நிகழ்சிகள் ஆரம்பிச்சுடும்(கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் சன் டிவி மட்டும்தான். வேற டிவி இல்ல) பாக்க ஆரமிசிடுவோம். விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம்.
Program போகும்போது ஊர்ல எங்கயுமே வெடி சத்தம் கேட்காது. எல்லோரும் டிவி தான் பாப்பாங்க. விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம். பின்ன மதியம் நண்பர்கள் வீட்டுக்கு போய் பலகாரம் சாப்பிடுவோம். சாயந்தரம் டிவி ல எதாச்சும் படம் பாத்துட்டு இரவு ரெண்டாவது ஆட்டத்துக்கு போக அம்மா கிட்ட சின்ன கெஞ்சல். அம்மா அப்பாகிட்ட permission வாங்கிடுவாங்க. தீபாவளி முடிஞ்சது.
இன்று:
12 AM: Happy Deepavali Machaan -- SMS

9 AM: Happay Deepavali அம்மா அப்பா தங்கை

10 AM: கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல வாங்கின ஸ்வீட்ஸ் கொஞ்சம் சாப்பிடனும்.

12 PM: சிக்கன் அல்லது மட்டன் சாப்பாடு

1PM: கொஞ்சநேரம் டிவி

2PM: மச்சான் புது படத்துக்கு டிக்கெட் கிடசிருக்குடா. சத்யம் வந்துடு. ஓகே டா.

6 PM: Project Manager: ஆபீஸ் ல வேல இருக்கு உடனே வாங்க. 10 நிமிஷம் வந்துடுறேன்.

9PM: அம்மா ஆபீஸ்ல லேட் ஆகும் நான் இங்கயே சாப்பிடுகிறேன்.

ஆமா பட்டாசு பட்டாசு னு ஒன்னு வெடிப்பமே எங்கப்பா அது?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது