//தொடர் பதிவுக்கு அழைத்த வசந்துக்கு நன்றி//
ஆண்டவன் புண்ணியத்தால இந்த தெருவிளக்கா மாறியாச்சு. அதுவும் இந்த ECR ரோட்டுல இருக்குறதுனால இந்த லவ் பண்ணுற பயபுள்ளைக அடிக்கிற தொல்லை தாங்க முடியல. இதுக்கிடையில அப்பப்ப நாயி வந்து உச்சா போய் நம்மள நாறடிச்சிடுது. கப்பு வேற தாங்க முடியல. நாயிக்கு வேற இடம் கிடைக்கலையா!!! ஒரு வேளை நம்மள நாறடிக்குரதுக்காக வசந்த் அனுப்பின நாயா இருக்குமோ?
நானும் பாக்கறேன் ஒரு பய பைக்குல தனியா போக மாட்டேன்றான். இதுக்கு பேரு ECR ரோடா இல்லை கப்புள்ஸ் ரோடா? சரி வேலைக்கு போறவங்கதான் இப்படின்னா இந்த காலேஜ் படிக்கிற புள்ளைங்க இவங்களுக்கு மேல இருக்காங்க. அதுவும் அவங்க என் மேல சாய்ஞ்சுகிட்டு விடுற டயலாக் இருக்கே யப்பா நம்ம தமிழ் சினிமா தோத்துடும். தமிழ் சினிமா இயக்குனர்களே இனிமே டயலாக் வேணும்னா கொஞ்ச நேரம் எனக்கு பக்கத்துல நின்னு பாருங்க. நூறு படத்துக்கு தேவையான டயலாக் கிடைக்கும்.
அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.
சரி நம்மளும் ECR ரோட்டுலதான இருக்கோம்.நாமளும் எப்படியாவது பிரபலமா ஆயிடனும். நாம மனுசனா இருந்தா என்ன தெருவிளக்கா இருந்தா என்ன. நமக்கு தேவை விளம்பரம். (
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க.)
நாம பிரபலம் ஆகுறதுக்கு நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நம்மள பத்தி எழுத சொல்லலாமே. முதல்ல நம்ம செந்தில் அண்ணன் கிட்ட போவோம்.
தெருவிளக்கு(நான்): செந்தில் அண்ணே எப்ப பாத்தாலும் லிங்கன் தெருவிளக்குல படிச்சுதான் பெரிய ஆள் ஆனாருன்னு பழைய பல்லவியே பாடுறாங்க. புதுசா ஏதாவது பண்ணி என்ன பிரபலம் ஆக்குங்க.
கே.ஆர்.பி: என்கிட்டே மூணு வழிகள் இருக்கு. நான் பயோடேட்டா எழுதினா நீ பிரபலம் ஆயிடுவ. அப்புறம் கவிதை. அப்புறம் தெருவிளக்கு 18+ அப்படின்னு ஒரு வீடியோ போடணும்.
தெருவிளக்கு(நான்): ஓகே
கே.ஆர்.பி: முதல்ல பயோடேட்டா
//பெயர் : தெருவிளக்கு
இயற்பெயர் : அது சொன்னாதான் கரண்ட் பில் கட்டுவீங்களா?
நண்பர்கள்: ஆற்காடு மட்டுமே.
காணமல் போனவை : மாட்டி இருந்த பல்புகள்//
தெருவிளக்கு: வேற வேற
கே.ஆர்.பி: நீயே ஒரு தெருவிளக்கு குடும்பத்து குலவிளக்குன்னு ஒரு கவிதை போட்டுடலாம்.
தெருவிளக்கு: அப்புறம்
கே.ஆர்.பி: அப்புறம் உன்னை பத்தின நிர்வாண உண்மைகள் 18+ ன்னு ஒரு வீடியோ போட்டுடலாம்.
தெருவிளக்கு: இவரு நம்மகிட்ட இருக்குற எல்லாத்தையும் உருவிட்டு விட்டுருவாரு. ஜூட்.
அடுத்து நாம கேபிள் அண்ணனை பாப்போம்.
தெருவிளக்கு: வணக்கம் அண்ணே. நான் பேமஸ் ஆகணும் என்ன பண்ணலாம்
கேபிள்: அது ரொம்ப சின்ன விஷயம். தெருவிளக்குக்கு கீழ கொஞ்சம் இடம் ரெடி பண்ணி ஒரு சாப்பாட்டுக்கடை ஆரமிச்சு கொத்து புரோட்டா போடலாம். கூட்டம் பிச்சிக்கிட்டு வரும். அப்படியே நீயும் பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா நம்ம செலவுல இவரு சொந்தமா ஹோட்டல் ஆரமிச்சிடுவாரு போல. ) அண்ணா வேற ஏதாவது?
கேபிள்: தெருவிளக்கும் ரெண்டு இரண்டு ஷாட் பவர் கட்டும்னு ஒரு புத்தகம் வெளியிடலாம்.
தெருவிளக்கு: ஆகா நான் இந்த விளையாட்டுக்கு வரல. விடு ஜூட்.
அடுத்து யாருப்பா அது. அட கோகுலத்தில் சூரியன் வெங்கட். வாங்க வெங்கட் சவுக்கியமா?
வெங்கட்: சவுக்கியம்.
தெருவிளக்கு: ஆமா இந்த உச்சி வெயில்ல ஏன் டார்ச் கொண்டு வர்றீங்க.
வெங்கட்: நாங்கெல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகலாச்சே. அதான்.
தெருவிளக்கு: ஷ். இப்பவே கண்ணைக் கட்டுதே. நைட்ல தான் சூரியன்ல வெளிச்சம் இருக்காது. அப்பவேனா ட்ரை பண்ணுங்க. இப்ப நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு ஐடியா கொடுங்க.
வெங்கட்: நீங்க ஆணாதிக்கவாதியா இல்ல பெண்ணாதிக்கவாதியா?
தெருவிளக்கு: எனக்கு ஒரு வியாதியும் இல்லியே.
வெங்கட்: ஐயோ நான் அத சொல்லல. நீங்க ஆம்பளைங்களுக்கு சப்போர்ட்டா இல்லா பொம்பளைங்களுக்கு சப்போர்ட்டா?
தெருவிளக்கு: நான் பேமஸ் ஆக ஐடியா கேட்டா நீங்க உங்க VKS-ச உடைக்குறதுக்கு ஆள் சேக்குறீங்களா?
வெங்கட்: அப்படின்னா நீங்க ஹாய் வெங்கட் பகுதிக்கு ஒரு கேள்வி கேட்டு அனுப்புங்க. நான் பதில் சொல்றேன். அப்புறம் இன்று ஒரு தகவல்ல தெருவிளக்கு ஒளி தரும் ஆனா ஒளி தர்ரதெல்லாம் தெருவிளக்கு ஆகாதுன்னு ஒரு பஞ்ச் வைக்கலாம். உடனே நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: பஞ்ச் டயலாக் வேணும்னா நான் பேரரசுகிட்டையே போயிடுவனே. விடு ஜூட்.
யாரு அங்க வர்றது. நம்ம பட்டாபட்டியா. வாங்க பட்டா. நான் பிரபலம் ஆகறதுக்கு ஒரு வழி சொல்லுங்க.
பட்டா: உங்களை(தெருவிளக்கு) காணோம். உங்களோட விலை 15,000 அப்டின்னு சொல்லி ஒரு விளம்பரம் கொடுப்போம். அப்புறம் போலீஸ் சீக்கிரம் கண்டு பிடிச்சிடுசுன்னு சொல்லி ஒரு பஞ்ச் வைப்போம். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தெருவிளக்க தொலைச்சது ராகுல் காந்திதான். அதான் போலீஸ் சீக்கிரம் கண்டுபிடிச்சிடுசுன்னு சொல்லுவோம். ராகுல்காந்தி தொலைச்ச போஸ்டுன்னு பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா இந்த ஆளு நம்மள களி தின்னவிடாம போகமாட்டாரு போல. விடு ஜூட்)
யாருப்பா அது நாம்ம பன்னிக்குட்டி ராம்சாமி மாதிரி இருக்கு. பன்னிக்குட்டி ராம்சாமி நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு ஐடியா கொடுங்களேன்.
பன்னிக்குட்டி ராம்சாமி: தெருவிளக்குன்னு ஒரு தலைப்ப மட்டும் நான் என்னோட ப்ளாக்குல போடுறேன். விசயமே இல்லைனாலும் நம்ம பசங்க மங்குனி,பட்டா, மோகன், jey , முத்து,சிரிப்பு போலீஸ் 200 கமெண்டாவது போடுவாங்க. தெருவிளக்கு அப்டிங்கிற பேருக்கு 200 கமெண்டா அப்டின்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நீ பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: அவ்வ. என்னை வச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே.
அடுத்து யாரு நம்ம ஆபிசெர் jey-யா. வாங்க jey. நீங்களாவது ஒரு நல்ல ஐடியா கொடுங்க.
Jey: நீங்க உங்க நண்பர்களை எல்லாம் உங்களுக்கு Follower-ரா மாறச்சொல்லி டார்ச்சர் கொடுங்க. முடியாதுன்னு சொன்னா குவாட்டரும், பிரியாணியும் வாங்கிகொடுத்து Follower-ரா மாறச்சொல்லுங்கள். யாருமே இல்லாத டீக்கடையில இவ்ளோ கூட்டமான்னு மக்கள் ஆச்சரியப்பட்டு நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: விடு ஜூட்.
அடுத்து யாரு. அட நம்ம தலைவி அனு. வாங்க வாங்க. நீங்களாவது நல்ல ஐடியா கொடுங்க மேடம்.
அனு: எங்கயாவது கூட்டத்துல யாராவது யாரையாவது திட்டினா, கலாய்ச்சா நீங்களும் சென்றது திட்டி கலாய்ங்க. அப்புறம் உங்களை தலைவன் தலைவன் அப்டின்னு உசுபேத்தி விடுவாங்க. நீங்களும் அப்படியே மெயின்டைன் பண்ணி கெத்தா இருங்க. அப்புறம் நீங்கதான் தலை. சீக்கிரம் பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: வேணாம் நான் அழுதுடுவேன். நான் கிளம்புறேன்.
அடுத்து யாருப்பா அது. இந்த ஆளாவது நல்ல ஐடியா கொடுக்குராரன்னு பாப்போம். அட இது நம்ம பிரியமுடன் வசந்த். வாங்க வசந்த் நீங்கதான் வித்தியாசமா யோசிக்கிரவராச்சே. எதாச்சும் ஐடியா கொடுங்க.
வசந்த்: ஏன் தெருவிளக்குல லைட்டும் கரண்ட்டு கம்பியும் மேலதான் போகனுமா. அப்படியே தெருவிளக்க பிடிங்கி தலைகீழா நட்டு வச்சா வித்தியாசமா இருக்கும். வித்தியாசமான தெருவிளக்குன்னு சொல்லி பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: வித்தியாசமா சிந்திக்கிறேன்னு தலைகீழா என்னை வச்சு எவனாவது கரண்டு கம்பிய மிதிச்சு என்னை கொலை கேசுல உள்ள தள்ளிடுவ போல. எனக்கு இந்த விளையாட்டே வேணாம். நான் பேசாம மறுபடியும் பேசுற மனுசனாவே ஆயிடுறேன். என்னை ஆளை விடுங்க ஜூட்.
பின் குறிப்பு: நான் எல்லோரையும் கலாய்த்ததாக பீல் பண்ணி என்னை திட்டவோ அல்லது அடிக்கவோ நினைப்பவர்கள் என்னை பெருந்தன்மையாய் மன்னித்து நம்ம வசந்த் மாப்ளையை கும்மவும். ஏனென்றால் குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டியவனுக்குதான் தண்டனை அதிகம்ன்னு ஒளவையாரே ராமாயணத்துல சொல்லிருக்கார்.
நம்ம கிட்ட தொடர் பதிவுக்கு மாட்டிகிட்டவங்க:
1 )
சாத்தூர் மாக்கான் ராமசாமி: உங்களுக்கு ஒரு கால இயந்திரம் கிடைக்குது. அதுல ஏறி நீங்க பிறக்குறதுக்கு முன்னால எதோ ஒரு வருசத்துக்கு போகணும். எந்த வருசத்துக்கு போவீங்க. என்ன பண்ணுவீங்க. உங்களுக்கான தலைப்பு "
கால இயந்திரம்" .
2 )
சூரியனின் வலைவாசல் அருண் பிரசாத்: நீங்க ஒரு வெளிநாட்டுக்காரர். நீங்க சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றீங்க. உங்க பார்வைல இந்தியா எப்படி இருக்கும். அதுதான் உங்கள் பதிவுக்கான கரு. உங்களுக்கான தலைப்பு "
நான் இந்தியன் அல்ல".