நேத்து மதியம் என் மனைவியுடன் சகுனி படத்துக்கு போகலாம்ன்னு பிளான்
பண்ணினேன். நான் இருக்குற சோளிங்கநல்லூர் ஏரியாவுலயே AGS இருக்கு. அங்க
புக் பண்ணிருக்கலாம். நம்ம கேபிள் அண்ணனோட புத்தக வெளியீட்டு விழாவுக்கு
போகணுமே அதனால அந்த ஏரியால உள்ள தியேட்டர்ல புக் பண்ணலாம்ன்னு பார்த்தேன்.
ஏவிஎம் லதான் டிக்கெட் ரேட் கம்மி. அதனால அங்க புக் பண்ணினேன். மதியம் 30 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி அங்க போயாச்சு. ஏவிஎம் நல்ல தியேட்டர் நல்லா இருக்கும்ன்னு நம்பித்தான் போனோம். அந்த ஏரியாவுல 5-6 power கட்டாம். ங்கொய்யால 5-6 பவர் கட் டைம்ல ஜெனரேட்டர் கூட போடாம ஒருமணி நேரம் வெட்டியா உக்காவ வச்சிட்டாணுக. சென்னைல உள்ள சின்ன சின்ன தியேட்டர்லகூட ஜெனரேட்டர் வச்சி படம் ஓட்டுறானுக. இவ்ளோ பெரிய பேமசான தியேட்டர்ல ஜெனரேட்டர் இல்லியா. என்ன கொடுமை சார் இது.
வந்திருந்தவங்க எல்லோரும் என்னை போல ரொம்ப டீசன்ட் போல. ஒருமணி நேரமும் யாரும் கத்தி கலாட்டா பண்ணலை. எல்லோரும் செல்போனை வச்சி விளையாடிட்டே டைம் பாஸ் பண்ணிடாங்க. யாரும் எதுவும் கேக்கலை. 6 மணிக்கு கரண்ட் வந்து அதுக்கு பிறகுதான் படம் போட்டாங்க.
இவ்ளோ பெரிய தியேட்டர். தேசியகீதம் எல்லாம் போட்டு நல்லாத்தான் பண்றாங்க. நம்மளை ஒருமணி நேரம் வெட்டியா உக்கார வச்சதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு சின்ன சிலைடு போட்டிருக்கலாம். நான் நிறைய தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். AC பிரச்சனை இல்லை வேறு பிரச்சனைன்னா மன்னிப்பு கேட்டு சிலைடு போடுவாங்க. இங்க அதுவும் இல்லை. ஜெனரேட்டர் இல்லாம ஒரு தியேட்டரா. (எங்க ஊர்ல முன்னாடி டூரிங் கொட்டகைல கரண்ட் இல்லாட்டி டிக்கெட் பின்னாடி எழுதி கொடுத்து கரண்ட் வந்தா அடுத்த ஷோ ல வந்து பாருன்னு சொல்லுவாங்க)
படம் ஆறு மணிக்கு போட்டு 6.45 க்கு முடிஞ்சதால கேபிள் அண்ணன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக முடியலை. 30-30 ம் அறுபது கிலோ மீட்டர் அலைச்சல்தான் மிச்சம். பேசாம மூடிக்கிட்டு AGS ல படம் பார்த்திருக்கலாம்.
ஏவிஎம் லதான் டிக்கெட் ரேட் கம்மி. அதனால அங்க புக் பண்ணினேன். மதியம் 30 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி அங்க போயாச்சு. ஏவிஎம் நல்ல தியேட்டர் நல்லா இருக்கும்ன்னு நம்பித்தான் போனோம். அந்த ஏரியாவுல 5-6 power கட்டாம். ங்கொய்யால 5-6 பவர் கட் டைம்ல ஜெனரேட்டர் கூட போடாம ஒருமணி நேரம் வெட்டியா உக்காவ வச்சிட்டாணுக. சென்னைல உள்ள சின்ன சின்ன தியேட்டர்லகூட ஜெனரேட்டர் வச்சி படம் ஓட்டுறானுக. இவ்ளோ பெரிய பேமசான தியேட்டர்ல ஜெனரேட்டர் இல்லியா. என்ன கொடுமை சார் இது.
வந்திருந்தவங்க எல்லோரும் என்னை போல ரொம்ப டீசன்ட் போல. ஒருமணி நேரமும் யாரும் கத்தி கலாட்டா பண்ணலை. எல்லோரும் செல்போனை வச்சி விளையாடிட்டே டைம் பாஸ் பண்ணிடாங்க. யாரும் எதுவும் கேக்கலை. 6 மணிக்கு கரண்ட் வந்து அதுக்கு பிறகுதான் படம் போட்டாங்க.
இவ்ளோ பெரிய தியேட்டர். தேசியகீதம் எல்லாம் போட்டு நல்லாத்தான் பண்றாங்க. நம்மளை ஒருமணி நேரம் வெட்டியா உக்கார வச்சதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு சின்ன சிலைடு போட்டிருக்கலாம். நான் நிறைய தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். AC பிரச்சனை இல்லை வேறு பிரச்சனைன்னா மன்னிப்பு கேட்டு சிலைடு போடுவாங்க. இங்க அதுவும் இல்லை. ஜெனரேட்டர் இல்லாம ஒரு தியேட்டரா. (எங்க ஊர்ல முன்னாடி டூரிங் கொட்டகைல கரண்ட் இல்லாட்டி டிக்கெட் பின்னாடி எழுதி கொடுத்து கரண்ட் வந்தா அடுத்த ஷோ ல வந்து பாருன்னு சொல்லுவாங்க)
படம் ஆறு மணிக்கு போட்டு 6.45 க்கு முடிஞ்சதால கேபிள் அண்ணன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக முடியலை. 30-30 ம் அறுபது கிலோ மீட்டர் அலைச்சல்தான் மிச்சம். பேசாம மூடிக்கிட்டு AGS ல படம் பார்த்திருக்கலாம்.