(அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)
(அருண்,ஆயிரத்தில் ஒருவன் மணி)
நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன். நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).
(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)
மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). பத்து நிமிசத்துல ஜெய் அண்ணன் வந்தார். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் மணி, அருண் பிரசாத் வந்தனர். நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).
(நரி)
அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக
(அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)
பில் வந்தது. வழக்கம் போல யாராவது கொடுப்பாங்க அப்டின்னு நினைச்சேன். நரி "மச்சி எனக்கு கலெக்சன் ஆகலை. காசும் இல்லை" அப்டின்னு சொல்லிட்டான். ஆயிரத்தில் ஒருவன் மணிகிட்ட வாங்க முடியாது(பாவம் பலியாடா வந்து மாட்டிக்கிட்டாரு). ஜெய் அண்ணன் பர்சையே எடுத்துட்டு வரலை.
அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)
மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?
வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.
..