Horoscope

செவ்வாய், ஏப்ரல் 10

முக்கிய பதிவு

                                                                  












இன்னிக்கு இந்தியாவுல செவ்வாய்கிழமை. அவ்ளோதான். போயி வேலைய பாருங்க!!!!

40 கருத்துகள்:

செல்வா சொன்னது…

இன்னிக்கு எங்க ஊருல புதன் கிழமை வச்சிருக்கோமே :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வச்சிருக்கியா? வீட்டுக்கு தெரியாமலா?

மாலுமி சொன்னது…

/// முக்கிய பதிவு ///
இங்கே நான் முக்கட்டா.........

அருண் பிரசாத் சொன்னது…

அவனே முக்கி முக்கியும் வரலைனுதான் இங்க முக்க வந்து இருக்கான் மச்சி :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

அவனே முக்கி முக்கியும் வரலைனுதான் இங்க முக்க வந்து இருக்கான் மச்சி :)//

Please speak decent here, because Im very decent

Madhavan Srinivasagopalan சொன்னது…

But, my friend from England doesn't agree with you.

He claims today is 'Tuesday'..

அருண் பிரசாத் சொன்னது…

but i am indecent... only for you

வைகை சொன்னது…

அட விடுங்கப்பா.. அவன் யாருக்கோ கோட் வோர்ட்ல மெசேஜ் கொடுத்துருக்கான்... நான் உன் வீட்டம்மாகிட்ட சொல்ல மாட்டேன்..ஜமாய் :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

அட விடுங்கப்பா.. அவன் யாருக்கோ கோட் வோர்ட்ல மெசேஜ் கொடுத்துருக்கான்... நான் உன் வீட்டம்மாகிட்ட சொல்ல மாட்டேன்..ஜமாய் :-)//

Nonsense what r u dogging :)

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

அட விடுங்கப்பா.. அவன் யாருக்கோ கோட் வோர்ட்ல மெசேஜ் கொடுத்துருக்கான்... நான் உன் வீட்டம்மாகிட்ட சொல்ல மாட்டேன்..ஜமாய் :-)//

Nonsense what r u dogging :)//

Exactly i'm dogging about one of the street Dog :-)

நாய் நக்ஸ் சொன்னது…

என்னா ஒரு உலக இலக்கியம்.....????
இதுக்கு போய் வேற மாதிரி கமெண்ட் போடுகிறார்கள்....

சிரிப்பு போலிசு...நீங்க கவலை படாதீங்க....

நீங்க இதுமாதிரி இன்னும் பல கோடி உலக இலக்கியம்....

படைத்தது...சாதனை...பலபடுத்தி(!!!!????)...வரலாற்றில்...
இடம் பிடிங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"முக்கிய பதிவு":

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

அட விடுங்கப்பா.. அவன் யாருக்கோ கோட் வோர்ட்ல மெசேஜ் கொடுத்துருக்கான்... நான் உன் வீட்டம்மாகிட்ட சொல்ல மாட்டேன்..ஜமாய் :-)//

Nonsense what r u dogging :)//

Exactly i'm dogging about one of the street Dog :-) //

O. You are standing front of the mirror? :)

மாலுமி சொன்னது…

மச்சிகளா...........யாரு இது இங்கிலீஷ்ல பேசறது ???........நம்ம ரமேஷ்க்கு தான் இங்கிலீஷ் தெரியாதே ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS கூறியது...

என்னா ஒரு உலக இலக்கியம்.....????
இதுக்கு போய் வேற மாதிரி கமெண்ட் போடுகிறார்கள்....

சிரிப்பு போலிசு...நீங்க கவலை படாதீங்க....

நீங்க இதுமாதிரி இன்னும் பல கோடி உலக இலக்கியம்....

படைத்தது...சாதனை...பலபடுத்தி(!!!!????)...வரலாற்றில்...
இடம் பிடிங்க...///

danks

Unknown சொன்னது…

what is it today tuesday???

oh my god...

வெளங்காதவன்™ சொன்னது…

எங்கள் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி!!!

வெளங்காதவன்™ சொன்னது…

இந்தப் பொழப்பு பொழைக்குறதுக்கு...

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இங்க கமண்டு போட்டவங்க எல்லாம், நாண்டுகிட்டுச் சாவலாம்.....
:-)

ஏட்டு ஏகாம்பரம் சொன்னது…

ஆகா உண்மையை ஊருக்கு அறியச் செய்த மகான் 'சிரிப்புபோலீஸ்' சார் வாழ்க.

வெளங்காதவன்™ சொன்னது…

யாராச்சும் இருக்காவளா?

வெளங்காதவன்™ சொன்னது…

//மாலுமி கூறியது...
மச்சிகளா...........யாரு இது இங்கிலீஷ்ல பேசறது ???........நம்ம ரமேஷ்க்கு தான் இங்கிலீஷ் தெரியாதே ???
////

உனக்கு சரக்குப் பேரத்தவிர, வேற எந்த இங்கிலீசும் வாயிலேயே நொழையாதே மச்சி!!!

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மேன்மைதாங்கிய திரு சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு,

தங்களின் இந்த பதிவு கண்டு இலக்கியத்தரம் மிக்க படைப்பு ஒன்றை படிக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நிறைவேறியது. பதிவின் தாங்கள் அள்ளித் தெளித்திருக்கும் இலக்கியச் செழுமையில் திக்குமுக்காடிப் போய்விட்டேன் என்றால் அது மிகையாகாது. இன்னிக்கு என்று நீங்கள் இன்றைய தினத்தை விளித்திருப்பதை வைத்து உலகில் இன்னும் பல தினங்களும் உண்டு என்பதை புரிந்து கொண்டேன். பொதுவாக சொல்லாமல் இந்தியாவுல என்று குறிப்பாக சொன்னதை பார்த்து எல்லையே இல்லாத உங்கள் உலக அறிவை சரியான இடத்தில் பயன்படுத்தியதைக் கண்டு வியக்கிறேன். மேலும் செவ்வாய்கிழமை என்று தாங்கள் கூறி இருப்பது திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் இருந்து இன்றைய தினத்தை பிரித்தறியவே என்று உணர்ந்த போது மெய்சிலிர்த்துவிட்டேன்.

அடுத்த வரியாக அவ்ளோதான் என்று சொல்லி இருப்பது, இந்த நிரந்தரமில்லாத உலகவாழ்க்கையையே பின்நவீனத்துவ குறியீடாக காட்டி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்ட போது நடுநடுங்கிவிட்டேன். என்ன ஒரு வார்த்தை வீச்சு?

போயி வேலைய பாருங்க என்று சொன்னதும் வேலையை சரிவர செய்யாமல் பதிவுலகில் வெட்டியாக பொழுதை போக்கும் எங்களை போன்றவர்களைப் பற்றி தாங்கள் மிகச் சரியாக ஞானதிருஷ்டியில் உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள் என்று புரிந்து ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று விட்டேன். அந்த வரியில் கடைசியில் நான்கு ஆச்சர்யக் குறிகளை விட்டிருப்பது திசைகள் நான்கே என்று அனைவருக்கும் புரியவைக்கத்தான் என்று தெரிந்தபோது நான் இந்த கணிணி திரையை தங்கள் காலடியாக கருதி அதன் அடியிலே வீழ்ந்து விட்டேன்.

இப்படிக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி

செல்வா சொன்னது…

திரு பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,

தாங்கள் நமது இலக்கியச் செம்மல் திரு.சிரிப்பு போலீஸ் அவர்களின் தலைசிறந்த இலக்கியப் படைப்பான “முக்கியப் பதிவு” என்கிற கதை என்றோ, கட்டுரை என்றோ , தத்துவம் என்றோ சொல்லவியலா புதுமை இலக்கியத்தில் இட்டிருக்கும் பின்னூட்டத்தை வாசித்தேன். தாங்களும் என்னைப் போலவே சிரிப்பு போலீஸ் அவர்களின் இலக்கியத் திறமையைத் தெரிந்து கொண்டது கண்டு என் நெஞ்சு மகிழ்ச்சியில் தத்தளிக்கிறது.

இனியும் நமது சிரிப்பு போலீஸ் தளத்திற்கு வரும் சாதாரண வாசகர்களுக்குத் தங்களின் பின்னூட்டம் இந்த உலக இலக்கியப் பதிவினை விளக்குமாறால் மன்னிக்கவும் விளக்குமாறு இருக்கும் என்பது திண்ணம்.

அன்புடன்
செல்வா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திரு.செல்வக்குமார் அவர்களுக்கு,

எனது கருத்துரையை வைத்து சிரிப்பு போலீஸ் அவர்களின் இந்த உச்சகட்ட இலக்கிய படைப்பின் உன்னதத்தை வாசகர்கள், ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியே என்றாலும், சிரிப்பு போலீஸ் அதற்கெல்லாம் அப்பார்ப்பட்ட படைப்பாளி, இலக்கியவாதி என்பதை இங்கே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு,
பன்னிக்குட்டி ராம்சாமி

Yoga.S. சொன்னது…

வணக்கம் ரமேசு!"முக்கு","முக்கு" ன்னு "முக்கி" இன்னிக்கு செவ்வாக் கிழமைன்னு கண்டு புடிச்ச்சிருக்காரு,ஹ!ஹ!ஹா!!!!!

முத்தரசு சொன்னது…

முக்க்கிய பதிவு தான். இன்று செவ்வாய் என நினைவுபடுத்தியமைக்கு... நன்றி

Yoga.S. சொன்னது…

வணக்கம் ப.ரா அவர்களே!இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற பதிவுக்கு நீங்கள் எதுகை,மோனையுடன் கொடுத்த விளக்கம் கண்டு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது(சாம்பலைத் தடவிட்டு கிணத்துல விழுடான்னு நீங்க சொல்லுறது கேக்குது!)என்ன ஒரு எழுத்து நடை.கலைஞர் தோற்றார்,போங்கள்!ஆனாலும்,ரமேசுக்கு எதனால் இப்படி ஆயிற்று என்று ஒரு வார்த்தை,ஒரேயொரு வார்த்தை சேர்த்திருக்கலாம்!மூன்று வாரங்கள் கடந்து போனது மறந்து விட்டதா என்று ஆர்வக் கோளாறால் கேட்கத் தோன்றுகின்றது.இற்றை வரை (அந்த அறிவிக்குப் பின்)"காத்திரமான"ஒரே பதிவு இன்று தான் வந்திருக்கிறது என்பது கூடவா உங்கள் கிட்னிக்கு சாரி மூளைக்குத் தோன்றவில்லை?விளக்கம் கேட்கிறேன்!!!!!

மொக்கராசா சொன்னது…

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.

சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.

இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.

1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.

மொக்கராசா சொன்னது…

"அகர முதல எழுத்தெல்லாம்..." எனத் தொடங்கி "கூடி முயங்கப் பெறின்" என்று, தமிழின் முதல் எழுத்தான, "அ"வில் ஆரம்பித்து, "ன்" இல் முடித்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என இவ்வையகத்திற்குச் சொன்னதெல்லாம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும், ஏன் இனிவரும் யுகங்களுக்கும் பொருந்துகின்றவை.

திருக்குறளும் ஒரு வேதம்தான். அதனால்தான் நம் முன்னோர்கள் திருக்குறளை "உலகப் பொதுமறை" என்றார்கள்.

பைந்தமிழ்க் குறளைப் பாங்குடன் பயின்ற பன்மொழிப் பாவலன் பாரதி, "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும் பாடினான்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அது பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவேண்டும்.

பொருளுக்கு ஆதாரம் விவசாயம், தாரம் தொழிற்சாலை. தற்போது நம் நாட்டில் தொழிற்சாலைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை.

பசியைப் புசிப்பவர்கள்

எத்தனையோ பேருக்கு ஏகாந்த உணவளித்து, பசியினையும் ஆசையோடு புசித்தவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். இந்தப் பாருக்கே படியளந்து பசிப் பிணியைப் போக்குகின்றவர்கள் பாமர விவசாயிகள்.

பசியினைப் படைத்தவன் பரம்பொருள் என்றால் அதனைப் போக்கிடும் வித்தையறிந்தவன் விவசாயி. அந்தப் பசியால்,

மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்

என்றாள் ஒளவை. அந்தப் பசிப்பிணியை நீக்குகின்ற பசிப்பிணி மருத்துவர்கள்தான் உழவர்கள். அவர்களின் சிறப்பை, "தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது" என்றும் "உழவர்க்கு அழகு ஏர்உழுதூண் விரும்பல்" என்றும் நீதி நூல்கள் நவிலும்.

விவசாயத்தைப் புறக்கணிக்கும் எந்த ஒரு நாடும் வளராது. வளரவும் முடியாது. அதனால்தான் மனிதனின் இன்றியமையாத் தேவையான "உணவு, உடை, இருப்பிடம்" ஆகியவற்றில் உணவிற்கு முதலிடத்தை நம் முன்னோர்கள் தந்தனர்.

பசி நீங்கினால்தான், உடல் உழைக்கும்; அறிவு வேலை செய்யும். அனைத்தும் நடக்கும். உழவர்கள் வாழ்ந்தால்தான் உலகம் வாழும்.

புராணங்களில் மேழி

அன்று மிதிலை மன்னனான சனகராசன் "பொன் ஏர் பூட்டி, பூமியை உழுததாக" இராமாயணம் சொல்லும்.

மகாவிட்ணுவின் தசாவதாரத்தில், ஓர் அவதாரமான பலராமன் தனக்கென ஓர் ஆயுதமாகக் கொண்டதும் மேழிதான்.

அதர்மமான போர்முறையால் துரியோதனனை வென்ற பீமனை, பலராமன் தன் மேழி ஆயுதத்தால் கொல்ல முயன்ற போது, கண்ணன் பீமனைக் காக்க பலராமனைச் சமாதானப்படுத்தியதாகப் பாரதம் பேசும்.

அதுபோல் மேன்மையுற்ற உழவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துத் தங்கள் மேழி ஆயுதத்தை ஏந்துவார்களேயானால் அல்லது துறப்பார்களேயானால் இந்த மேதினியே ஏது?

மொக்கராசா சொன்னது…

விளையாட்டு என்பது சிறுவர்க்கு உரியது. "பாலர்களுக்கு அழகு விளையாட்டு" என்கிறது ஒரு வடமொழிப் பழமொழி. "விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு" என்கிறார் பாவாணர். (தமிழ் நாட்டு விளையாட்டுக்கள், ப.196) "விளை" என்பது விருப்பம் என்பதைக்குறிக்கும். "ஆட்டு" என்பது ஆட்டம் என்பதாகும் சிறுவர்கள் தாமாக விரும்பி அதில் ஒன்றி ஆடுவது விளையாட்டாகும். மனம் லயித்து ஆடும் விளையாட்டுகள் கிராமப்புறங்களில்தான் இன்றளவும் ஆடப்படுகின்றன. இன்றைய சூழலில் கல்விக் கூடங்களில் "விளையாட்டு" என்பதுற்குத் தனி வகுப்புகள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் அவை உண்மையில் விரும்பி ஆடும் ஆட்டமா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுடன் விளையாட வேண்டுமென்ற வரையறை கல்வி நிலையங்களில் காணப்படுகிறது.

இது போலன்றி இயல்பாகப் பலரோ, சிலரோ கூடி தங்கள் விருப்பப்படி விளையாட்டைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளை வரையறுத்து, ஓர் ஒழுங்கு முறையை அமைத்துக் கொண்டு வெற்றி தேல்விக்கான வரன் முறைகளைத் தீர்மானித்து ஆடுவதே விளையாட்டாகும். நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் இங்ஙனம் பல விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். பெரிய நகர்ப்புறங்களிலும் ஓரளவு கிராமச்சூழலிலும் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்படுகிறது என்றாலும் நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுக்கள் மிகுதி. நாட்டுப்புற விளையாட்டுக்களைச் சிறுவர்க்குரியவை, சிறுமியர்க்குரியவை, இருபான்மையர்க்கும் உரியவை என்று வகைப்படுத்தலாம். இக்கட்டுரை சிறுமியர்க்குரிய விளையாட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டமைகிறது.

2. சிறுமியர் விளையாட்டுகள்

தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2.1. பங்கு பெறுவோர்

கண்டறியப்பட்ட விளையாட்டுகளில் இருவர் ஆடுவது, பலர் ஆடுவது ஆகிய இருபிரிவு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. பலர் ஆடும் விளையாட்டுகளில் ஒருவர் தலைமை பெறுவதும், இருவர் தலைமை பெறுவதும் காணப்படுகிறது. அதாவது பலர் ஆடிய போதிலும் ஒருவர் ஒருவராக இருவர் இருவராக ஆடும் முறை உள்ளது. சான்றாகப் பாட்டி பேத்தி விளையாட்டைக் குறிப்பிடலாம். பாட்டி பேத்தி விளையாட்டு பலர் ஆடும் வகையானது. எனினும், பாட்டி பேத்தி பங்கினை ஏற்போர் நிகழும் உரையாடல் இவ்விளையாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. சான்றாக.

"பாட்டி பாட்டி என்ன வேணும்
தின்ன வேணும் என்ன தின்ன வேணும்"

என்பதைக் குறிப்பிடலாம்.

தட்டாங்கல், பல்லாங்குழி, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், கிச்சு கிச்சுத் தாம்பாளம் ஆகியன நான்கும் இருவர் ஆடும் விளையாட்டுக்கள். பிற அனைத்தும் பலர் அடங்கிய குழுவினர் ஆடும் விளையாட்டுக்களே. அவற்றுள்ளும் பாட்டிபேத்தி, வெத்தலைப் பெட்டியைக் காணல, கயிறு குதித்தல், பூப்பறிக்க வருகிறோம், ஆகியன ஒருவர் ஒருவராக அல்லது இருவர் இருவராக ஆடும் விளையாட்டுக்களாகும்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நாங்கல்லாம் மண்டை காய யோசிச்சு யோசிச்சு பதிவு தேத்துரோம் நீங்க எப்படி இவ்வளவு பெரியவிஷயத்தஒரே வரியில் அனாயாசமா சொல்லிட்டு போயிட்டிங்க அதுக்கு வர கமெண்ட் வேர பாருங்க. கலி கலம்பா

மாணவன் சொன்னது…

உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால், பொறுமையாக இருங்கள், அவன் இன்னொரு செருப்பையும் வீசியதும் எடுத்துக் கொண்டு ஓடுங்கள், ங்கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்....!

:-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

இனி இவரு முக்குறப்பல்லாம் பதிவு போடுவாரோ?

Manimaran சொன்னது…

இன்னிக் குஇந்தியா வுலசெவ்வாய் கிழமைஅவ் ளோதான்
போயி வேலையபா ருங்க!

மேற்காட்டிய குறள்வெண்பா வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது.சீர், தளை, ஓசை ஆகியவை வெண்பாவிற்குரியனவாக இருப்பதனை நீங்களே கண்டறியலாம்.

'குறுகத் தரித்த' குறளையே குறுக்குவதுபோல்,தொகுத்து ஒரு தொடரில் சுருக்கித் தந்திருப்பது, சிரிப்புப் புலவரின் நுண்மாண்நுழை புலத்தைக் காட்டுகிறது எனலாம்.

உலகத்தின் தலைசிறந்த வாழ்வு இலக்கியமான திருக்குறளுக்கு அடுத்து இலக்கிய உலகுக்குள் அடியெடுத்து வைக்கும் என் நண்பரைப் பெருமையோடும் உரிமையோடும் வரவேற்கிறேன்.

ராஜி சொன்னது…

இந்தியாவுல செவ்வாய்கிழமை.
>>>>
அப்போ சிங்கப்பூருல?

Manimaran சொன்னது…

ராஜி கூறியது...//இந்தியாவுல செவ்வாய்கிழமை.
>>>>
அப்போ சிங்கப்பூருல?//

ஷ்சிங்கிஏர்... அதாவது சீன மொழியில செவ்வாய் கிழமைன்னு சொல்ல வந்தேன்.

Jey சொன்னது…

கல்யாணமாகி கொஞ்ச நாள் தானடா ஆச்சி...., எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே... இன்னும் நாள் போனா என்னாகப்ப்போறியோ தெரியலையே மக்கா...,

இந்த பதிவினால பன்னிய வேற பதரடிச்சிருக்கே...

டேமேஜரு என்னமோ போடா...

அஞ்சா சிங்கம் சொன்னது…

அந்த முக்கிய படத்தையும் போட்டிருந்தீங்கன்னா பதிவு என்னை போல் பாமரர்களும் புரியும் வண்ணம் இருந்திருக்கும் ...
இப்போது பாருங்கள் பன்னிகுட்டி மாதிரி இலக்கிய வாதிகள் மட்டும் புரிந்து கொள்கிறார்கள் ..
அடுத்தமுறை முக்கும் பொது அதை படம் எடுத்து போடவும் ..................

venkit_Raj சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yoga.S. சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது…

அடுத்தமுறை முக்கும் போது அதை படம் எடுத்து போடவும் ..................////சீச்சீ,அதையெல்லாமா படம் எடுப்பாங்க?

Yoga.S. சொன்னது…

காலை வணக்கம் ரமேஷ்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது