Horoscope

புதன், ஜூன் 2

புது பதிவருக்கு நேர்முகத்தேர்வு

எல்லா வேலைக்கும் நேர்முகத்தேர்வு இருப்பதுபோல புதிதாக வரும் பதிவருக்கு நேர்முகத்தேர்வு வைக்கப் போவதாக பதிவர்கள் குழு முடிவு செய்துள்ளது. பிரபல பதிவர் நேர்முகத்தேர்வில் கேள்விகள் கேட்பதாக இருக்கிறார். அப்போது ஒரு புதியவர் நேர்முகத்தேர்வுக்கு வருகிறார்.

புதியவர்: May I come in சார்?

பிரபல பதிவர்: yes,come in?

பு: நன்றி

பிப: உக்காருடா நாயே

பு: என்ன சார் இது மரியாதை இல்லாம பேசுறீங்க

பிப: உனக்கு சூடு சொரணை எல்லாம் இருக்குதா, உனக்கு பதிவு எழுத தகுதி இல்லை. நீ போகலாம்.

பு: சார் பரவா இல்ல சார் எப்படி வேணாலும் திட்டுங்க. என்னை அனுப்பிடாதீங்க. நான் என் நண்பர்கள்கிட்ட எல்லாம் வரும்போது வலைப்பூவோடு வரேன்னு சொல்லிருக்கேன். நான் இனிமே சோத்துல உப்புகூட போட்டு சாப்பிட மாட்டேன்.

பிப: (ரொம்ப கெஞ்சுரானே) என்னமோ மல்லிகை பூ வாங்கிட்டு வர்ற மாதிரி சொல்றியே. சரி நாயே உக்காரு

பு: நன்றி சார்

பிப: வலைப்பூவுக்கு என்ன பெயர் வச்சிருக்க?

பு: rames.blogspot.com

பிப: புனை பேர் எதுவும் இல்லையா

பு: நான் என் பேர்ல தான் எழுதுவேன்

பிப: கழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர் இப்படி பேர் வச்சாதான் நீ உருப்படுவ.

பு: சரி சார் நான் இந்த மாதிரியே வைக்கிறேன்

பிப: சரி பதிவுலகுக்கு வந்து என்ன பண்ண போற?

பு: நிறைய எழுதுவேன் சார். நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. நட்பை வளர்ப்பேன்.

பிப: என்னது நட்பை வளர்ப்பியா? நீ வேலைக்கு ஆகமாட்ட. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட. நீ வேற யாராவது பதிவரை குடும்பத்தோட திட்டனும். அவர் உன்னை குடுமபத்தொடு திட்டுவார். நாங்கெல்லாம் சேர்ந்து உங்க ரெண்டுபேர் குடும்பத்தையும் திட்டுவோம். இதுதான் இப்ப உள்ள trend.

பு: சரி சார். நான் திட்ட பழக்கிறேன்.

பிப: உன் ஜாதி என்ன?

பு: பதிவு எழுத ஜாதி எதுக்கு சார்?

பிப: பின்ன சும்மா திட்டுனா கிக் இருக்குமா? ஜாதிய வச்சுதான் திட்டனும். அதுவும் ஒரு லேட்டஸ்ட் டிரன்ட்.

பு: சரி சார் என்ன ஜாதில சான்றிதழ் வேணும்னு சொல்லுங்க ரெடி பண்ணிடலாம்.

பிப: நீ பிழைச்சுக்குவ. சரி நாளைக்கு வரும்போது ஜாதி சான்றிதழ், நிறைய கெட்ட வார்த்தை,நீ யார்கூடயாவது தெருவுல சண்டை போட்டிருந்தா அந்த வீடியோ(இது இருந்தா எக்ஸ்ட்ரா qualification) எல்லாம் கொண்டு வா.

பு: சரி சார்

பிப: சரி நாளைக்கு பாக்கலாம். நீ என்கிட்டே எதுவும் கேக்கணுமா?

பு: டேய் பன்னாட, பரதேசி நீயெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்ல, இனிமே நேர்முகத்தேர்வு அப்டின்னு வந்து உக்கார்ந்த சாவடிச்சுடுவேன். மூடிட்டு போ. &&&&

பிப: அடப்பாவி ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைக்கிறியே, நீ சீக்கிரம் பிரபல பதிவர் ஆயிடுவ. நான் எஸ்கேப்பு..

40 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆமா யாரு அந்த பிராப்ள பதிவர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னையா கேள்வி பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் பத்தி கேள்வி பட்டது இல்லியா?

vinthaimanithan சொன்னது…

சண்டைபோட கத்துகிட்டாச்சுல்ல.. இனி எல்லாம் சுகமே

தினேஷ் ராம் சொன்னது…

:P

Unknown சொன்னது…

பன்னாட,, பரதேசி.. மூதேவி..
என்னடா பதிவு இது..
கொஞ்சமாச்சும் சூடு சொரணை இல்லை
ஒரு கெட்ட வார்த்தை கூட இல்ல
அப்புறம் எப்பிடி நீ பிரபல பதிவர் ஆக முடியும்...

எப்பூடி ..?

வெங்கட் சொன்னது…

Super., Super., Super..

இதுக்கு பேருதான்
மஞ்ச பையில செருப்பு
போட்டு அடிக்கறதுங்கறது...

ரொம்பவே ரசிச்சேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சண்டைபோட கத்துகிட்டாச்சுல்ல.. இனி எல்லாம் சுகமே//

அப்ப நானும் பிரபலம் ஆயிட்டேன்னு சொல்லுங்க..

//பன்னாட,, பரதேசி.. மூதேவி..என்னடா பதிவு இது.. கொஞ்சமாச்சும் சூடு சொரணை இல்லை//

நான்தான் பிரபல பதிவராச்சே எனக்கு எப்படி இருக்கும்?

@ சாம்ராஜ்ய ப்ரியன் நன்றி

@ //இதுக்கு பேருதான் மஞ்ச பையில செருப்பு போட்டு அடிக்கறதுங்கறது...//

நன்றி வெங்கட்

Unknown சொன்னது…

அதுதான் இல்லைன்னு ஆகிபோச்சே...

இன்னும் எத்தனை பேருய்யா மஞ்ச பையில செருப்ப தூக்கிட்டு அலைவீங்க...

எங்க கிட்ட மஞ்ச பையில அரிவாள்தான் இருக்கும்..

அப்புறம் அண்ணே இந்த அட்ரெஸ் கொஞ்சம் சொல்லமுடியுமா?

ரமேஷுன்னு ஒரு ரொம்ம்ப நல்லவர் வீடு எங்கிருக்கு?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

புதியவர்: May I come in சார்?

பிரபல பதிவர்: yes,come in?

பு: நன்றி

பிப: உக்காருடா நாயே
////

நல்ல வரவேற்ப்பு .....

ஜானகிராமன் சொன்னது…

வரவர நம்ம தமிழ் பதிவுலகம் தமிழ்நாடு காங்கிரஸ் போல மாறிப்போச்சு. அப்படியே உங்க பதிவை த.காவுக்கும் அனுப்புங்க... உங்களுக்கு கோயில் கட்டுவாங்க.

தனவேல் சொன்னது…

என்ன சொல்ல, அதான் பிரபலப் பதிவாலருனு சொல்லிட்டியே

settaikkaran சொன்னது…

சூப்பர் அப்பு! நிஜமாவே ரொம்ப நல்லவரு தான்! :-)))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமேஷுன்னு ஒரு ரொம்ம்ப நல்லவர் வீடு எங்கிருக்கு?//

மகா ஜனகளே செந்தில்ன்னு ஒருத்தர் என்னை கொலை வெறியோட தேடிகிட்டு இருக்கார். அவர்கிட்ட என் அட்ரெஸ் கொடுக்காதீங்க. குவாட்டர் வாங்கிகொடுத்து கூட கேப்பார். சொல்லிடாதீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெறும்பய
இனிமே இப்படிதான்..(தமிழ்படம் ஸ்டைல் ல படிங்க)

@ சேட்டைக்காரன்

என்னை ரொம்ப புகழாதீங்க.

@ ஜானகிராமன்.நா
எனக்கு கோயிலா. நான் கற்பை பத்தி பேசவே இல்லியே?

@ தனவேல்
விடு விடு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர் இப்படி பேர் வச்சாதான் நீ உருப்படுவ.
//

உள்குத்து.. ரைட்... அடுத்த புனைவு + மன்னிப்பு போர்ட் ரெடி பண்ணிட்டு வாரேன்..

Kiruthigan சொன்னது…

கலக்கல்

puduvaisiva சொன்னது…

"கழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர் இப்படி பேர் வச்சாதான் நீ உருப்படுவ"

faxsankar :-)

ரமேஷ் ரசித்தேன்

அடியே ராசாத்தி சொன்னது…

பட்டையை கிளப்பறீங்க மக்கா..

ARV Loshan சொன்னது…

ஹஹ..
ஒவ்வொரு வரிக்குமே சிரித்தேன்..

கலக்கல்..
ட்ரெண்டுக்கு எத்த மாதிரியே எழுதுறீங்க..கலக்கல்..
கழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர்//

ஹா ஹா.. ரொம்பக் குறும்பு சார்..

ஜோதிஜி சொன்னது…

நீங்களாவது சிரிக்க வைச்சீங்களே?

பூந்தொட்டியைக் கொண்டே எறிகின்றேன் அன்பா..............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/உள்குத்து.. ரைட்... அடுத்த புனைவு + மன்னிப்பு போர்ட் ரெடி பண்ணிட்டு வாரேன்..//

நீங்களுமா? நோ உள்குத்து. நாங்கெல்லாம் நேராவே குத்துவோம்.


@ Cool Boy கிருத்திகன்.
நன்றி

@ ♠புதுவை சிவா♠
நன்றி

@ LOSHAN
ரொம்ப நன்றி.

//பூந்தொட்டியைக் கொண்டே எறிகின்றேன் அன்பா..............//

jothiji en intha kolaveri?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அடியே ராசாத்தி

நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

இதுதான் நடக்கப்போகிறது நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.
புதிதாக வருகிறவர்கள் மதிகின்றமாதிரியா நம்மவர்கள் இருக்கிறார்கள்.
ஒருவேளை அவர்கள் வந்து செருப்பால் அடித்தால் திருந்துவார்களோ என்னவோ.

ஜெயந்தி சொன்னது…

சிரிக்கவும் சிந்திக்கவுமான நகைச்சுவை பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒருவேளை அவர்கள் வந்து செருப்பால் அடித்தால் திருந்துவார்களோ என்னவோ.//

அப்பா செருப்பு வியாபாரம் சூடு பிடிக்கும்னு சொல்லுங்க..

@ நன்றி ஜெயந்தி

க ரா சொன்னது…

சிரிப்பு போலிஸ் :-).

அனு சொன்னது…

நீங்களுமா??

டிஸ்கி:
வர வர கமெண்ட் போடுறதுக்கு கூட ரொம்ப யோசிக்க வேண்டியிருக்குது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ் நீ என்ன சொல்ல வர்ற?
@ அனு என்ன பண்றது?டிஸ்கி சூப்பர்

priyamudanprabu சொன்னது…

nice post


then
how r u ?
whr r u now?

priyamudanprabu சொன்னது…

nice

நீச்சல்காரன் சொன்னது…

அட்ராசக்க அட்ராசக்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரபு நான் சென்னைலதான் இருக்கேன். மன்னிக்கணும் போன் பண்ண முடியல..

@ நீச்சல்காரன் நன்றி

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

ம்ம்ம்.பதிவுலகம் எங்கே போகுது...நடத்துங்க..நடத்துங்க..

Jey சொன்னது…

புதுசா பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க சொல்றத பார்த்தா, இன்னும் நிறய ட்ரைனிங் எடுத்துட்டு வரனும் போல இருக்கே!!!!.

பதிவை ரசித்தேன்.
Jeyakumar.G
Chennai.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ஆமாம் ஜெய் ட்ரைனிங் எடுக்கணும்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

நல்ல நகைச்சுவை - ஆப்பு அருமை - ஆமா இவ்ளோ திட்டணுமா - சரி சரி

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி சீனா சார்

செல்வா சொன்னது…

//ழுதை குரங்கு, பத்தாயிரத்தில் இவன், faxsankar,குமுதத்தில் சந்திரன்,லொள்ளு போலீஸ்,நாடா, அண்ட்ராயர் இப்படி பேர் வச்சாதான் நீ உருப்படுவ.///

athanaala thaan naan KOOMAALI appadinnu vachirukken...

Kiruthigan சொன்னது…

சார் எனக்கு நெறய கெட்ட வார்த்தை தெரியும் நா எப்ப பிரபல பதிவர் ஆகறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சார் எனக்கு நெறய கெட்ட வார்த்தை தெரியும் நா எப்ப பிரபல பதிவர் ஆகறது? //

சீக்கிரம் aakkidalaam ..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது