Horoscope

ஞாயிறு, ஆகஸ்ட் 22

நண்பனா அவன்??!!

பதினைந்து நாள் எங்க ஊர்ல இருந்துட்டு இன்னிக்கு காலைலதான் சென்னை வந்தேன். நான் வந்தது தெரிஞ்சதும் சென்னைக்கு ஒரே சந்தோஷம். இன்னிக்கு முழுவதும் ஆனந்த மழைதான்.(அது துக்க கண்ணீர் அப்டின்னு சின்னப் புள்ளத்தனமா யாரும் கமென்ட் போடக் கூடாது).

இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன். வீட்டுக்கு  போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது(போனதே அதுக்குதான). ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.

இடையிடையே பேசும்போது என் நண்பன் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி குட்டி குட்டி கதைகளை உதாரணமாக சொன்னான். என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்.

"என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி" அப்டின்னு சொன்னான். மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.

அதுக்கு அவன் தர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருக்கலாம். நண்பனா அவன்? என்னை இப்படி அவமானப் படுத்தி இருக்க கூடாது. என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படியா அசிங்கப் படுத்துவான். அவன் என்ன பண்ணினான் தெரியுமா?

.
.
அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது ஒரு இங்கிலீஷ் கதை புத்தகம். புத்தகம் கொடுத்தானே. எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...

(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. நாங்கெல்லாம் நேர்மையானவங்க. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவோம். VAS காரங்க மாதிரி ஒண்ணுமே தெரியலைன்னாலும் Steven Spielberg, ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு ஓவர் சீன் போட மாட்டோம்)

70 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

இந்த மாதிரி எனக்கு கூட நடந்துருக்குங்க!

Mohamed Faaique சொன்னது…

முதல் வெட்டு...அதுவும் சிரிப்பு போலீஸூக்கே...

முத்து சொன்னது…

மொத வெட்டு

சௌந்தர் சொன்னது…

இனி மேல் வீட்டுக்கு யார்ரவது வந்தால் அவங்களுக்கு இந்தி தெலுங்கு எல்லாம் எழுத படிக்க தெரியுமா கேளுங்க யார் அந்த நண்பன்

முத்து சொன்னது…

கொய்யால என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கி Your comment has been saved and will be visible after blog owner approval.இது அழுவுணி ஆட்டம்

முத்து சொன்னது…

Your comment has been saved and will be visible after blog owner approval.

உடனடியா இந்த கருமாந்திரத்தை எடுத்து தொலை

கருடன் சொன்னது…

//வீட்டுக்கு போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது//

மீந்து போன பழய சோறு காலி ஆச்சி சொல்லு...

கருடன் சொன்னது…

//ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.//

15 நாள் ரொம்ப நாளா? காப்பி வரும் மொக்க போட்டு இருப்ப...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.
இருந்து ராத்திரி சாப்பாட்டையும் முடிக்க வேண்டியதுதானே...

Unknown சொன்னது…

அது டிக்சனரி தானே.....

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...


மீந்து போன பழய சோறு காலி ஆச்சி சொல்லு...//////

சரியா பதில் சொல்லுற

Jey சொன்னது…

சிப்பு வீட்டு ஆணி....கொஞ்ச நேரத்துல வரேன்...வந்து....

முத்து சொன்னது…

Your comment has been saved.

என் கோரிக்கையை ஏற்று உடனடியாக சரி செய்த சிப்பு போலிசு வாழ்க

முத்து சொன்னது…

Jey கூறியது...

சிப்பு வீட்டு ஆணி....கொஞ்ச நேரத்துல வரேன்...வந்து..../////////////


அதுஎப்படி எல்லா ப்லோகிலும் இதே பதிலை சொல்லுற

கருடன் சொன்னது…

//என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன். //

என்னாது அறிவா?

முத்து சொன்னது…

கலாநேசன் கூறியது...

அது டிக்சனரி தானே.....////////////


ரிப்பிட்டு

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன். //

என்னாது அறிவா?//////////

அதானே நம்ம பயபுள்ளைங்க அறிவு கிலோ எவ்வளவுன்னு கேட்குற ஆளுகள் ஆச்சே

முத்து சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...

மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.
இருந்து ராத்திரி சாப்பாட்டையும் முடிக்க வேண்டியதுதானே.../////////////


அதையும் முடிச்சுட்டு தான் வந்து இருப்பார் அதற்குள் இங்கிலீஷ் புக்கை பார்க்கவும் டாஸ்மார்க் நினைப்பு வந்து இருக்கும்

கருடன் சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...

//மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.
இருந்து ராத்திரி சாப்பாட்டையும் முடிக்க வேண்டியதுதானே..//

ரமேசு முடிக்கலாம் தான் பாஸ் முயர்ச்சி பன்னாரு.. அவரு நண்பன் உஷர் ஆகி ஹோட்டல் மெனு கர்டு கைல கொடுத்து இருக்கரு... அதை படிக்க தெரியாம இங்க வந்து கதை புத்தகம் கொடுத்தாறு சலம்புது...

முத்து சொன்னது…

யாராவது இருக்கீங்களா தனியா எவ்வளவு நேரம் சவுண்ட் விடுறது

அருண் பிரசாத் சொன்னது…

VAS ஆளுங்களை கலாய்ச்சதால், உங்களை கலாய்ப்பதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.

கருடன் சொன்னது…

//மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை.//

இதே இன்னும் ஒரு நண்பன் வீட்டுல பிரியானி சொல்லி இருந்தா மழைல நனஞ்சி ஒடி இருப்ப....

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

ரமேசு முடிக்கலாம் தான் பாஸ் முயர்ச்சி பன்னாரு.. அவரு நண்பன் உஷர் ஆகி ஹோட்டல் மெனு கர்டு கைல கொடுத்து இருக்கரு... அதை படிக்க தெரியாம இங்க வந்து கதை புத்தகம் கொடுத்தாறு சலம்புது.../////

எப்புடி இப்படி உண்மையை சரியா கண்டுபிடிக்குற சரியான timing

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை.//

இதே இன்னும் ஒரு நண்பன் வீட்டுல பிரியானி சொல்லி இருந்தா மழைல நனஞ்சி ஒடி இருப்ப....////////////

அப்படி போடு சிப்பு சீக்கிரம் வா இல்ல இந்த பயபுள்ள உன் பட்டாபட்டியை உருவாம விடமாட்டான்

கருடன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
முத்து சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

VAS ஆளுங்களை கலாய்ச்சதால், உங்களை கலாய்ப்பதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.////////

அது என்ன பாஸ் vas

முத்து சொன்னது…

எனக்கு தொட கறி பார்சல்

சௌந்தர் சொன்னது…

TERROR........உங்க வீட்டுக்கு தானே வந்தார்

கருடன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கருடன் சொன்னது…

@சௌந்தர்
//TERROR........உங்க வீட்டுக்கு தானே வந்தார்//

என் வீட்டுகு வந்தா... சூடுதண்ணி எடுத்து ஊத்தி இருப்பேன்...

கருடன் சொன்னது…

// பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.//

நல்லா பாருயா... டீ குடிக்காம நீ கிளம்ப மாட்ட சொல்லி நேத்து டீ போட்டா பாத்திராத்த காழுவின தண்ணியா அது...

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@சௌந்தர்
//TERROR........உங்க வீட்டுக்கு தானே வந்தார்//

என் வீட்டுகு வந்தா... சூடுதண்ணி எடுத்து ஊத்தி இருப்பேன்...//////

நீயாவது பரவாஇல்லை நானா இருந்தால் ஆசிட் அடிச்சு இருப்பேன்

அருண் பிரசாத் சொன்னது…

@ Terror

உன் சத்ததை விட உன் ஜால்ரா சத்தம் ஓவரா இருக்குய்யா

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

// பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.//

நல்லா பாருயா... டீ குடிக்காம நீ கிளம்ப மாட்ட சொல்லி நேத்து டீ போட்டா பாத்திராத்த காழுவின தண்ணியா அது.../////////////


நம்ம ஆளு தான் ப்ரீயா கிடைச்சா பினாயிலையும் குடிக்கிற ஆளாச்சே

முத்து சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

@ Terror

உன் சத்ததை விட உன் ஜால்ரா சத்தம் ஓவரா இருக்குய்யா///////////

இதுக்கு பேரு தான் வயித்து எரிச்சல் பாஸ்

கருடன் சொன்னது…

முத்து

//நம்ம ஆளு தான் ப்ரீயா கிடைச்சா பினாயிலையும் குடிக்கிற ஆளாச்சே//

நம்ம ரமேசு அந்த பாட்டில் கழுவி தண்ணி கொடுத்தாலே. கோயில் கட்டி கும்புடும்...

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

முத்து

//நம்ம ஆளு தான் ப்ரீயா கிடைச்சா பினாயிலையும் குடிக்கிற ஆளாச்சே//

நம்ம ரமேசு அந்த பாட்டில் கழுவி தண்ணி கொடுத்தாலே. கோயில் கட்டி கும்புடும்...//////////////

இவ்வளவு சவுண்ட் விட்டும் சிப்பு போலிசை காணோம்

கருடன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ்....இந்த மாதிரி ஓசிச்சாப்பாடு கெடச்சா, உகாண்டா நாட்டு புக்கா இருந்தாலும் சூப்பர் கதடா மாப்ளேன்னு சொல்லிட்டு வரனும், அதவிட்டுப்புட்டு.......!உம்மையெல்லாம் புல் மப்புல இலக்கியக் கூட்டத்துக்குள்ள இறக்கி விட்டுடனும்யா!

கருடன் சொன்னது…

ரமேசுசுசு... இனி VAS கலாய்க்க கூடது.. கலாய்ச்ச மருபடி வருவேன்... இன்னும் தல வெங்கட் வருவாரு... நாளைக்கு தம்பி செல்வா வருவான்.... எப்படிதான் தாங்கரிங்கலோ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் பாண்டி, இப்போ டைம் என்ன? சிப்பு போலீசு மட்டையாகுர நேரம், இப்போ போயி கூப்ட்டா எப்பிடி வருவாரு, காத்தால வந்து கெளப்புங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் யாராவது இன்னிக்கு ஆடு வெட்டுனிங்கன்னா எனக்கு நாலு காலையும் அப்பிடியே எடுத்து வெச்சுடுங்கப்பா, டாக்டர்ரு கால் சூப்பா சாப்புடச் சொல்லியிருக்காரு!

கருடன் சொன்னது…

//யோவ் பாண்டி, இப்போ டைம் என்ன? சிப்பு போலீசு மட்டையாகுர நேரம், இப்போ போயி கூப்ட்டா எப்பிடி வருவாரு, காத்தால வந்து கெளப்புங்கப்பா!//

இந்த போலீஸ் எப்பவும் மட்டைதான் ராம்சாமி.... கேட்டா அணி சொல்லுது... நீங்க எல்லம் இல்லமா ஆடு எல்லம் குளுருவிட்டு திரியுது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
இந்த போலீஸ் எப்பவும் மட்டைதான் ராம்சாமி....//

அப்படின்னா ஆடு வெட்டும்போது தலையில கொஞ்சம் பீரு தெளிச்சு விடுங்கப்பா...!
ஆமா நம்ம சிப்பு போலீசுக்கு தான் இங்கிலீசு தெரியாதே பின்னே எப்பிடி அந்த கத புக்கு இங்கிலீசு புக்குன்னு கண்டு பிடிச்சாரு? இதுல ஏதோ மர்மம் இருக்குய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ டெரர், முத்து, பண்ணி கொஞ்ச நேரம் ஆள் இல்லாட்டி பூட்டின வீட்டுக்குள்ள என்னய்யா பண்றீங்க. பிச்சு புடுவேன் பிச்சு. நான் ரெபிடெக்ஸ் வச்சு இங்கிலீஷ் கத்துகிட்டு அந்த புக்கை படிக்கலை நான் போலீஸ்இல்லை.

@ அருண் இப்படி கட்சி மாறிட்டியே ராசா..

Ramesh சொன்னது…

ஹஹ்ஹா...நல்ல காமெடி...நம்மள உங்க ஃபிரண்டு புரிஞ்சுக்கவே இல்லை...இது தெரிஞ்சிருந்தா...நமக்கு சாப்பாடு போடறதுக்கு முன்னாடியே..அந்த புக்கை கொடுத்திருப்பார் இல்லை யா...அதுக்கப்புறம் அங்க இருந்து சாப்பிட நாம என்ன மானங்கெட்ட பசங்கலா என்ன...

ஜெய்லானி சொன்னது…

ஏன்யா ..ஏன் .. கதை கேட்டோமா வந்தோமான்னு இல்லாம புக் கேக்கும் பழக்க்ம் ஏன் ..? இப்ப அழுவுவது யாரு..!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Terror ,முத்து ,ஜெ சௌந்தர் ,ரமேஷ்ட்ட என்ன கதை புக் ன்னு கேளேன் (terror நீ கேளேன் ... ஜெ நீ கேளேன் ,முத்து நீ கேளேன் )
பயபுள்ள இருந்து படம் பார்த்துட்டு இருக்கான்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ங்கொய்யால உன்னையெல்லாம் ஹும்ம்...

:)

Chitra சொன்னது…

:-)))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//தயவுசெய்து, அனைத்து பதிவர்களும் தத்தமது அவார்டுகளை தங்கள் வலைபக்க அலமாரியில் இருந்து எடுத்துவிட்டு லாக்கரில் பத்திரமாக வைத்து கொள்ளவும். //
எல்லோர் blog கிலும் locker வசதி இல்லை . பதிவுலகில் locker வசதி உள்ள ஒரே ப்ளாக் என்னோட ப்ளாக் தான் அதனால் எல்லோரும் award ய் ஏன் ப்ளாக் போடும்படி கேட்டுக்கொள்கிறேன்

GSV சொன்னது…

//Terror ,முத்து ,ஜெ சௌந்தர் ,ரமேஷ்ட்ட என்ன கதை புக் ன்னு கேளேன் (terror நீ கேளேன் ... ஜெ நீ கேளேன் ,முத்து நீ கேளேன் )
பயபுள்ள இருந்து படம் பார்த்துட்டு இருக்கான்.....//

இது "நாராசம்" அப்படின பிரமாதம்

வெங்கட் சொன்னது…

நம்ம ரமேஷ் வேகமா Type பண்ணும் போது
சில வார்த்தைகள் மிஸ் ஆயிடுச்சு..
இதோ.. அது உங்களுக்காக

அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது
ஒரு 4th Std இங்கிலீஷ் புத்தகம்.
மூணாங் கிளாஸ் வரைக்கும் படிச்ச
ஒரு Graduate-ஐ
இப்படியா வீட்ல
வச்சி அசிங்கப்படுத்துறது...?

// VAS காரங்க மாதிரி ஒண்ணுமே
தெரியலைன்னாலும் Steven Spielberg,
ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு
ஓவர் சீன் போட மாட்டோம் //

பிரபாலமானவங்களை தாக்கி எழுதினா
பிரபலமாயிடலாம்னு நீங்க நினைக்கறீங்க..
சரி., சரி.. பொழச்சி போங்க..

Jey சொன்னது…

/// நான் வந்தது தெரிஞ்சதும் சென்னைக்கு ஒரே சந்தோஷம். இன்னிக்கு முழுவதும் ஆனந்த மழைதான்//

ஒரு வாரமா பேய்ஞ்சிகிட்டு இருந்த மழை...இப்ப நின்னுடுச்சி...., பேச்சைப் பாரு...

Jey சொன்னது…

//இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன்//

லீவுன்னா ஃபிரண்ஸ் வீடுகளுக்கு போய் கொட்டிக்கிர பயதானே நீ..இதுல ரொம்ப பெருமை வேற..

Jey சொன்னது…

//ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.//

யார் யாருகிட்ட சேட்டை செய்ஞ்சி அடிவாங்குனீங்கன்ற விசயங்கள் தானே...அதுக்கு ஒரு நாள் பத்திருக்காதே சிப்பு..

Jey சொன்னது…

//என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி//

தெனாலிராமன் கதைப் புத்தகம் தனே...

Jey சொன்னது…

//எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...//

எல்கேஜி புக்குக்கு இந்த அக்கப்போரா..., முடியலை..

முத்து சொன்னது…

அது என்ன புக் என்று தான் கலாநேசன் தெளிவா சொல்லி இருக்காரே


கலாநேசன் கூறியது...

அது டிக்சனரி தானே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ எஸ்.கே நீர் என் இனமஅய்யா!!
@ வடை போச்சே Mohamed Faaique நண்பா
@ முத்துஉனக்கும் வடை போச்சே தல....
@ சௌந்தர் கண்டிப்பா கேட்டுடலாம்..

//மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன். இருந்து ராத்திரி சாப்பாட்டையும் முடிக்க வேண்டியதுதானே..//

அதுக்குள்ளே இந்த பாழாப் போன மழை நின்னுடுச்சே மணி சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கலாநேசன் உண்மைய வெளில சொல்லாதீங்க பாஸ்

//ரமேசு முடிக்கலாம் தான் பாஸ் முயர்ச்சி பன்னாரு.. அவரு நண்பன் உஷர் ஆகி ஹோட்டல் மெனு கர்டு கைல கொடுத்து இருக்கரு... அதை படிக்க தெரியாம இங்க வந்து கதை புத்தகம் கொடுத்தாறு சலம்புது...//

@ டெரர் அனுபவம் பேசுகிறது...

@ ரமேஷ் ஆமாங்க அவனுக்கு விவரம் பத்தலை.

//ஏன்யா ..ஏன் .. கதை கேட்டோமா வந்தோமான்னு இல்லாம புக் கேக்கும் பழக்க்ம் ஏன் ..? இப்ப அழுவுவது யாரு..!!//

@ ஜெய்லானி இனிமே நான் கேப்பேன்????

// பயபுள்ள இருந்து படம் பார்த்துட்டு இருக்கான்//

@ ஹரிணி உன்னை மாதிரிதான் நானும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப்ரியமுடன் வசந்த் ஹிஹி

@ சித்ரா நன்றி

@ GSV நன்றி

//அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது
ஒரு 4th Std இங்கிலீஷ் புத்தகம்.
மூணாங் கிளாஸ் வரைக்கும் படிச்ச
ஒரு Graduate-ஐ இப்படியா வீட்ல
வச்சி அசிங்கப்படுத்துறது...?//
/பிரபாலமானவங்களை தாக்கி எழுதினா
பிரபலமாயிடலாம்னு நீங்க நினைக்கறீங்க..
சரி., சரி.. பொழச்சி போங்க..//

@ வெங்கட் பசங்களோட ஹோம் வொர்க் பண்ணி பண்ணி புத்தி போகுதா பாருங்க...
பிரபலமா யாரு யாரு? காமடி பண்ணாதீங்க பாஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு வாரமா பேய்ஞ்சிகிட்டு இருந்த மழை...இப்ப நின்னுடுச்சி...., பேச்சைப் பாரு...//
பாஸ் நான் வந்ததால தான் மழை நிக்காம பெஞ்சது.

//லீவுன்னா ஃபிரண்ஸ் வீடுகளுக்கு போய் கொட்டிக்கிர பயதானே நீ..இதுல ரொம்ப பெருமை வேற..//

நான் இல்லை நாம் அந்த மாதிரி ஆளுங்கதான

//யார் யாருகிட்ட சேட்டை செய்ஞ்சி அடிவாங்குனீங்கன்ற விசயங்கள் தானே...அதுக்கு ஒரு நாள் பத்திருக்காதே சிப்பு..//

@ jey அண்ணே நாமெல்லாம் ஒரே மட்டைல ஊர்ன குட்டைதான...

செல்வா சொன்னது…

//அது துக்க கண்ணீர் அப்டின்னு சின்னப் புள்ளத்தனமா யாரும் கமென்ட் போடக் கூடாது).//
நான் அப்படித்தான் போடுவேன் ..!!

//என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்//
இவ்ளோ உண்மையாவா பேசுவீங்க ..!! சத்தியமாவே ரொம்ப நல்லவர் நீங்க ..

செல்வா சொன்னது…

//(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க// //
அப்படி கிடையாது.. நாங்க தலைக்கு வச்சு படுக்கரதேல்லாம் சும்மா உங்களை ஏமாத்துரக்கு. அதைய பார்த்துட்டு இவுங்களே படிக்கல நாம எதுக்கு படிச்சிட்டு அப்படின்னு நீங்க நினைச்சா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது. VKS காரர் அப்படிங்கறது ரொம்ப சரியா நிரூபிக்கிறீங்க ..

சீமான்கனி சொன்னது…

என் பின்னுட்டத்தை காணவில்லை என்ன போலிசுங்க நீங்க ஒழுங்கா கண்டுபிடிச்சு போட்டுருங்க இல்லனா அவ்ளோதான்... சி.பி.சி. ஐ. டி வரும்...

Unknown சொன்னது…

பதிவெல்லாம் எழுதுரோம்ன்னு சொல்றது இல்லையா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ செல்வா வா வா எதோ சொல்ற போ...

//என் பின்னுட்டத்தை காணவில்லை என்ன போலிசுங்க நீங்க ஒழுங்கா கண்டுபிடிச்சு போட்டுருங்க இல்லனா அவ்ளோதான்... சி.பி.சி. ஐ. டி வரும்...///
@ டெரர் தான் சுட்டிருக்கும்...

//பதிவெல்லாம் எழுதுரோம்ன்னு சொல்றது இல்லையா ?//

புறா கால்ல தூது விட்டானே வரலியா செந்தில் அண்ணா

முத்து சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

@ செல்வா வா வா எதோ சொல்ற போ...

//என் பின்னுட்டத்தை காணவில்லை என்ன போலிசுங்க நீங்க ஒழுங்கா கண்டுபிடிச்சு போட்டுருங்க இல்லனா அவ்ளோதான்... சி.பி.சி. ஐ. டி வரும்...///
@ டெரர் தான் சுட்டிருக்கும்...

//பதிவெல்லாம் எழுதுரோம்ன்னு சொல்றது இல்லையா ?//

புறா கால்ல தூது விட்டானே வரலியா செந்தில் அண்ணா/////////////

ஆமாம் செந்தில் புறாவை தூது அனுப்ப சொல்லி என்னிடம் கொடுத்தாரு நானும் வழக்கம் போல் ரோஸ்ட் பண்ணிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமாம் செந்தில் புறாவை தூது அனுப்ப சொல்லி என்னிடம் கொடுத்தாரு நானும் வழக்கம் போல் ரோஸ்ட் பண்ணிட்டேன் //

அது வெண் புறாவா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது