Horoscope

வெள்ளி, ஏப்ரல் 23

பதிவர்களை இணைப்பது எப்படி?

இப்போது பதிவுகள் படிப்பது தினமும் காபி குடிப்பது போல் ஆகிவிட்டது. ஆனால் நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளையே இருக்கிறோம். ஆம், நமக்கென்று ஒரு நண்பர்கள் வட்டம், நாம் அவருக்கு கமெண்ட் போடுவது அவர் நமக்கு கமெண்ட் போடுவது என முடித்துக்கொள்கிறோம்.


சில நல்ல பதிவர்களின் பதிவுகள்(சத்தியமா நான் இல்லை) படிக்க யாருமே இல்லாமல் கேட்பாரற்று போய் விடுகிறது. பிரபல பதிவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நிறைய ஓட்டுகள் விழுகிறது. தமிலிஷ் ல் முகப்பு பக்கங்களிலேயே அவர்களுடைய பதிவு வந்து விடுகிறது.

இங்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அனைத்து பதிவுகளையும் படிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ இல்லை. இதற்க்கு என்ன வழி. சங்கம் ஆரம்பித்தால் மட்டும் போதுமா? புதிய பதிவர்களுக்கு யார் ஆதரவு கொடுப்பது. மொத்தம் எத்தனை ப்ளாக்குகள் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல். சிலர் சினிமா பற்றியும், சிலர் அரசியல் பற்றியும், சிலர் கதைகளும் எழுதுகின்றனர். சிலருக்கு கதைகள் படிக்க பிடிக்கும். ஆனால் எத்தனை பதிவர்கள் கதை எழுதுகிறார் என்று அவருக்கு தெரியாது. சரி அவர் எப்படி கதை எழுதும் ப்ளாக்குகளை தேடி படிப்பது.

பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பேரை சந்திக்கிறோம், எத்தனை பேரின் ப்ளாக் முகவரி நமக்கு நியாபகம் இருக்கிறது?


ஏன், எப்படி, எதற்கு? ..

நான் பதிவர்களைப் பற்றியும், அவர்களின் blog Id, அவர்கள் எந்த விசயங்களை எழுதுகிறார்கள் என்பதை பற்றியும் தொகுத்து எழுதலாம் என இருக்கிறேன். இதற்க்கு உங்களுடைய சம்மதமும் வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிந்தால்தான் நான் மேலும் தொடர முடியும். உங்களுடைய பதில் என்ன?

7 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

ஓட்டு போட்டாச்சேய்...

அப்புறம் தலைவரே, உங்க ஆசையை இந்த ஃபோரமே நிறைவேத்துதே! நானே ஃபோரம் பார்த்துத் தான் வந்தேன்.

மேலும் பெரும்பாலான பதிவர்கள் ஒரே சப்ஜெக்டைப் பற்றி எழுதுவதில்லையே? கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொதுவானவை, அரசியல், நகைச்சுவை என்று கலந்து கட்டித்தான் எழுதுகிறார்கள். எனவே எழுத்தை வைத்து வகை பிரிப்பது சாத்தியமற்றதென்றே கருதுகின்றேன்.

Dr.Rudhran சொன்னது…

ஒப்புதல்

க ரா சொன்னது…

நல்ல முயற்சி ரமேஷ். வாழ்த்துக்கள்

Vidhoosh சொன்னது…

உதாரணத்துக்கு, நம்ம பா.ராஜாராம் அவர்கள் (கருவேல நிழல்கள்). போங்க, விருந்தோம்பலில் வீட்டையே மறந்துடுவீங்க.

Vidhoosh சொன்னது…

இது புதிதாக வரும் பலருக்கும் தோன்றுவதுதான். நல்ல எழுத்துக்கள் கவனிக்கப் படாமல் போவதில்லை. தொடர்ந்து எழுதுங்க, திரட்டிகளில் இணையுங்கள், உங்கள் interest-டுக்கு தகுந்த மாதிரி எழுதும் blogகளில் பின்னூட்டம் இடுங்க. வோட்டு, பிரபலம் என்பதெல்லாம் ஒரு passing phase மட்டுமே. நல்ல தரமான எழுத்துக்கு விளம்பரமே தேவை இல்லை, என்பது என் தாழ்மையான கருத்து.
wish you all the best.:)

Aba சொன்னது…

மிக அவசியமான முயற்சி.... கண்டிப்பாக முன்னெடுங்கள்.... வாழ்த்துக்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@விந்தைமனிதன்
நன்றி. எத்தனை பேருக்கு இந்த forum பற்றி தெரியும் என்று நினைகிறீர்கள்? நமது forum ல் உள்ள நண்பர்களின் எண்ணிக்கை 106 மட்டுமே. மொத்தமே 106 blog தான் இருக்கிறது என நினைக்கிறீர்களா? atleast ஒரு பதிவரின் அறிமுகமாவது கொடுக்கலாம் என நினைக்கிறன். அவ்வளவுதான்.

@நன்றி Dr.ருத்ரன்

@தேங்க்ஸ் ராம்ஸ்

@விதூஷ்
//நல்ல தரமான எழுத்துக்கு விளம்பரமே தேவை இல்லை, என்பது என் தாழ்மையான கருத்து//

நன்றி. Power soap, Rin, Lux சோப்புக்கு நீங்கள் சொன்ன மாதிரி விளம்பரம் தேவையில்லை. ஆனால் பொன்வண்டு, ஐடியல் மாதிரி சோப்புக்கு விளம்பரம் தேவைதான் எனன் நான் நினைக்கிறேன்.

@நன்றி கரிகாலன்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது