இதுவரைக்கும் பதிவுலகிலும், போரமிலும் காறி துப்பிக்கொண்ட டெரர் கும்மி குரூப் நண்பர்கள் சந்திப்பு கேவலமாக கோலாகலமாக கொடைக்கானலில் நிறைவேறியது. அங்கு பதிவுலகம் பற்றியும், அதை முன்னேற்றவும் மூன்று நாள் டிஸ்கசன் நடத்தினோம். கொடைக்கானல் போக ஐடியா தந்தது பண்ணியது மாலுமி-புரபஷனல் குடிகாரன்(இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்).
நரியை பார்த்ததும் தீக்குளிக்க முடிவு பண்ணிய ஜூனியர் அருண்
மாலுமி,பன்னி,நரி,செல்வா,நான்,(பின்னால்)அருண்,இம்சை பாபு
அடிக்கிற குளிரில் ஐஸ் கிரீம்க்காக காத்திருக்கிறோம். ஹிஹி
சென்னைல இருந்து வந்த நரி ஈரோட்டுல கோயமுத்தூர் ஸ்வீட்ஸ் போர்ட பார்த்து அதான் கோயமுத்தூர்ன்னு நினைச்சு இறங்கிட்டான். சந்தேக கேசுல மாட்டிக்கிட்ட நரியை ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஜூனியர் அருணும்,மாலுமியும் மீட்டுக்கிட்டு வந்தாங்க.ஈரோட்டு போலீஸ் நிலையத்தில் அடி வாங்கின பிறகு நரியின் தோற்றம்
கடுப்பான பன்னி நரியை போட்டு தள்ள முயன்ற போது(நரியை போட்டு தள்ளிட்டு பன்னியை ப்ளாக்மெயில் பண்ணலாமா?)
இம்சை பாபு,மாலுமி,நான்
அப்புறம் எல்லோரும் வெளில கிளம்புனோம். டிரைவர்தான் வண்டி ஓட்டினாரு. எல்லோரும் போறம்ல பேசிக்கிற மாதிரியே வாடா மச்சி அப்டின்னு உரிமையா பேசிக்கிட்டே வந்தோம். டிரைவர் கூட ரொம்ப வருஷ பிரண்டுன்னு நினைச்சிருப்பாரு. அப்பத்தான் மாலுமி நரிகிட்ட டேய் உன் பேரு என்னடான்னு கேட்டாரு. டிரைவர் வாழ்க்கையே வெறுத்து வண்டிய நிப்பாட்டிட்டு மலைல இருந்து கீழ குதிச்சிட்டாரு. அப்புறம் மாலுமிதான் வண்டி ஓட்டிட்டு வந்தார்.ஒருத்தன் என் பேரு பன்னிகுட்டின்னு சொல்றான். ஒருத்தன் என் பேரு நரின்னு சொல்றான். நான் கூட பயந்துட்டேன். ஏதாச்சும் zoo-குள்ள வந்துட்டமான்னு.
பின்ன உலக பொருளாதாரத்த பத்தியும், அரசியல பத்தியும், நாட்டு நடப்ப பத்தியும் சத்தியமா எதுவும் பேசலை. வழக்கம் போல மொக்கைதான். மறுநாள் செல்வா காலைல பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்குத்தான் வந்தான். கேட்டதுக்கு ஆபீஸ் போற நியாபகத்துல லேட்டா வந்திட்டதா சொன்னான்.
பண்ணும் ரொட்டியும் சாப்பிடும் பன்னிக்குட்டி
டிஸ்கி 1: பொதுமக்கள் நலன் கருதி(எத்தன தடவதான் கருதுறது) மாலுமி, இம்சை பாபு மற்றும் பன்னிக்குட்டியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது.
டிஸ்கி 2: இரவு பாத்ரூம் போறேன்னு மலை உச்சியில் ஏறி கீழே விழ இருந்த நரியை காப்பாற்றிய முருகன் என்ற நண்பருக்கு நன்றி. அவர்தான் ரெண்டுநாள் எங்களுக்கு சாப்பாட்டு செஞ்சு போட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா இன்னிக்கு நரிக்கு பால்தான்.
..