Horoscope

வியாழன், நவம்பர் 11

முத்து குளிக்க வாரீகளா!!!

பியர்ல் சிட்டி. முத்து நகரம். தூத்துக்குடிக்கு இப்படியும் அழகான பெயர் உண்டு. நான் ரெண்டு வருஷம் அங்கதான் படிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன். சார் இங்க துறைமுகத்துக்குள்ள ரெண்டு தீவிரவாதிங்க நுழஞ்சிட்டாங்க. சீக்கிரம் வாங்க அப்டின்னு. உங்களாலதான் அவங்கள பிடிக்க முடியும்ன்னு.

சரின்னு அவசர அவசரமா தூத்துக்குடி துறைமுகத்துக்கு போனேன். ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ராஜ மரியாதையோட($$$$$) துறைமுகத்துக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க எந்த தீராவியாதிகள் சீ தீவிரவாதிகள்னு கேட்டேன். அவங்க ரெண்டு பேரும் சரக்கு கப்பல்ல சரக்கடிச்சிட்டு உக்காந்திருக்காங்கன்னு சொன்னாங்க.
அப்புறம் பலத்த போராட்டம், ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகு இந்த சிரிப்பு போலீஸ் அந்த ரெண்டு தீவிரவாதிகளை பிடித்தேன். ஒருத்தர் கிட்ட பேர் என்னன்னு கேட்டா பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு டார்ச்சர் பண்றார். ஒருத்தர் என்னன்னா கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்லியே இம்சை பண்றார்.
ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால குழந்தைகள் பயப்படக்கூடாது(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 
 தீவிரவாதிகள் சரக்கடித்து கவுந்த சரக்கு கப்பல் 

 கப்பலின் ஒரு பகுதி..
 பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)
 கேப்டனின்(விஜயகாந்த் இல்லை) ரூம்
 கேப்டனின் ரூமிலிருந்து view  
 
தீவிரவாதிகளை பிடித்த வெற்றிக் களிப்பு..
ஒரு தீவிரவாதியுடன் நான் 
 கரையோரம் கப்பல் 
 கருத்து சொல்ல ஒண்ணுமில்லை..
 பர்மா கப்பல். அவங்க கொடி
 நான்தான். ஹிஹி
 கப்பலின் கேப்டன் ரூம் view
கண்டைனர் ஏரியா..
தீவிரவாதிகள்(நான் இல்லை) போலீஸ்க்கு  கொடுத்த ஸ்டில்..
அது சரி பிடிபட்ட தீவிரவாதிகள் எங்கன்னு கேக்குறீங்களா? கொஞ்சம் அதிகமா மாமூல் கொடுத்ததால விட்டுட்டேன். ஹிஹி

செவ்வாய், நவம்பர் 9

சிங்கப்பூர் பயணம் -1

கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது.

போயிட்டு வர்றேன் அப்டின்னு மங்குனிக்கு போன் பண்ணினா சிங்கப்பூர் போறியா சந்தோசம் அப்டின்னு ரிப்ளை வருது(போறியா சந்தோசம் திரும்பி வந்துடாதேன்னு அர்த்தம். போயிட்டு வரியா அப்டின்னு கேக்கலை). எல்லா பயலுகளும் கொலை வெறிலதான் அலையிறாங்க.

ஏர்போர்ட் போனதும் அங்க இமிகிரேஷன்ல உள்ள அம்மணி நான் வேலைக்கு போவதாக எண்ணி என்னிடம் கேட்க, நான் தீபாவளியை அக்கா மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட போவதாக சொன்னேன். உன் மூஞ்சிய பாத்தா குடும்பத்தோட தீபாவளி கொண்டாடுற மாதிரி தெரியலையே(அதுக்கு தனி மூஞ்சியா என்ன?). வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.

மூணு மாசத்துக்கு முன்னாடி வேலை தேடி போகும்போது விட்டுட்டாங்க. இப்ப சும்மா போகும்போது டார்ச்சர் பண்றாங்க.விட்டா நமக்கு இங்கயே தீபாவளி முடிஞ்சிடும்ன்னு பயந்து அப்புறம் ஆமான்னு சொல்லி எஸ்கேப்பு ஆகி வந்தேன். பிளைட் சரியான நேரத்துக்கு கிளம்பிடுச்சு.

காலைல ஆறு மணிக்கு சிங்கப்பூர் போய் சேர்ந்தேன். வீட்டுக்கு போய்விட்டு மதியம் லிட்டில் இந்தியாவுக்கு அக்கா குழந்தையுடன் போய் தீபாவளிக்கு தேவையான பொருள்கள் வாங்கினேன். சிக்கன் வாங்க ரெண்டு மணிநேரம் வரிசைல நின்னேன். எல்லா பயலுகளும் பாத்து கிலோ பதினஞ்சு கிலோ வாங்குறானுக.

அப்புறம் தீபாவளி அன்னிக்கு குடும்பத்தோட Sky Park(இதை பற்றி தெரிந்து கொள்ள அந்த லிங்க் கிளிக் பண்ணவும்) போனேன். 56 வது மாடிக்கு லிப்ட்ல போகும்போது அந்த பீலிங்கே சூப்பர். போட்டோ உங்கள் பார்வைக்கு...







































வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்..

ஞாயிறு, நவம்பர் 7

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் - தொடர் பதிவு

நம்ம நண்பர் அருண் பிரசாத் "எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்" தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் லிஸ்ட் இங்கே.

குரு சிஷ்யன்:

எல்லாம் ராஜ் டிவி உபயம். எல்லா பண்டிகைக்கும் ராஜ் டிவில  இந்த  படம் கட்டாயம் உண்டு. ரஜினி, பிரபு காமெடியில் பட்டைய கிளப்பிய படம். ரஜினியின் இங்கிலீஷ் இதில் டாப்பு. எனக்கு மிக மிக பிடித்த படம். ஓபின் அப்டின்னு அவர் சொல்ற ஸ்டைல் தனிதான்.

பிடித்த பாடல்: கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்
பிடித்த காட்சி: மனோரமா வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சி

தம்பிக்கு எந்த ஊரு:

ரஜினி காமெடியிலும் நடிப்பிலும் கலக்கிய படம். காதலின் தீபம் ஒன்று பாடலுக்கு அவர் நடந்து வரும் அழகே அழகு. நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து அவர் செய்யும் சேட்டைகள் செம காமெடி பட்டாசு.செந்தாமரையிடம் மாட்டிகொண்டு முழிப்பது ரகளை.

பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)
பிடித்த காட்சி: புக் படிக்கும்போது பாம்பு வரும்போது ரஜினியின் எக்ஸ்பிரசன்(இததான் டாக்டர் மதுர படத்துல, தனுஷ் யாரடி நீ மோகினில காப்பி அடிச்சிருப்பாங்க)

நெற்றிக்கண்:

அப்பா ரஜினியால் நாசமாக்கப்பட்ட சரிதாவை கல்யாணம் பண்ணி மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். இருதலை கொள்ளியாக அப்பா ரஜினி தவிக்கும் காட்சிகள் செம கலக்கல் . மகன் ரஜினியை விட அப்பா ரஜினி நடிப்பில் பிச்சி உதறி இருப்பார். அப்பாவி அம்மாவாக லக்ஷ்மி.

பிடித்த பாடல்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு..
பிடித்த காட்சி: சரிதாவை மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டு வரும்போது அப்பா  ரஜினியின் படபடப்பான நடிப்பு..

தர்மத்தின் தலைவன்:

இரண்டு ரஜினி. இரண்டாவதைவிட முதல் ரஜினி காமெடியில் கலக்கி இருப்பார். நியாபக மறதியால் அவர் பண்ணும் சேட்டைகள் காமெடி காக்டெயில். பிரபு,குஷ்பூ , ரஜினி, வீ.கே.ராமசாமி கூட்டணியில் நல்ல காமெடி படம். சில இடங்களில் போரடிக்கும்.

பிடித்த பாடல்: தென் மதுரை வைகை நதி
பிடித்த காட்சி: மறதியில் பக்கத்து வீட்டுக்கு போய் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு காசு கொடுக்கும் காட்சி...


அதிசய பிறவி:

இதுவும் காமெடி படம். ஒரு ரஜினி கோழை. இன்னொருத்தர் வீரன். கோழை இறந்தவுடன் வீரன் அந்த உடம்புக்குள் புகுந்து எதிரிகளை பந்தாடுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். சுதாகர் காமெடி வில்லனாக நடித்திருப்பார். என்ன கனகா, இன்னொரு ஹீரோயின் ரெண்டு பேருமே மொக்கை.

பிடித்த பாடல்: பாட்டுக்குப் பாட்டு எடுக்கவா...
பிடித்த காட்சி: எமலோகத்தில் வீ.கே.ராமசாமிக்கு சாபம் விடும் காட்சி(படு பேஜாரா இருக்குப்பா)

ராஜாதி ராஜா:

அப்போ எல்லாம் இரட்டை வேடம்னாலே ரொம்ப பிடிக்கும். பிடிச்ச ஹீரோவ  ஒரே ஸ்க்ரீன்ல ரெண்டா பாக்குறது அருமை.  இதும் வீரன், கோழை ரஜினிதான். அதுவும் கோழை ரஜினி கலக்கல். நதியாவின் அழகு ஜனகராஜ் காமெடி என கலக்கலான படம்.  மலையாளக் கரையோரம் பாட்டுல அவரோட ஹேர் ஸ்டைல் சூபெர்ப்.

பிடித்த பாடல்: மலையாளக் கரையோரம்
பிடித்த காட்சி: கோழை ரஜினி ஜெயிலில் பண்ணும் காமெடி...

வீரா:

முழு நீள காமெடி படம். ரெண்டு பொண்டாட்டிகாரன் கதைதான். விவேக், Y.G.மகேந்திரன் கூட்டணியை விட செந்தில், ரஜினி கூட்டணிதான் டாப். இந்த படம் பாண்டியராஜன் நடிக்க வேண்டியது என் விமர்சனங்கள் கூட வந்தது. ரோஜா, மீனா கூட்டணியில் இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள் கொண்ட படம். ரஜினி தி மாஸ் அப்டின்னு நிருபிச்சிருப்பார்.

பிடித்த பாடல்: மாடத்திலே கன்னி மாடத்திலே
பிடித்த காட்சி: கோவிலில் மீனாவுடன் திருமணமானதும் கோவந்தா கோவிந்தா என கத்திக்கொண்டு ஓடும் காட்சி...


நான் சிகப்பு மனிதன்:

இது ரஜினி படம். செம விறுவிறுப்பான திரைக்கதை. ஆனால் பாக்கியராஜ் வந்தவுடன் ரஜினிக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். பாக்கியராஜ் தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வார். இந்த படத்துல கோவை சரளா நல்ல பிகராக காட்சி அளிப்பதற்கு காரணம் என்னனு தெரியலை. ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர் விஜய் காந்தி தேசமே பாட்டுக்கு வருவார்.

பிடித்த பாடல்: பெண்மானே சங்கீதம்.
பிடித்த காட்சி: பாக்கியராஜ் கோர்டில் சாட்சி சொல்லும் காட்சி..

ராஜா சின்ன ரோஜா:

குழந்தைகளுக்காக ரஜினி நடித்த படம். சினிமா சான்ஸ் தேடி ரஜினியும், சின்னி ஜெயந்தும் சென்னை வந்து அடிக்கும் லூட்டிகள். அப்புறம் எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா காமெடி கலக்கல். குழந்தைகளுடன் கார்டூன் சாங்(ராஜா சின்ன ரோஜாவோட) அப்ப ரொம்ப பாபுலர். ஒலியும் ஒளியும்ல இந்த கார்டூன் பாட்டு போடுவானான்னு பாக்கவே உக்கர்ந்திருப்போம்.

பிடித்த பாடல்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..
பிடித்த காட்சி: குழந்தையை குளிக்க வைத்து கோவை சரளாவை கலாய்க்கும் காட்சி ..(இங்க ரஜினியின் ஸ்டைல் மார்வலஸ்)


ரங்கா:

ஒரு திருடனும் நல்லவனும் சந்திக்கும்போது, திருடன் திருடுவது நல்லது என்றும் நல்லவன் திருடுவது தப்புன்னும் பேசிக்கிறாங்க. திருடன் நல்லவன் பேச்சை கேட்டு நல்லவனாவும், நல்லவன் திருடம் பேச்சை கேட்டு திருடனாவும் மாறிடுவாங்க. அப்புறம் ரெண்டுபேரும் சேர்ந்து எப்படி வில்லனை அழிக்கிறாங்க அதான் கதை. ரஜினி இந்த படத்திலும் அசத்தி இருப்பார். இன்னொரு ஹீரோ கராத்தே மணி...

பிடித்த பாடல்: பட்டுக்கோட்டை நம்மாளு...
பிடித்த காட்சி: ரஜினி கராத்தே மணிக்கும் கராத்தே மணி ரஜினிக்கும் அட்வைஸ் பண்ணும் காட்சி...


அடுத்த தொடர் பதிவுக்கு இம்சை அரசன் பாபு மற்றும் வெறும்பயலை அழைக்கிறேன்.

செவ்வாய், நவம்பர் 2

தெரிஞ்சுக்கோங்க..banking ombudsman-அவசர செய்தி..

இது என்னுடைய நண்பர் பாலமுருகன் அவருடைய ப்ளாக் "துளித்துளியாய்" யில்  எழுதியது. அனைவருக்கும் தேவையான பதிவு என்பதால் அவருடைய அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.

"சமீபத்தில் எனக்கு HSBC  வங்கியுடனான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் கடனட்டைக்காக வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை சரியான தேதியில் செலுத்திட்டேன். அப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அது என்னான்னா visa card transfer பண்றப்ப 34 பைசா round off ஆகி HSBC அக்கவுண்ட்ல 34 பைசா கம்மியா credit ஆயிடுச்சு. இது மாதிரி ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ-க்கெல்லாம் பைசாவில குறைஞ்சா நானும் கண்டுக்க மாட்டேன், அவுங்களும் கண்டுக்க மாட்டாங்க. அதே மாதிரி இந்த தடவையும் 34 பைசா குறைஞ்சத நானும் கண்டுக்கல.
                                             
தற்செயலா HSBC ஆன்லைன் பேங்க்கிங்ல பார்த்தா 400 ரூபாய் ஃபைனும் 41 ரூபாய் சேவை வரியும் போட்டுருந்தாங்க. முதல்ல எனக்கு எதுக்காக ஃபைன் போட்டங்கன்னு புரியல. சரி என்னான்னு கேட்போம்னு வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு ஃபோன் போட்டேன். ஏன் ஃபைன் போட்டிங்கன்னு கேட்டேன். அவரும் கொஞ்சம் செக் பன்னி சொல்றேன் கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார். நானும் என்ன பிரச்சனையாயிருக்கும்ங்ற யோசனைல காத்திருந்தேன். 

அவரும் செக் பன்னிட்டு நீங்க சரியான தேதி கட்டிட்டிங்களான்னு கேட்டார். நானும் கட்டிடேன்னு சொன்னேன். அவரு திரும்பவும் செக் பன்ன நேரம் கேட்டார். நானும் காத்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு அந்த விசயத்த எங்கிட்ட சொன்னார். அத கேட்டதும் ச்சும்மா சுர்ர்ருன்னு கோபம் வந்துடுச்சு. விசயம் என்னான்னா அந்த 34 பைசா கட்டாததுக்குதான் 441 ரூபாய் தண்டம்னு. அந்த விசயத்த என்னால  சகிச்சிக்க முடியல. அவருகிட்ட 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம் போடுவிங்களான்னு கேட்டேன். 

அவரும் தப்பு உங்களோடதுதான், அதனால தண்டம் கட்டித்தான் ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார். நானும் கோபப்பட்டு அட்டையை உடனே ரத்து பண்ணிடுங்கன்னு சொன்னேன். அவரும் சரி பணத்த கட்டிட்டு ரத்து பண்ணிக்கோங்க அப்டின்னு  சொல்லிட்டார். நான் முடியாதுன்னு சொல்லிட்டு ஃபோனை துண்டிச்சுட்டேன். 
                                                                   
என்னால  சகிச்சிக்க முடியல. எதாச்சும் பண்ணனும்னு தோணுச்சு. பணத்த கட்டிடுடா, எதுக்கு பிரச்சனை, கட்டாட்டி அதுக்கும் ஃபைன் போடுவாங்க, பேசாம கட்டிடுன்னு ஏற்கனவே கடனட்டைல அடி பட்டவங்க சொன்னங்க. நானும் பாக்குறவங்ககிட்டல்லாம் புலம்பி தீர்த்துட்டேன்.
 
அப்படித்தான் நம்ம கதாநாயகன் கலப்பை பதிவர் அண்ணன் ஜெயக்குமார் கிட்டயும் புலம்பினேன். அவரு கோவையில் பொதுத்துறை வங்கில மேலாளரா இருக்காரு. அவருதான், தம்பி 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவரு, நீ இத சாதரணமா விட்ராத.முதல்ல HSBC லயே ஒரு புகார் அனுப்புவோம். சரிவாராட்டி banking ombudsman-ல புகார் பண்ணலாம்னு சொன்னார். 

நானும் அது என்ன banking ombudsman-னு கேட்டேன். அது இந்த மாதிரி அநியாயம் நடந்தா தட்டி கேட்க Reserve Bank of India-ல உள்ள ஒரு அமைப்புனு சொன்னார். நானும் எதாச்சும் செய்யனும்னு சொல்லிட்டு HSBC லயே ஒரு புகார் அனுப்பிட்டு பதில் வராததினால banking ombudsman-லயும் புகாரை பதிவு பண்ணினேன்.



http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=159

                                              
அதுக்கப்புறம் எல்லாமே வேகமா நடந்துச்சு. 441 ஃபைன ரத்து பண்ணிட்டங்க. ஃபோன் மேல ஃபோன் போட்டு மன்னிப்பு கேட்டங்க.மின்னஞ்சல்லயும் மன்னிப்பு கேட்டாங்க. RBI-ல இருந்து ஃபோன் பண்ணி எல்ல்லாம் சரியாயிடுச்சா இப்ப மகிழ்ச்சியான்னு கேட்டங்க. கேசை முடிச்சுடலாம்னு கேட்டாங்க. நானும் மகிழ்ச்சி. முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டேன்."

இது உபயோகமான தகவலா இருக்கும்னு நினைக்கிறேன். இனி இந்த டார்ச்சர் பண்ணும் பேங்க்காரங்க  கொட்டத்தை அடக்குவோம். தேங்க்ஸ் பாலா......

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்து இனிய தீபாவளியை கொண்டாடுவோம். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள் - சிங்கப்பூர்


ஒரு வாரமா சென்னைல மழை பெய்து ஊரெல்லாம், ரோடு எல்லாம் வெள்ளம். இன்னும் மழை வரும் என வானிலை அறிக்கை சொல்கிறது. அதே போல இந்தோனேசியாவில் காட்டுத்தீ பரவி அது சிங்கப்பூர் வரை பரவி விட்டது. ஆனால் அங்கு மழை இல்லை.

அதனால் சென்னையில் மழையை குறைக்கவும், சிங்கப்பூரில் மழை பெய்யவும் இளைய வருண பகவான், பதிவுலக விடிவெள்ளி, சிந்தனைச் சிற்பி சிரிப்பு போலீஸ் (சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்)அவர்கள் நாளை மாலை சிங்கப்பூர் செல்லவிருக்கிறார். அதனால் சென்னை மக்கள் யாரும் அழக்கூடாது என இந்த அறிக்கையில் தெரிவித்து கொள்கிறேன்.

அதே போல சிங்கப்பூர் மக்கள் எனக்கு அங்கே பேனரோ, மேல தாளங்களோ ஏற்பாடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.பதிவுலக நண்பர்கள் எல்லோரும் ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருங்க.

பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சிங்கப்பூரில் உள்ள பதிவுலக நண்பர்களை சந்திக்க விருப்பம்.சிங்கப்பூர் நேரப்படி Nov-4-2010, பத்து மணிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னுடைய நம்பர் 84373724 /25. இல்லையெனில் உங்கள் நம்பர் மெயில் பண்ணவும்-sgramesh1980@gmail.com
....

திங்கள், நவம்பர் 1

மங்குனியின் சுய சொரிதல்


ஒரு அமைச்சராக இருந்துகொண்டு மத்தவங்களுக்கு சுயசொரிதலைப் பத்தி பதிவு போட்டு ஒரு பதிவை தேத்திய மங்குனியின் சுய சொரிதல் பத்தி நீங்களும் தெரிஞ்சிக்கிடனும். ஊருக்குத்தான் உபதேசம் அப்டிங்கிற பழமொழியை உண்மை ஆக்கிய மங்குனியின் அராஜகம், சுயசொறிதல் உங்களுக்காக ஆதாரங்களுடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.(இதுக்குதான் பயபுள்ள ஜாமீன் எடுக்க போயிருக்குமோ?)

வந்தோரை வாழவைக்கும், அன்னம் கொடுக்கும் தமிழர் பண்பாட்டை மதிக்க தவறிய சுயநலமிக்க மங்குனியின் மறு பக்கத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது. பதிவுலகில் மிகவும் நேர்மையானவராக காட்டிகொள்ளும் பச்சோந்தித்தணத்தின் சாயம் வெளிறியது.



படம் சரியா தெரியவில்லை என்றால் ஜூம் பண்ணி பார்க்கவும். நடந்தது என்ன? நேற்று மதியம் சரியாக 1:33 மணிக்கு மங்குனி போரமில் "ஓகே ... இன்னைக்கு வீட்டுல மட்டன் பிரியாணி , போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங்  வரேன்" அப்டின்னு ஒரு கமென்ட் போடுறார்.

சரியாக 1:34 க்கு நான் கேட்டது "மங்கு அட்ரஸ் கொடு நானும் வரேன்". ஒரு தமிழனாக இருந்தால் சரி சாப்பிட வா என்று வந்தோரை வரவேற்க வேண்டும். அதை செய்யாமல் என்னை சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டி ஒரு பதிவாதிக்கவாதியாக  பதில் சொல்கிறார். வேறு வழி இல்லாமல் அதை நான் சென்சார் பண்ணி இருக்கிறேன்.

அவரை நம்பி நேத்து எனக்கு மதிய சோறு கூட கிடைக்கவில்லை. எனக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? பதிவுலகிற்கும், பதிவர்களுக்கும் எவ்ளோ பெரிய இழப்பு(?????). வேறு வழியில்லாமல் சூரியனின் வலை வாசல் சென்று பிளாக் டீ குடித்துவிட்டு வந்தேன். 

அதுவும் இல்லாமல் என்னை "புழல் ஜெயிலில் இருந்து உன்னைய எப்படி இன்னைக்கு வெளில விடுவாங்க?" என்று கேட்டு என் மனதை புண்படுத்துகிறார். நானும் அவரும் எவ்ளோ நாள் புழல் ஜெயிலில் இருந்தோம். நான் என்னைக்காவது வெளில சொல்லி அவரை அசிங்க படுத்தி இருப்பனா? சோ, நான் அவர் மீது மான நஷ்ட (இருக்கன்னு எல்லாம் கேட்கக் கூடாது) வழக்கு போடலாம்னு இருக்கேன்.

தயவு செய்து மங்குனியின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம். பதிவுலகை காப்போம். வருக வருக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தருக தருக ...
......

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது