Horoscope

ஞாயிறு, ஆகஸ்ட் 29

வாழ்த்துக்கள்

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:

டெரர்:

மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.

நிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.

டெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.

நிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.

டெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா?

நிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.

டெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.

அடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.

அனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா  அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.

நிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.

அனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.

நிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..

அடுத்து நம்ம jey கிட்ட வர்றாங்க..

ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.

நிருபர்: அய்யா சாமி ஆளை விடு..

அடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..

கோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...

நிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.

கோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: யார நிறுத்த சொல்லணும்?

கோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.

அடுத்து நம்ம வெங்கட்.

வெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே?

நிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.

வெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.

வெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.

நிருபர்:(அடப்பாவி) சொல்லுங்க சார்..

வெங்கட்:

அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
மக்கள் அனைவரும்
அனைத்து செல்வங்களும்
பெற்று பல்லாண்டு
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்.

நிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.

வெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..

நிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:

"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல " Suresh-னு " இருக்கும்.. என்னுதுல " Venkat-னு " இருக்கும்.. ( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )"

அடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.

அருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

வெள்ளி, ஆகஸ்ட் 27

எம் பி ஏ vs பி ஈ


ஒரு MBA Student -ம் ஒரு Engineering Student-ம் ஒரு கேம்புக்கு போறாங்க. அங்க ஒரு டென்ட் போட்டு தங்குறாங்க. இரவு நேரம் Engineering Student , MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.

அதுக்கு MBA Student "I see millions of stars" அப்டிங்கிறான். Engineering Student அவன்கிட்ட "வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்". அதுக்கு MBA Student சொல்றான்:

1 . (Astronomically) விண்வெளி ஆராய்ச்சிபடி பல லட்சம் அண்டமும் பல கோடி கோள்களும் இருக்கிறது
2 . (Astrologically) ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது
3 . (Time wise) நேரப்படி இது காலாண்டுக்கு மூன்றுமுறை தோன்றும்.
4 . (Theologically) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் படி கடவுளே பெரியவர், நாம் மிகச்சிறியவரே.
5 . (Meteorologically) வானிலை ஆராய்ச்சிப்படி நாளைக்கு நமக்கு ஒரு அழகான நாளாய் விடியும்.

MBA Student: சரி நீ இதை பத்தி என்ன நினைக்கிற?

Engineering Student (அமைதியான புன்னகையுடன்): (Practically) ங் கொய்யால நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கியே...


ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."

டிஸ்கி: எனக்கு இதை மெயிலில் அனுப்பிய நண்பர் பாபுவுக்கு(இம்சை அரசன் இல்லை) மிக்க நன்றி...தமிழாக்கம் மட்டும் நான் இல்லை. தமிழாக்கம் செய்த ரெண்டு பேரும் மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு மேடைக்கு வாங்க..

புதன், ஆகஸ்ட் 25

கல்லூரி

நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார். நான் பி.எஸ்.சி முதல் வருஷம் சேரும்போதுதான் எங்கள் கல்லூரி Co-Education ஆக மாறியது. நாங்கள்தான் முதல் Batch.


கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.

நிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.

This rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா?

Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.

இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்?

இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????

செவ்வாய், ஆகஸ்ட் 24

ஞாயிறு, ஆகஸ்ட் 22

நண்பனா அவன்??!!

பதினைந்து நாள் எங்க ஊர்ல இருந்துட்டு இன்னிக்கு காலைலதான் சென்னை வந்தேன். நான் வந்தது தெரிஞ்சதும் சென்னைக்கு ஒரே சந்தோஷம். இன்னிக்கு முழுவதும் ஆனந்த மழைதான்.(அது துக்க கண்ணீர் அப்டின்னு சின்னப் புள்ளத்தனமா யாரும் கமென்ட் போடக் கூடாது).

இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன். வீட்டுக்கு  போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது(போனதே அதுக்குதான). ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.

இடையிடையே பேசும்போது என் நண்பன் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி குட்டி குட்டி கதைகளை உதாரணமாக சொன்னான். என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்.

"என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி" அப்டின்னு சொன்னான். மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.

அதுக்கு அவன் தர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருக்கலாம். நண்பனா அவன்? என்னை இப்படி அவமானப் படுத்தி இருக்க கூடாது. என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படியா அசிங்கப் படுத்துவான். அவன் என்ன பண்ணினான் தெரியுமா?

.
.
அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது ஒரு இங்கிலீஷ் கதை புத்தகம். புத்தகம் கொடுத்தானே. எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...

(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. நாங்கெல்லாம் நேர்மையானவங்க. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவோம். VAS காரங்க மாதிரி ஒண்ணுமே தெரியலைன்னாலும் Steven Spielberg, ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு ஓவர் சீன் போட மாட்டோம்)

செவ்வாய், ஆகஸ்ட் 17

நூத்துக்கு நூறு

நேத்து அருண் மற்றும் டெரர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 98 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).

கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவையும் போட்டாச்சு. அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம டெரர் மற்றும் Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)

நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம். இதுக்கு VAS சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். டெரரை  பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு  பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!

என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:

டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......

..

திங்கள், ஆகஸ்ட் 16

Process Engineer-ன் திருமண அழைப்பிதழ்

எனக்கு மெயில்ல  வந்த திருமண அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு...

எப்படி இருக்கு?????

வியாழன், ஆகஸ்ட் 12

ஒரு கூடை பல்ப்

என்னோட அண்ணன் பொண்ணு MBA படிச்சிக்கிட்டு(ஹாஸ்டல்) இருக்கும்போது அவளை பாக்குறதுக்காக போகலாம்னு பிளான் பண்ணினேன். என்னை சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள்.

அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன். வாங்கப்பா அன்னிக்கு லீவ். என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.

சரி அவளோட Friends-சையும் பாத்து பேசிட்டு வருவமேன்னு அன்னிக்கு காலைல நல்ல குளிச்சிட்டு(இன்னிக்காவது குளிச்சியே), நல்லா ஷேவ் பண்ணிட்டு சென்ட் எல்லாம் போட்டுட்டு இப்ப இருக்குற அழகை விட  ஒரு படி மெருகேத்திட்டு  என் அண்ணன் மகளை பார்க்க (அவ Friend-சை பாக்கன்னு                      ஜொள்ளு) ஹாஸ்டல் போனேன்.

என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்., என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்). இப்ப வருவாங்கப்பா அப்டின்னு அவ சொல்ல மறுபடியும் பேசிக்கிட்டு இருந்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க. வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"

என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா?  ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க. ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

இருந்தாலும் நம்ம வள்ளுவர் சொன்ன வேதவாக்கை மனசுல வச்சிக்கிட்டு வீடு திரும்பினேன். வள்ளுவர் என்ன சொன்னார்ன்னா...

உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை  நேசி. அவளது தோழிகளை அல்ல..
.
.

திங்கள், ஆகஸ்ட் 9

பதிவுலகில் நான் ஒரு...

நம்ம அருண் போன வருஷம் இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டார். கொஞ்ச நாளா என்னால எழுத முடியலை. Ink வேற காலி ஆயிடுச்சு. புது ink London-ல ஆர்டர் பண்ணி இன்னிக்குதான் கிடைச்சது. அதான் உடனே Ink காயுரதுக்குள்ள இந்த பதிவ எழுதுறேன். 

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சிரிப்பு போலீஸ் 

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் ரமேஷ் என்கிற ரொம்ப நல்லவன். ஒரு தடவை போலீஸ் ட்ரைனிங் போயிட்டு வரும்போது சக நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டு வந்தேன். போலீஸ் ட்ரைனிங் வந்துட்டு இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே நீங்க என்ன சிரிப்பு போலீசா அப்டின்னு ஒருத்தர் கேட்டார். அதுவே என் ப்ளாக் பெயர் ஆயிடுச்சு(ஷ்ஷ்ஷ்).

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

இருக்குற வேலைய விட்டுட்டு சிங்கபூர்ல வேலை தேடி போனேன். அங்க போனத்துக்கப்புறம் பகல்ல ரொம்ப போர் அடிச்சது(தமிளிஷ் பக்கம் தேயுற அளவுக்கு எல்லோர் பதிவையும் படிச்சிட்டு கமெண்ட் போட ஆரமிச்சேன்). கமென்ட்டே இவ்ளோ அழகாவும் அருமையாகவும், மிக சிறப்பாகவும் போடுறீங்களே நீங்க பதிவு எழுதினா எப்படி இருக்கும்ன்னு "கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும்" "கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்" அன்பு தொல்லை கொடுத்ததால் எழுத ஆரமித்தேன்.

அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் வேலாயுதம் டீவீடி அனுப்புறேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அதுக்குதான சிங்கப்பூர் போனேன். அங்க உள்ள chinese , malasiyan எல்லோரும் என் பதிவை மொழி மாற்றம் செய்து படிக்கிற அளவுக்கு ஆள் வேர்ல்ட் மார்க்கெட்டிங் செய்தேன். அதில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. பின்ன வேர்ல்ட் பேங்க்ல கடன வாங்கி விளம்பரம் பண்ணினேன்.

சன் டிவில கூட என் ப்ளாக் பத்தி விளம்பரம் பண்ணறேன்னு சொல்லி கெஞ்சி கேட்டாங்க. அவங்க இருபது சேனல்லையும் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ விளம்பரம் போட்டு கொல்லுவாங்களே. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு ஆச்சே. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க. அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அதான் சொன்னனே விளம்பரத்துக்கே இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. அதெல்லாம் திரும்பி எடுக்க வேணாமா? Jey அண்ணன் ரெண்டு மில்லியன் தரேன்னு சொல்லிருக்கார். (கீரிப்பிள்ளையை வச்சு ஷோ நடத்தி அதுல வர்ற வருமானத்துல என் கடனை அடைக்கிறேன்னு  சொல்லிருக்கார்).

அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார். நம்ம காயத்ரி அக்கா தமிழ் டியூஷன் எடுத்து அதுல வர்ற காச தர்றேன்னு சொல்லிருக்காங்க. நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார். இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றே செய். இன்றே செய்  அதுவும் நன்றே செய் அப்டின்னு எங்க ஆயா சொல்லிருக்காங்க. அதனால நான் ஒருவன் நமக்கு ஒரு ப்ளாக். இதுதான் நம்ம பாலிசி(க்கும் ஒரு ப்ளாக்குக்கே விரட்டி விரட்டி கும்முறாங்க. இதுல இன்னொன்னு வேறயா?)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நிறைய பேர் இருக்காங்க. பில் கேட்ஸ், ஒபாமா, ஒசாமா பின் லேடன், மம்மூட்டி, அமிதாப் இன்னும் நிறைய(நீங்க தமிழ் பதிவு மட்டும் படிச்சா நான் என்ன பண்றது. எனக்கு உலகத்துல உள்ள எல்லா மொழியும் தெரியும் அப்டின்கிறதினால எல்லா மொழி ப்ளாக்கையும் படிப்பேன். யாராவது google translator use பண்ணி வேற மொழில கமெண்ட் போட்டா பிச்சிபுடுவேன்)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

thecandideye இவர்தான் எனக்கு முதல் கமென்ட் போட்டவர். முதன் முதலில் தொலைபேசியில் பேசி என்னை வாழ்த்தியது கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் தான். அப்புறம் வெங்கட். மற்றும் தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி.

நேத்து ஒபாமா கூட பேசும்போது கடந்த ரெண்டு வாரமா நான் சரியா பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.  

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் ரொம்ப நல்லவங்க. Actual-லா எனக்கு தமிழ் மொழி வளர்க்கணும்ன்னு ஆசைங்க. நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.
.

சனி, ஆகஸ்ட் 7

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்

1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

3 )  அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.

4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..

5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.

7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.

10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.

திங்கள், ஆகஸ்ட் 2

மகிழ்ச்சியான தருணம்

சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல்ல இருந்து பழகியாச்சு. அதுக்கப்புறம் வேலைக்காக சென்னை வந்து எட்டு வருஷம் ஓடிப் போச்சு. படிக்கிற காலத்துல தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு போய் அம்மா அப்பா அக்கா கூட பண்டிகையை கொண்டாடுவேன்..

சென்னை வந்த பிறகு தீபாவளி பொங்கல்னா ஊருக்கு போறதுக்கு டிக்கெட் கிடைக்காம unreserved ல ஏறி ஊருக்கு போவேன்.  இப்ப unreserved ல கூட ஏற முடியாத அளவுக்கு கூட்டமாயிடுச்சு.அதனால் ஊர் அக்கம் போறதுகூட குறைஞ்சு போயிடுச்சு.

அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைல இருந்ததால அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியலை. ஆனா இப்ப ரெண்டு பேரும் retired ஆயிட்டதால அவங்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து என்னோட தங்க வச்சிருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன்.

என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான்.

சனி, ஜூலை 31

கடவுள் என்னும் தொழிலாளி

ஒரு வாரம் கொஞ்சம் ஆணி அதிகம்ன்னு லீவ் லெட்டர் கொடுத்துட்டு போனாலும் அருண் என்னடான்னா Biodata போடுறேன்னு மிரட்டுறார். நம்ம ஜெய் அண்ணன் அரச மரத்தடில பூக்குழி இறங்குவேன்னு மிரட்டுறார். வெங்கட் VAS சங்கத்தை கலைச்சிடுவேன்னு அடம் பிடிக்கிறார். சரி இவ்ளோ பேர் கூப்பிட்டும் வரலைன்னா என்ன ஆகுறது அப்டின்னு முடிவு பண்ணி வந்து சேந்துட்டேன்.

போன வாரம் முழுவதும் டாக்ஸி பயணம்தான். நிறைய மனிதர்களை சந்திக்க நேரிட்டது. நான் இன்று சந்தித்த டாக்ஸி டிரைவரை வாழ்க்கைல என்னால் மறக்க முடியாது. இன்னிக்கு காலைல ஏழு மணிக்கு டாக்ஸி புக் பண்ணி இருந்தோம். அந்த டிரைவருக்கு 74 வயது ஆகிறதாம்.

இந்த வயதிலும் உழைக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட். ஆனால் பயணத்தின் போது அவருடன் பேசும்பொழுது மனதுக்கு சந்தோசம் இல்லை என்பதுதான் உண்மை.

அந்த டிரைவரிடம் எப்படி இந்த வயசில் உழைக்க முடிகிறது எத்தனை குழந்தைகள் என்று கேட்ட போது அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இருவரும் இறந்து விட்டதாகவும் தன மனைவியுடன் தனியாக வாடகை வீட்டில் இருப்பதாகவும் கூறினார். அதற்க்கப்புறம் சில நிமிடங்களுக்கு அவருடன் எதுவும் பேச முடியவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்த புதிதில் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து நிறையா சம்பாதித்ததாகவும் கூறினார். அப்புறம் என்ன வாடைகை வீட்டில் இருக்குறீர்கள் சொந்தமா ஒரு வீடு வாங்கிருக்கலாமே என்று கேட்டோம். அதற்க்கு அவரிடம் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் தான் பதில். அதற்க்கு அப்புறம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

அதற்க்கு அப்புறம் அவரே பேச ஆரமித்தார். வெளிநாட்டில் சம்பாதித்த  பணத்தில் அவரது பொண்ணையும்,பையனையும் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து நல்ல வீடு கட்டி ஆளுக்கு ஒன்னும் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த நன்றி கேட்ட ஜென்மங்கள் சொந்த அப்பா அம்மா என்று கூட பாக்காமல் அவர்களிடம் இருந்த எல்லாத்தையும் பிடிங்கி விட்டு அவரை சரமாரியாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கிறார்கள். சொந்த அப்பாவை அடிக்கிற அளவுக்கு அவர்களுக்கு இந்த மனநிலை எப்படி வந்தது?

ஆனாலும் வேற எந்த வழியிலும் போகாமல் இந்த 74 வயதில் மனம் தளராமல் தனக்காகவும், தன மனைவிக்காகவும் உழைக்கும் இந்த கடவுள் என்னும் தொழிலாளியை நாம் வாழ்த்தி வணங்குவோம்.

இரவு ஏழு மணிக்கி பயணம் முடிந்து எங்களை இறக்கி விட்டு விட்டார். பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.

செவ்வாய், ஜூலை 27

மிக மிக சந்தோஷமான செய்தி


 As I suffering from lot of "AAAAANEEEEEEEEEEEEEES". So I am unable to read/write blog next one more week(என்ன ஒரு சந்தோஷம்). So enjoy one more week. I think i will get 100 votes for this post.
அய்யோ அய்யோ ..

வெள்ளி, ஜூலை 23

தியேட்டர் நொறுக்ஸ்-1

Title-க்கு ஜெட்லி மன்னிக்கணும்

இப்பெல்லாம் நினைச்ச உடனே online -ல டிக்கெட் புக் பண்ணி ஈசியா போய் படம் பாத்துட்டு வந்துடுறோம். அதுல நமக்கு ஒரு நிம்மதி இருக்கா அப்டின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்(வாரத்துக்கு நாலு மொக்கை படம் பார்த்தா அப்படித்தான் இருக்கும்). அந்த காலத்துல தியேட்டர்ல படம் பாக்குறப்ப படத்தோட சேர்த்து சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கும்.  இப்பெல்லாம் அது இல்லை. தியேட்டருக்கு போனமா வந்தமான்னு தான் இருக்கோம்(பின்ன அங்க என்ன ரூம் போட்டு சாப்பிடவா முடியும்).

கவுண்டர்:

முன்னெல்லாம் அப்படி இல்லை. முதல்ல கவுண்டர்ல உள்ள queue ல போய் நிக்கணும். அப்புறம் டிக்கெட் எடுக்கணும்(என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு). கவுண்டர் பாத்தீங்கன்னா பெரிய சுரங்கப்பாதை மாதிரி புல் இருட்டாவும் வளைஞ்சு வளைஞ்சு நாலைஞ்சு row  வாகவும் இருக்கும். இரும்பு கம்பி போட்டிருப்பாங்க.

கவுண்டர் ஆரமிச்சு டிக்கெட் கொடுக்குற இடம் வரைக்கும் ஒரு அரை கிலோ மீட்டராவது இருக்கும். கூட்டமா இருந்தா டிக்கெட் கொடுக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே இந்த கவுண்டருக்குள்ள போய் நின்னுடுவோம். டிக்கெட் எடுத்து வெளில வர்றதுக்குள்ள மன்னன் பட ரஜினி மாதிரி ஆயிடுவோம்.

கவுண்டருக்குள்ள ஒரே ஒரு மஞ்ச லைட்தான் எரியும். அத்தனை row க்கும் சேர்த்து ஒரே லைட்தான். இரவு காட்சி போனோம்னா டிக்கெட் எடுக்குற வரைக்கும் ஒரே திக் திக் தான். பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).

இதுல சில பேரு நம்ம தலைல ஏறி முன்னேறி போவாங்க(நம்மளால சில பேரு முன்னேறி போறாங்கன்னு மனச தேத்திகிட வேண்டியதுதான்). பெரிய சண்டையே நடக்கும். அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப் போறது யார்ன்னு கூடத் தெரியாது. சில நேரம் நம்ம நெருங்கின சொந்தகாரனா கூட இருக்கும்.

தரை டிக்கெட்(நான் இல்லைங்கோ)

அப்புறம் டிக்கெட்ல மூணு வகை உண்டு. chair ,பெஞ்ச்,தரை. Chair டிக்கெட் எல்லாம் பணக்காரங்க உக்கார்றது அப்டின்னு ஊர்ல ஒரு நினைப்பு. உண்மைதான். வசதியானவங்கதான் Chair டிக்கெட் எடுத்து வருவாங்க.

நமக்கெல்லாம் பெஞ்ச் இல்லைனா தரைதான். பெஞ்ச் டிக்கெட் எடுத்தா நம்ம வீட்டுக்கு மூட்டைப் பூச்சிகள் இலவசம். அதனால தரை டிக்கெட்லதான் படத்துக்கு கூட்டிட்டு போவாங்க.

இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். (ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).

Wallpapper:

அப்புறம் wallposter . தியேட்டர்ல ஒரு இடத்துல படத்தோட காட்சிகளை ஒட்டி இருப்பாங்க. முதல்ல போய் அதத்தான் பாப்போம். இடைவேளைல மறுபடியும் பாத்துட்டு இந்தஇந்த  காட்சிகள் முடிஞ்சிடுச்சு. இந்த காட்சிகள் எல்லாம் இனிமே வரும் அப்படின்னு discuss (ஆமா பெரிய Group Discusstion) பண்ணுவோம். சில காட்சிகள் படத்துல வரலைன்னா தியேட்டர் operator -யை திட்டுவோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டானே அப்டின்னு. 

அப்புறம் ஷீல்ட். எந்த எந்த படம் எவ்ளோ நாள் ஓடிருக்குன்னு ஷீல்ட் அங்க வச்சிருப்பாங்க. அத பாக்குறதுல ஒரு அலாதியான சந்தோஷம். எத்தன தடவ அதே தியேட்டருக்கு போனாலும் அந்த ஷீல்ட திரும்ப திரும்ப பாப்போம்.

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்..


......

வியாழன், ஜூலை 22

ஆணீணீணீணீணீணீ

ரெண்டு நாளா ஊர்ல இல்லை(எவ்ளோ சந்தோசம்). என்னோட பேங்க் அக்கவுன்ட் லாக் ஆயிடுச்சு. அதை enable பண்றதுக்கு பேங்க்ல கேட்டா நீங்க நேர்ல வரணும்னு சொல்லிடாங்க(அக்கவுன்ட் ஆரமிக்கும்போது நான் சாதாரண ஆள். இப்ப நான் பிரபல பதிவர் ஆயிட்டதால என்னை பாக்கனும்னு வர சொல்லிருப்பாங்களோ?).

பேங்க் போனா என்னை அலைய விட்டுடாங்க. ஒருத்தர போய் பார்த்தா அவர் "நான் அவன் இல்லை" நீங்க போய் அந்த officer -ர போய் பாருங்க அப்டிங்கிராங்க. அவர போய் பார்த்த அவர் இன்னொருத்தருக்கு redirect-பண்றாரு. ஒரு வழியா மூணு மணி நேரத்துல வேலை முடிஞ்சது. (ஒரு பிரபல பதிவருக்கே இந்த நிலைமையா?)

மொபைல் வழியா எப்படி கமென்ட் reply மற்றும் பப்ளிஷ் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்த "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" அவர்களுக்கு நன்றி. என்னோட போன பதிவுல கமென்ட் போட்டதுக்கும் அவருக்கு உதவி செய்த மற்றும் செய்யப்போகும் அனைவருக்கும் நன்றி.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" அப்டின்னு ஒரு பதிவு போட்டேன். அது எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ். ஆனா அது ஏற்கனவே நிறைய ப்ளாக்-ல வந்துடுச்சுன்னு நம்ம அருண்பிரசாத் சொன்னதால அதை delete பண்ணிட்டேன். பின்ன யாராவது என்னை திருட்டு பயலே அப்டின்னு சொல்லிடுவாங்களே.

அந்த பதிவுக்கு கமென்ட்,ஓட்டு  போட்ட அனைவருக்கும் தேங்க்ஸ்.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ்:


1 ) Kousalya உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


என்னத்த சொல்ல... ம் ம் ...யோசிச்சு பார்த்தால்..... சரிதான்னு தோணுது....!


2 ) வெங்கட் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"
// போன போஸ்ட்டுக்கு reply பண்ண முடியவில்லை. "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" தான் மொபைல் வழியாக reply பப்ளிஷ் பண்ண உதவி செய்தார். அவருக்கு மிக்க நன்றி. //




யாராவது தஞ்சாவூர் கல்வெட்ல நம்மள பத்தி செதுக்கும் போது.. இந்த Matter-ஐயும் சேர்த்துக்கோங்கப்பா..
---------------------
சும்மா.., சும்மா நீங்க பொண்ணுங்ககிட்டயே வம்புக்கு போயிட்டு இருக்கீங்க...இதையே Continue பண்ணுனீங்க..அப்புறம் கூடிய சீக்கிரம் என் தலைமையில ஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..ஜாக்ரதை..


3 ) அருண் பிரசாத் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்
@ வெங்கட் //என் தலைமையிலஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..//ஆமாம் ஜாக்கிரதை ரமெஷ், கண்டன போரட்டத்தில் வழக்கம் போல நம்ம வெங்கட், கோகுலத்தில் சூரியன் வெங்கட், VAS தலைவர் வெங்கட் இப்படி பலர்(?!) எதிர்ப்பாங்க கட்சில இருக்குற்தே ஒரு ஆளு இதுல கண்டன ஆர்பாட்டம் வேற.




@ ரமெஷ் நீ கலக்கு சித்தப்பு, பாத்துக்கலாம்


4 ) dheva உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


தம்பி......ரமேசுசுசுசு! ஆராய்ச்சி அமர்க்களமப்பு.....ஏன் இப்புடி...! சிரிப்பு போலிஸ்...எல்லா வேலையும் பாக்குது ஹா..ஹா..ஹா..!

டிஸ்கி: சரி இதுக்கு ஏன் இவ்ளோ விளம்பரம், ஏன் இப்படி மொக்கை போடுற, இந்த பதிவுக்கு ஏன் "ஆணீணீணீணீணீணீ" ன்னு தலைப்பு வச்சிருக்கேன்னு கேக்குறீங்களா? நான் ஊர்ல இல்லைங்கிரதினால எஸ்.எம்.எஸ் ஜோக் போட்டு ஒரு பதிவ ஓட்டிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம அருண் அது ஏற்கனேவே வந்துடுச்சுன்னு சொல்லிட்டார். அதான் அதை Delete பண்ணிட்டு இப்படி ஒரு மொக்கை பதிவு.

 ஆணி அதிகம்னால புது போஸ்ட் இப்ப போட முடியல(யார் கேட்டா?).

செவ்வாய், ஜூலை 20

ராகிங் அரக்கனால் செத்து பிழைத்த மாணவர்

இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப் படித்ததும் மனம் கலங்கிவிட்டது. வாங்களேன் நண்பர்களே. நம்மளால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

சிவகங்கை:ராகிங் கொடுமையில் சிக்கி மறு பிறவி கண்ட இன்ஜினியரிங் மாணவர் சோபன்பாபு (21), சிகிச்சை, கல் விக்கு உதவிக்கரங்களை எதிர்நோக்கியுள்ளார். இவரது தந்தை செல்வம், சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், முதல் ஆண்டு படித்தார்.


கடந்த 2009 அக்., 22 ல், இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்து,மாடியில் இருந்து தள்ளி விட்டனர்; முதுகு தண்டுவட எலும்பு, கால் முறிவு; நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து அக்., 25 ல், தினமலர் இதழில் செய்தி வெளியானது.கோவை, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, இடுப்புக்கு கீழ் செயல்படாத நிலையில் வீட்டில் உள்ளார். தொடர் சிகிச்சை, படிப்புக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர், கூறியதாவது: சிகிச்சைக்கு பின் சுயநினைவு வந்த போது மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தேன்.

இதுவரை ஐந்து லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. பிளஸ் 2 ல், 1160 மதிப்பெண் எடுத்தேன். எதிர்கால கனவுகளுடன் கல்லூரியில் சேர்ந்த 44 நாள்களில் இந்த சோகம் நிகழ்ந்தது. ஒரு டி.எஸ்.பி., தலைமையிலும், அண்ணா பல்கலை சார்பிலும் குழுவினர் விசாரித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்துடைப்பு நாடகம் நடக்கிறது. இடுப்பு, காலில் தினமும் "பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்னால் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என எதிர்பார்த்து சிரமப்பட்டு படிக்க வைத்தனர்.

தற்போது குடும்ப சூழல் மோசமாகி வருகிறது.ஒரு சில மாதங்களில் எழுந்து நடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன். உரிய சிகிச்சையும் தேவைப்படுகிறது. இதற்கு உதவிக்கரம் நீட்டினால், தொடந்து படித்து குடும்பத்திற்கு உதவுவேன் என்றார்.உதவ முன்வருவோர், "98436-51708, 98431-17594' என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், ஜூலை 19

திருட்டு பயலே

இதனால உலக மக்கள் அனைவருக்கும் சொல்லிகொள்வது என்னவென்றால் இனிமேல் நான் எழுதுற பதிவ மொக்கை, குப்பை, தேறாது, பிளேடு அப்டின்னு உக்காந்துகிட்டு ,நின்னுகிட்டு, படுத்துக்கிட்டு உருண்டுகிட்டு சொல்றவுங்க இதோட நிறுத்திகிடனும்.

நம்மள ஒரு சுஜாதா,ராஜேஷ்குமார், பிரபஞ்சன் மாதிரி நினைச்சு நான் எழுதுன பதிவ ஒரு பயபுள்ள காப்பி பண்ணி அதோட பதிவுல போட்டிருக்கு. மொக்கையா இருந்தா யாராவது திருடுவாங்களா? அப்ப நான் நல்லாதான எழுதுறேன். அதனாலதான் சொல்றேன். மொக்கை பதிவுன்னு கமெண்ட் போடுறத இதோட நிறுத்திகிடுவோம்.

இல்லன்னா பெரிய பெரிய விளைவுகளை நீங்க சந்திக்கணும்(உன் பிளாக்க படிக்கிறதா விடவா).

என்னோட பதிவு:

http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post_14.html

திருடின பதிவு:

http://www.eegarai.net/-f5/-t34583.htm

இதுவே நம்ம தம்பி ஜில்தண்ணி அவரோட பதிவுல சொல்லித்தான் தெரியும். இன்னும் எத்தனை பேரோட பதிவ சுட்டிருக்கனோ இந்த பய raj001. சரின்னு அந்த பதிவ எடுக்க சொல்லி கமெண்ட் போட்டேன். அந்த தம்பியும் உடனே எடுத்துட்டான்(பதிவ இல்லைங்க, கமாண்ட எடுத்துட்டான்)

இத நம்ம Jey அண்ணன் கிட்ட சொன்னதும் டென்சனாகி மறுபடியும் ஆளுக்கொரு மிரட்டல் கமெண்ட் செந்தமிழில் போட்டோம். அவ்ளோதான் அடுத்த கமெண்ட் போடுறதுக்குள்ள எங்களோட அக்கவுன்ட லாக் பண்ணிடாங்க. அந்த "error message" என்னனு கீழ பாருங்க.

திருடி போட்டது நல்ல பதிவாம். ஏன்னு சொந்தக்காரன் கேட்டா அது அநாகரீக பதிவாம். என்ன கொடுமை சார் இது?

சரி அவனுக்கு விவரம் பத்தல. என்னோட பதிவ திருடுறதுக்கு பதில் எங்க அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் பதிவ திருடி போட்டிருந்தேன்னா உனக்கு மதுமிதான்னு ஒரு அழகான அன்பான பாசமான சூப்பரான பொண்ணு லவ் லெட்டர் அனுப்பிருக்கும். நீயும் லைப்ல செட்டில் ஆயிருக்கலாம். விவரம் பத்தலையே.

அடுத்த தடவ திருடும்போது என்கிட்டே ஐடியா கேளு. யார் யார் பதிவு திருடினா என்ன நன்மைகள் கிடைக்கும்னு சொல்றேன். ஓகே வா?

கடைசியா அந்த வெப்சைட் owner தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கார். அவர் மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னால இந்த திருட்டு பதிவ எடுத்திருக்கணும். அப்புறம் என்னோட அக்கவுன்ட enable பண்ணிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா அவர பாராட்டி இருக்கலாம். இந்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் அப்படி எதுவும் நடக்கல.

ஒருவேளை நீங்க படிக்கும்போது அந்த பதிவு காணாமல் போகலாம். அத நான் போட்டோ-வா போடுறேன் கீழே:

ஞாயிறு, ஜூலை 18

டிராபிக் போலீஸ்

நான் பிறந்தது நகரத்துல ஆனாலும் வளர்ந்தது எல்லாம் கிராமத்துலதான். அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. ஏதாவது லீவுக்கு ஊருப்பக்கம் வந்தா உண்டு. அப்பெல்லாம் எங்க வீட்டுல டூ வீலர் எல்லாம் கிடையாது.

அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்டு ஊர சுத்துவோம். அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன்ஸ் கிடையாது. இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை.

அப்புறம் காலேஜ் படிக்கும்போது சொந்த ஊருக்கு வந்துட்டோம். அது சிட்டி அப்டின்கிறதினால ட்ராபிக் போலீஸ் எல்லாம் மீட் பண்ண வேண்டியதாய் போச்சு. நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்பனோட டூ வீலர் எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம டிராபிக் போலீஸ் கைய காட்டினாரு. நமக்கென்ன லிப்ட் கேக்குறாரு போலன்னு ஸ்டைல்-லா வண்டிய நிப்பாட்டினேன்(நீ என்ன பண்ணினாலும் ஸ்டைல்-தான் விட்ரா விட்ரா). அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் கீழே.

போலீஸ்: லைசென்ஸ் எடு.

நான்: (நான் கிராமத்துலயே இருந்துட்டதினால லைசென்ஸ் பத்தி தெரியாதே) அப்டின்னா என்ன சார்?

போலீஸ்: (நான் நக்கல் பண்றதா நினைச்சிகிட்டு) என்ன நக்கலா ஒழுங்கா லைசென்ஸ் எடு.

நான்: சார் சத்தியமா லைசென்சுன்னா என்னன்னு எனக்கு தெரியாது.

போலீஸ்: சரி ஆர்.சி புக் எடு

நான்: அப்டின்னா?

போலீஸ்: இன்சூரன்ஸ்?

நான்: சத்தியமா இல்லை சார்

போலீஸ்: (செம கடுப்பாகி) ஏய் என்ன விளையாடுறியா. எதுவுமே இல்ல என்ன தைரியத்துல வண்டி ஓட்டிகிட்டு வர்ற?

நான்: சார் பகல்ல வர்றதுக்கு என்ன பயம் சார்?

போலீஸ்: டேய் (கடுப்புல மரியாதை குறைஞ்சிடுச்சு) என்ன நக்கலா? எந்த ஊர்டா நீ?

நான்: (நான் வளர்ந்த கிராமத்து பேரை சொன்னேன்)

போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா).

நான்: ஆமா சார்

போலீஸ்: அதான பார்த்தேன். தம்பி இங்கெல்லாம் வண்டி ஒட்டுறதுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க. அத வச்சிதான் ஓட்டனும்.

நான்: அது இல்லைனா வண்டி சரியா ஓடாதா சார்?(எனக்கு அப்போ லைசென்ஸ்னா ஏதோ வண்டில மாட்டுற பொருள் அப்டின்னு நினைச்சு கேட்டேன்)

போலீஸ்: இல்லப்பா(அப்டின்னு சொல்லிட்டு லைசென்ஸ், ஆர்.சி. புக் பத்தி அரைமணி நேரம் விளக்கம் கொடுத்தார். உண்மையிலையே நல்ல போலீஸ் அவர்)

நான்: லைசென்ஸ் எங்க சார் போய் எடுக்கணும்?

போலீஸ்: R.T.O ஆபீஸ் போய் எடுத்துடுப்பா.

நான்: சார் அது எங்க இருக்கு. எவ்ளோ செலவாகும். அதுக்கு சொந்த வண்டி வேணுமா?

போலீஸ்: (மனதுக்குள் நாம இவன்கிட்ட காச கறக்கலாம்னு பார்த்தா இவன் நம்மளை மொக்கை போடுறானே)

போலீஸ்: (அதுக்கப்புறம் நான் அவரை விட்டா போதும்னு அவரே எஸ்கேப் ஆயிட்டாரு)

அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட  தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?

வியாழன், ஜூலை 15

சந்தோஷம்

எலெக்சன் வரப் போகுதே. மக்களோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக உளவுத்துறை மக்களை தீவிரமாக கண்காணித்து நம்ம கலைஞர் அய்யாகிட்டா ரிப்போர்ட் கொடுக்க போறாங்க.

உளவுத்துறை: வணக்கம் அய்யா..

கலைஞர்: வணக்கம் என் கழக உளவுத்துறை கண்மணிகளே. உங்களை கண்டதும் என் கண்கள் பணித்தது.இதயம் மகிழ்ந்தது.

உளவுத்துறை: நன்றி அய்யா.

கலைஞர்: சரி இப்ப மக்களோட மனசுல என்ன இருக்கு? மக்கள் சந்தோசமாத்தான் இருக்கிறார்களா?

உளவுத்துறை: ஆமாங்க அய்யா. ரொம்ப சந்தோசமா இருக்காங்க

கலைஞர்: அதுக்கு என்ன காரணம். இலவச டிவியா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: இல்லையா? அப்போ இலவச கேஸ் அடுப்பா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அதுவும் இல்லையா. ஒரு ரூபாய் அரிசி திட்டம்?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அப்ப கலைஞர் காப்பீட்டு திட்டமா?

உளவுத்துறை: அதுவும் இல்லை அய்யா.

கலைஞர்: என்ன சொல்றீங்க. நம்ம இலவச திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் மக்கள் சந்தோசமா இருக்காங்களா. என்ன அதிசயம். இதுக்கு காரணம் என்னவோ?

உளவுத்துறை: கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் கடந்த பதினோராம் தேதிக்கு அப்புறம் பதிவு எழுதலை. அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம்.
 
கலைஞர்: அப்படியா. அப்டின்னா அவரை பதிவு எழுத விடாமல் செய்து எங்கள் ஆட்சியில்தான் "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" ப்ளாக் தடை செய்யப்பட்டது அப்டின்னு விளம்பரம் செய்து நாம மக்கள் மனசை கவரலாமா?

உளவுத்துறை: அதிலும் ஒரு சிக்கல் உண்டு அய்யா..

கலைஞர்: என்ன சிக்கல்?

உளவுத்துறை: ஒரே அடியாக தடை செய்து விட்டால் மக்கள் அவரைக் கலாய்க்க முடியாமல் வெக்ஸ் ஆகி மனச்சோர்வுக்கு ஆளாயிடுவாங்க. உலகத்திலேயே எவ்ளோ கலாய்ச்சாலும் தாங்குற ஒரே ஆள் இந்த வெங்கட்தான் அய்யா.
 
கலைஞர்:  அப்படியா. அப்டின்னா என்ன பண்ணலாம்?

உளவுத்துறை: வெங்கட்டை வாரம் ஒரே ஒரு பதிவு போடுமாறு மிரட்டி வைக்கலாம். மக்களை ஒருவாரம் மொக்கைல இருந்து காப்பாத்தின மாதிரியுமாச்சு. ஒரு வாரம் மக்கள் வெங்கட்டை கலாய்ச்ச மாதிரியும் ஆயிடுச்சு.

கலைஞர்: இது நன்றாக இருக்கிறதுடா என் கண்மணி.

உளவுத்துறை:  அப்புறம் கலைஞர் டிவில பதிவர்கள் முன்னிலையில் "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" நடத்தலாம்.

கலைஞர்: ஆஹா அருமை. அப்படின்னா பதிவர்கள் ஓட்டு நமக்குதானே.

உளவுத்துறை: ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை. டேரருக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுத்தா போதும். அந்த ஓட்டும் நமக்குதான்.
 
கலைஞர்: சரி கண்மணி. நீ போய் ராம.நாராயணனை பார்த்து "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" ஏற்பாடு பண்ண சொல்லு. நான் வருகிறேன்.

உளவுத்துறை: சரிங்க அய்யா...

புதன், ஜூலை 14

விஜய் ஒரு சகாப்த்தம்

விஜய் இப்ப தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத நபர்(கான்க்ரீட் போட்டிருக்கான்னு எல்லாம் கேக்கப் படாது). தமிழ்நாடே அவரைப் பத்திதான் இப்ப பேசிகிட்டு இருக்கு. முதல் படம் சுமாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவரது திறமையை நிருபித்தவர்.

அப்பா சினிமாவில் இருப்பதால் ஈசியாக சினிமாவுக்கு வந்து விட்டார் என்றாலும் அவரது திறமையால் மட்டுமே அவரால் சினிமாவில் பிரகாசிக்க முடிந்தது. அவரது வெற்றிக்கு காரணம் அவரது விடா முயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

லேட்டஸ்ட்டாக  ரிலீஸ் ஆன இவரது படம் வெற்றிகளையும் வசூல்களையும் வாரிக் குவித்தது என்று சொன்னால் மிகை ஆகாது. லேட்டஸ்ட்டாக வந்த இவரது படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது முயற்சி.

அந்த படத்திற்கு நிச்சியமாக விருதுகள் கிடைக்கும் என்று மக்களால் பேசப்பட்டாலும் அவரோ ரசிகர்கள் கொடுக்கும் விருதே மிகப் பெரிய விருது என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார். அவரது லேட்டஸ்ட்டாக வந்த படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு மேலும் சில புது பட offerகளை வாங்கி கொடுத்துள்ளது.

இது போன்ற சிறந்த ஒரு அட்டகாசமான படத்தை நமக்கு தந்ததற்காக விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் இது போல அருமையான அட்டகாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.(த்ரிஷாவால உங்களுக்கும் அஜித்துக்கும் பிரச்சனைன்னு கேள்விப் பட்டேன் உண்மையா விஜய்?)
.
.
.
.
.
.
.
.

டைரக்டர் விஜய் சார் உங்க மதராசப்பட்டினம் படத்தோட ஹீரோயின் அட்ரஸ் கிடைக்குமா. ஹிஹி எனக்கில்லை சார். நம்ம பய ஜில்தண்ணிக்குதான். பாவம் பக்கம் பக்கமா எமியப் பத்தி கவிதை எழுதுறான். அவனுக்காகவாவது கொடுங்களேன். (நீங்க வேற ஏதாவது விஜய்யை நினைச்சுக்கிட்டு வந்தா நானா பொறுப்பு. போங்க பாஸ்)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது