கை கொடுங்க டைரக்டர் சார். இவ்ளோ அழகான அருமையான காவியத்தை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு அழகா மக்கள் ரசனைகேர்ப்ப படம் எடுக்கனும்னு உங்களுக்கு எப்படி சார் தோனுச்சு?
150 கொடி போட்டு எந்திரன் படம் எடுத்தாங்களாம். போங்க சார். அவ்ளோ செலவு பண்ணி என்ன பிரயோஜனம். செலவே இல்லாம எவ்ளோ அழகா படம் எடுத்திருக்கேங்க. ஜெய்யோட நடிப்பும் சரி அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்ஸும் சரி சூபெர்ப்.
கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா?). சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். ஒவ்வொரு வசனங்களும் அவ்ளோ அருமை. வருங்கால சந்ததிகள் தெரிஞ்சு வச்சிக்க வேண்டிய வசனங்கள் சார்.
ஹீரோவின் நண்பனா வர்ற ஜோடி நம்பர் 1 மைக்கல் சூப்பர்(இத நம்பி பாவம் டிவி சான்ஸ் கூட மிஸ் பண்ணிருப்பாரே ).
ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். அவங்களை பாத்துக்கிட்டே இருக்கலாம்(இன்னும் உயிரோட இருக்கியாடா நீ).
அப்புறம்:
- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?
- படத்துல நீங்க சொல்லவந்த கருத்து என்னவோ?(ஏன்யா மெசேஜ் மெசேஜ்ன்னு எல்லாத்துலையும் மெசேஜ் தேடுறீங்க)
- காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ?
- பாட்டை தவிர படத்துல எதாச்சும் கவனிக்கிற மாதிரி விஷயம் ஏதாச்சும் இருக்கா சார்?
- படத்துல அடிக்கடி டாய்லெட்ட குளோசப்ல காட்டுறீங்களே ஏன்? படம் பாக்குறதுக்கு பதிலா பேசாம அங்கே குந்த வச்சு உக்காந்திருக்கலாம்னா?
- எதுக்காக இந்த படம் எடுத்தீங்க சார்?
- போட்ட காசாவது வந்துச்சா சார்?
- அடுத்த காவியம் எப்போ சார்?
இப்படி எந்த பயலாவது உங்க கிட்ட வந்து கேட்டா சொல்லுங்க சார். பிச்சுபுடுவோம். பொறாமை பிடிச்ச பயலுக சார். இப்படி ஒரு
# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.
.............