முஸ்கி: அடித்த எழுத்தை படிக்க வேண்டாம். அப்படியே படித்தாலும் அதுதான் உண்மையா என கேட்க கூடாது என எச்சரிக்கிறேன்.
அன்புள்ள பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,
உங்கள் பதிவைப் படித்து
வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான
ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. நீங்கள் ஒரு நடமாடும்
நாதாரி லைப்ரரி.
முதன்முறையாக உங்களுடைய "
தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(
தூ). எத்தனை தமிழ் நெஞ்சங்கள் ஏமாற்றப்பட்டிருக்கும்?
சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. அதை பஞ்சாயத்து பன்னி ச்சீ பண்ணி வைக்க வேண்டும் என்பதற்காக நீங்க
கேவலமாக கிறுக்கிய வரைந்த "
பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை"என்ற காவியத்தை படித்ததும் என் கண்கள் கலங்கி இனிமேல் யாருடனும் சண்டை போட கூடாது என நினைத்தேன். அந்த
பிரச்னைக்கு தீர்வும் சொன்னவர் நீங்கள். சமாதானமாக போக வெள்ளை கொடிக்காக பல கோவணங்களும் வாங்கி வைத்துள்ளேன்.
நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் உங்கள் ரசிகர்களிடம் வெட்கத்தை கேட்கும்(உங்களுக்கு சூடு சுரணை எதுவும் இருக்கா?)
எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா? உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட்.
விலங்குகளையும் மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது புல்லரித்து விட்டது எனக்கு. அதற்காகத்தான் உங்கள் பெயரையும் பன்னிகுட்டி என்று வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்
சினிமா பார்க்காத மக்களையும் சினிமா பார்க்க வைத்தது உங்களின் "
பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி" பதிவுதான். திருச்சிக்கே மரியாதை தந்தது உங்களின் இந்த பதிவு(
ஏதாச்சும் திருச்சிக்காரன் வந்து மிதிக்கட்டும்.) சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களது பார்வை மிகவும் போற்றத்தக்கது. நீங்கள் ஏன் தமிழ் பட Data பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி பிட்டு படங்களின் டீடைல்ஸ் மெயின்டைன் பண்ண கூடாது.
அப்பபோ உங்களது மூளை விழித்தெழிந்து
இந்த மாதிரி டவுட்டெல்லாம் கேட்கும்.
டீ.ஆர் அவர்கள் ஹிந்தி படம் எடுக்க நீங்கள் எவ்ளோ உதவி செய்தீர்கள். அந்த உதவி மனப்பான்மை வேறு யாருக்கு வரும். உங்கள்
உபத்திரத்துக்கு உதவி மனபான்மைக்கு
சமாதியே கோவிலே கட்டலாம்.
காதலிப்பவர்கள் இந்த உங்களது
இந்த கட்டுரையை படித்தால் (
ங்கொயாலா சமாதி நிலைக்கு போயிடுவான்) அவனுக்கு காதல் மீது காதல் வரும். காதலர்களுக்கேல்லாம் நீங்கள் ஒரு ஷாஜகான்.
ஒரு விளக்கெண்ணை
நல்லெண்ணையை
பற்றி பேசுகிறதே
என்ற கவிதை
இந்த பதிவை படிக்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் வெண்ணை மாதிரி வழ வழப்பான பதிவு இது.
மக்கள் போலி டாக்டர்களிடம் ஏமாந்து கிட்னியை பறி கொடுக்க கூடாது என்கிற ஆர்வத்தில்
உண்மையான டாக்டர்கள் லிஸ்டை வெளியிட்ட உங்களது சேவை பாராட்டுக்குரியது. இனி யார் யார்
டாக்டராவரனும்கிற லிஸ்டையும் கொடுத்தீர்கள். இதற்காகவே உங்களுக்கு
இளைய சின்ன டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
டீ.ஆர்க்கு உதவி செய்த மாதிரி
டாக்டர் விஜய்க்கும் உதவி செய்தீர்கள். அவருடைய
ரத்த சரித்திரத்தை எங்களுக்கு மை போட்டு விளக்கினீர்கள்.
அவருடைய பெருமைகளை எங்களுக்கு விளக்கினீர்கள்.
ஷங்கருக்கு கூட உதவியதாக செய்திகள் கிடைத்தது.
வாழ்க்கைல நீ என்னத்த கிழிச்சேன்னு எவனும் கேட்க கூடாது என்பதற்காக "
அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?" என்கிற பதிவிட்டீர்கள். இது போன்ற பயனுள்ள குறிப்புகள் எழுதி வர்றவன் போறவனெல்லாம் உங்களை
கிழிக்க பாராட்ட வாழ்த்துக்கள்.
லஞ்சத்தை ஒழிக்க ரகசியா ரகசிய வழிகளை நாட்டு மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்பத்தியவர் நீங்கள்.
பத்தாவது கூட பாசாகாத பயலுகளுக்கு
பீகார் யுனிவேர்சிடில பாசாக அங்கிருந்து
கேள்வித்தாளை லபட்டிகிட்டு வந்து மக்கு பசங்களுக்கு நீங்கள் செய்த சேவை மகத்தானது. அதற்காக
ஹிந்தி சொல்லி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான்.
என்னை மாதிர், டெரர் மாதிரி இளைஞர்கள்
பொண்ணு பார்க்க போகும்போது ஏமாற கூடாதுன்னு உங்கள் அனுபவத்தை ஷேர் செய்து கொண்டீர்கள். அதற்க்கு மிக்க நன்றி.
திருமணமானவர்களுக்கும் நீங்கள் வாங்கிய செருப்படி யாரும் வாங்க கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்தவரும் நீங்களேதான்.
நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள். இவ்வளவு ஏன்
கலாச்சார சீரழிவை சாட்டையடி பதிவின் மூலம்(
மூலம் நோய் இல்லை) சொன்ன மகான் நீங்களே!!
இது போக
-
சமையல் குறிப்புகள்(
சாப்பிட்டு பேதியில் பாடியானால் நிர்வாகம் பொறுப்பில்லை)
-
மக்களின் மனதை மகிழ்விக்க அவார்ட்ஸ் (
கருமம்)
-
கக்கூசை உபயோகிக்க சிறந்த அறிவுரைகள்
-
காஸ்ட்லியான காப்பி தயாரிப்பது எப்படி
-
சிரிப்பு போலிசின் சாதனைகள்
போன்ற பல பயனுள்ள பதிவுகளை எழுதிய வித்தகர் நீங்கள். நீங்கள் ஒரு பன்முக பதிவர். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் இந்த தமிழகம் உங்களை போன்ற
பன்னாடைக்கு பதிவருக்கு ஏன் டாக்டர் பட்டம் இன்னும் கொடுக்கவில்லை என்று எண்ணி துடிக்கிறேன். தவிக்கிறேன். என்ன உலகமடா இது.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
அல்லக்கை
டிஸ்கி 1: யோவ் பன்னி உயிரை பணயம் வச்சு உன்னோட பதிவுகளை படிச்சு பதிவா போட்டிருக்கேன். சொன்ன மாதிரி அமவுண்ட என்னோட அக்கவுண்டுல போட்டிரு....
டிஸ்கி 2: இதில் உள்ள லிங்க்குக்கு போயி உயிர் சேதாரமாச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லை..