என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? என்னடா உலகம் இது. நல்லவனை எல்லாம் தேடமாட்டாங்க. ஊர்ல உள்ள அயோக்கிய பயலுக(பன்னிகுட்டி,டெரர் மாதிரி ஆளுங்க காணோம்னா உடனே தேடுவாங்க) நான் காணாம போனதும் எனக்கு ஆணி அதிகம்ன்னு தப்பா நினைச்சிடாதீங்க. போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி.
எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம் இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)
=========================================================
பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா?
ஹிஹி
இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல) மற்றும் அவங்க பொண்ணு தூயாவை ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தேன்.
காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. சிபி வேற போன் பண்ணி என்னய்யா ஓசி சாப்பாடான்னு கேட்டு வெறுப்பேத்திட்டார். சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.
=========================================================
வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.
வடிவேலு எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அவர்களை வா, போ அப்டின்னு ஒருமையில்தான் கூப்பிடுவார்(ரஜினி,அர்ஜுன்,கமல், அஜித்,விஜய்..). ஆனா விஜயகாந்தை மட்டும் வாங்க போங்கன்னுதான் சொல்லுவார்(தவசி,எங்கள் அண்ணா). அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)
=========================================================
அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். யாராச்சும் பொன்னர் சங்கர் பாட்டு கேட்டீங்களா?
=========================================================
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).
=========================================================
சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...
கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...
சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்....
ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive...
=========================================================