திருமூர்த்தி(மாதவன்) அண்ணன். குரு(ஆர்யா) தம்பி. திரு சரியான பயந்தாங்கொள்ளி. யாராவது அடிச்சா கூட இரு என் தம்பியை கூட்டிட்டு வரேன்னு தம்பி குருவை கூட்டிட்டு வர்ற ஆளு. குரு யாருக்கும் பயப்படாத அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத ஆள். அப்பா இறந்த பிறகு அப்பாவோட போலீஸ் வேலை திருவிற்கு கிடைக்கிறது. ஆனால் பயந்தான்கொல்லியான திரு போலீஸ் வேலையில் சேர யோசிக்கும்போது தம்பி குரு கட்டாயப்படுத்தி சேர வைக்கிறார்.
அந்த ஊரில் உள்ள ரவுடிகளுக்கு எல்லோரும் பயப்படும்போது திருவை அந்த ரவுடியை கைது பண்ண சொல்லி அனுப்புகிறார்கள். திருவிற்கு பதில் எல்லா வேலையையும் பின்னால் இருந்து குரு செய்கிறான்(ரவுடிகளை போட்டு தள்ளுவது). (அவரச போலீஸ் 100 படம் அடிக்கடி நியாபகம் வருகிறது). மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் ஆகிறது. சமிராவின் தங்கை அமலா பாலும் ஆர்யாவும் லவ்வுகிறார்கள். அந்த ஊரில் ரெண்டு ரவுடி க்ரூப்பும் சேர்ந்து மாதவனை அடக்க அவன் தம்பி ஆர்யாவை போட்டு தள்ளிவிடலாம் என எண்ணி வந்து ஆர்யாவிடம் அடிவாங்கி செல்கிறார்கள்(கடைசியில் மாதவனுக்கு பதில் எல்லாம் செஞ்சது ஆர்யாதான்னும் கண்டு பிடிக்கிறார்கள்).

இடைவேளை வரை படு ஜாலியாக போன படம், இடைவேளைக்கப்புறம் படு சீரியசான காட்சிகளும் காமடியாகி போய் விட்டன. ஆர்யாவை அடித்ததும் கால் உடைந்த மாதவன் பொங்குவது,ஒரே பாட்டில் மாதவன் வீரமாவது, என் தம்பி வந்தா ஒருத்தனும் உயிரோடு போக மாட்டேன்னு மாதவன் வசனம் பேசுவது, கர்ப்பமா இருக்கும் சமிரா ஆர்யாவிடம் ஒருத்தனும் உயிரோடு போகக்கூடாதுன்னு சவால் விடுவது போன்ற சீரியசான காட்சிகள் பார்த்து சலித்து போன காட்சிகள். தியேட்டரில் இந்த காட்சிகளுக்கெல்லாம் சரியான கமெண்டுகள் வந்தது.(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்).
நாசர் அப்பப்ப வந்து காமடி செய்கிறார். இதில் ஆர்யாதான் ஹீரோ. மாதவன் செகண்ட் ஹீரோதான். ரெண்டு டூயட் சாங்கும் ஆர்யாவுக்குதான். திடீர்ன்னு அமலா பாலுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து அவரும் இந்தியா வருகிறார். அவரை கலாய்க்கும் காட்சிகள் சுவாரஷ்யம். அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டி விட்டு ஆர்யாவே அமலாவை கல்யாணம் செஞ்சுக்கிறார்.
கடைசியில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ரவுடிகளை போட்டு தள்ளுகிறார்கள்.
அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும்.
முதல் பாதி ஜெட் வேகம். பின் பாதி நொண்டியடிக்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.
டாப் சீன்ஸ்:
- ஆர்யாவும்,சமீராவும் மோதிக்கொள்ளும் இடங்கள்
-மாதவனை எல்லோரும் பாராட்டும்போது மாதவனின் ரியாக்ஷன்
- நாம ஏன் நாடோடி மன்னன் எம்.ஜி.யார் மாதிரி பிறந்திருக்க கூடாதுன்னு மாதவன் சொல்ற சீன்
- ஆர்யா,அமலா பால் காதல் காட்சிகள்.
-கிளைமேக்சில் நீ அந்த நாலு அரியர் பாஸ் பண்ணனும்ன்னு நாசர் ஆர்யாவிடம் சொல்லும் காட்சி(பாஸ் என்கிற பாஸ்கரன்)
- வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது
#இடைவேளையின் போது மசாலா ஃகபே டிரைலர் போட்டாங்க. செம காமடி. கண்டிப்பா படம் பார்க்கணும்.
சந்தானம்: ஏண்டா சூர்யா மாதிரி சிரிக்க சொன்னா எஸ்.ஜே.சூர்யா மாதிரி சிரிக்கிற?
அந்த ஊரில் உள்ள ரவுடிகளுக்கு எல்லோரும் பயப்படும்போது திருவை அந்த ரவுடியை கைது பண்ண சொல்லி அனுப்புகிறார்கள். திருவிற்கு பதில் எல்லா வேலையையும் பின்னால் இருந்து குரு செய்கிறான்(ரவுடிகளை போட்டு தள்ளுவது). (அவரச போலீஸ் 100 படம் அடிக்கடி நியாபகம் வருகிறது). மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் ஆகிறது. சமிராவின் தங்கை அமலா பாலும் ஆர்யாவும் லவ்வுகிறார்கள். அந்த ஊரில் ரெண்டு ரவுடி க்ரூப்பும் சேர்ந்து மாதவனை அடக்க அவன் தம்பி ஆர்யாவை போட்டு தள்ளிவிடலாம் என எண்ணி வந்து ஆர்யாவிடம் அடிவாங்கி செல்கிறார்கள்(கடைசியில் மாதவனுக்கு பதில் எல்லாம் செஞ்சது ஆர்யாதான்னும் கண்டு பிடிக்கிறார்கள்).

இடைவேளை வரை படு ஜாலியாக போன படம், இடைவேளைக்கப்புறம் படு சீரியசான காட்சிகளும் காமடியாகி போய் விட்டன. ஆர்யாவை அடித்ததும் கால் உடைந்த மாதவன் பொங்குவது,ஒரே பாட்டில் மாதவன் வீரமாவது, என் தம்பி வந்தா ஒருத்தனும் உயிரோடு போக மாட்டேன்னு மாதவன் வசனம் பேசுவது, கர்ப்பமா இருக்கும் சமிரா ஆர்யாவிடம் ஒருத்தனும் உயிரோடு போகக்கூடாதுன்னு சவால் விடுவது போன்ற சீரியசான காட்சிகள் பார்த்து சலித்து போன காட்சிகள். தியேட்டரில் இந்த காட்சிகளுக்கெல்லாம் சரியான கமெண்டுகள் வந்தது.(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்).
நாசர் அப்பப்ப வந்து காமடி செய்கிறார். இதில் ஆர்யாதான் ஹீரோ. மாதவன் செகண்ட் ஹீரோதான். ரெண்டு டூயட் சாங்கும் ஆர்யாவுக்குதான். திடீர்ன்னு அமலா பாலுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து அவரும் இந்தியா வருகிறார். அவரை கலாய்க்கும் காட்சிகள் சுவாரஷ்யம். அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டி விட்டு ஆர்யாவே அமலாவை கல்யாணம் செஞ்சுக்கிறார்.
கடைசியில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ரவுடிகளை போட்டு தள்ளுகிறார்கள்.
அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும்.
முதல் பாதி ஜெட் வேகம். பின் பாதி நொண்டியடிக்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.
டாப் சீன்ஸ்:
- ஆர்யாவும்,சமீராவும் மோதிக்கொள்ளும் இடங்கள்
-மாதவனை எல்லோரும் பாராட்டும்போது மாதவனின் ரியாக்ஷன்
- நாம ஏன் நாடோடி மன்னன் எம்.ஜி.யார் மாதிரி பிறந்திருக்க கூடாதுன்னு மாதவன் சொல்ற சீன்
- ஆர்யா,அமலா பால் காதல் காட்சிகள்.
-கிளைமேக்சில் நீ அந்த நாலு அரியர் பாஸ் பண்ணனும்ன்னு நாசர் ஆர்யாவிடம் சொல்லும் காட்சி(பாஸ் என்கிற பாஸ்கரன்)
- வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது
#இடைவேளையின் போது மசாலா ஃகபே டிரைலர் போட்டாங்க. செம காமடி. கண்டிப்பா படம் பார்க்கணும்.