நந்தினி - பாகம் 1
நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.
சைரன் சத்தத்தோடு போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது. வாழவந்தானை பத்திரிகை காரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். போலீஸ் அதிகாரி வந்து எல்லோரையும் ஒதுங்கு ஒதுங்கு என கத்திகொண்டிருந்தார். வாழவந்தானின் மனைவி டெரர் பிளாக்கை படித்தது போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்
என்னம்மா என்ன நடந்தது என போலீஸ் கேட்டார். மன்மோகன் சிங் மாதிரி பதிலே பேசாமல் இருந்தார் வாழவந்தானின் மனைவி. அவர் வீட்டு வேலைக்காரி வந்து திடீர்ன்னு ஐயோ ன்னு சத்தம் கேட்டது. நான் கூட அய்யா குருவி படம்தான் பார்க்கிரார்ந்னு நினைச்சேன். அப்புறம் யாரோ ஓடுறது தெரிஞ்சது. போயி பார்த்தேன் அய்யா செத்து கிடக்கார்.
அந்த ஆள் அடையாளம் காட்ட முடியுமா?
இல்லைங்க. மூஞ்சிய பார்க்கல ..
வேற அடையாளம் ஏதாச்சும்?
உடம்பு முழுவதும் சால்வை சுத்தி இருந்தான். ஆள் கொஞ்சம் உயரம். பால்கனி வழியா வெளில ஓடிட்டான்.
யோவ் 501, வேற ஏதாச்சும் தடயம் இருக்கான்னு பாரு..
சரிங்கய்யா...
போலீஸ் வீட்டை சுற்றி நோட்டம் விட்டனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்க ஆரமித்தார்
அப்போதுதான் போலீஸ் கண்ணில் அந்த தடயம் தட்டுப்பட்டது. அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.
நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.
சைரன் சத்தத்தோடு போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது. வாழவந்தானை பத்திரிகை காரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். போலீஸ் அதிகாரி வந்து எல்லோரையும் ஒதுங்கு ஒதுங்கு என கத்திகொண்டிருந்தார். வாழவந்தானின் மனைவி டெரர் பிளாக்கை படித்தது போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்
என்னம்மா என்ன நடந்தது என போலீஸ் கேட்டார். மன்மோகன் சிங் மாதிரி பதிலே பேசாமல் இருந்தார் வாழவந்தானின் மனைவி. அவர் வீட்டு வேலைக்காரி வந்து திடீர்ன்னு ஐயோ ன்னு சத்தம் கேட்டது. நான் கூட அய்யா குருவி படம்தான் பார்க்கிரார்ந்னு நினைச்சேன். அப்புறம் யாரோ ஓடுறது தெரிஞ்சது. போயி பார்த்தேன் அய்யா செத்து கிடக்கார்.
அந்த ஆள் அடையாளம் காட்ட முடியுமா?
இல்லைங்க. மூஞ்சிய பார்க்கல ..
வேற அடையாளம் ஏதாச்சும்?
உடம்பு முழுவதும் சால்வை சுத்தி இருந்தான். ஆள் கொஞ்சம் உயரம். பால்கனி வழியா வெளில ஓடிட்டான்.
யோவ் 501, வேற ஏதாச்சும் தடயம் இருக்கான்னு பாரு..
சரிங்கய்யா...
போலீஸ் வீட்டை சுற்றி நோட்டம் விட்டனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்க ஆரமித்தார்
அப்போதுதான் போலீஸ் கண்ணில் அந்த தடயம் தட்டுப்பட்டது. அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.