இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். என்ன பண்றது எழுதிடுவோம். எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.
ஜனவரி:
எங்க அண்ணன் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் முறையாக இந்த வருட நியூ இயரை அவளுடன் கொண்டாடினேன். அதனாலதான் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு. இதற்க்கு முன் வேலை செய்த கம்பனில நான் சும்மாவே இருக்குறதா நினைச்சு ஏதாவது வேலை செய்வானே அப்படின்னு நம்பி புரோமோஷன் கொடுத்தாங்க(
வாழ்க்கைல முதல் புரமோஷன்). Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. ஆனாலும் வழக்கம் போல ஆணியை புடுங்கவே இல்லை. ஹிஹி.
பிப்ரவரி:
சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்லவேண்டும் என்பதால் ஆபீஸில் மேனேஜரிடம் பொய் சொல்லி லீவ் வாங்கி கிளம்பினேன்.முதன் முறையாக விமானப் பயணம். ஒரு புதிய அனுபவம். சிங்கப்பூர் வந்த ஆண்டு இது. பிளைட்டுல ஓசில சாப்பாடு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டு அங்க உள்ள ஏர் ஹோஸ்டேர்ஸ் கிட்ட கேட்டா இது பட்ஜெட் Airways. அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....
மார்ச்:
பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(
அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) வேலை தேடியலைந்த இடத்தில் எல்லாம் மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு அப்டின்னு மிரட்டுற அளவுக்கு ஆயிடுச்சு. பதிவர் பிரபாகர் மற்றும் நல்லவன் கருப்பை சந்தித்தேன்.
ஏப்ரல்:
கமெண்ட் மட்டுமே போட்டுகொண்டிருந்த என்னை பதிவு எழுத சொல்லி கெஞ்சிய வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. ஒழுங்காக(????) பதிவு எழுத ஆரமித்தது இந்த மாதம்தான். உதவி செய்த வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. கோவம் வந்த அவங்களை போய் கும்முங்கோ.
மே:
சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.
ஜூன்:
பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(
!!!!!!!) கிடைத்தனர்(
இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.முதல் முறையாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு போனதும் இந்த மாதம்தான்.பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது.
ஜூலை:
எங்க பாஸ் இந்த மாதம்தான் வெளியூரில் இருந்து ஆபீஸ்கு வந்தார். நிறைய விசயங்கள் கற்றுக்கொடுத்தார்.
ஆகஸ்டு:
எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ரொம்ப நல்லவன். என்னோட அம்மா, அப்பாவை சென்னைக்கு கூட்டி வந்து என்னோட தங்க வைத்தேன்.
செப்டம்பர்:
இதுவரை என் குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்து சொன்னாங்க. இந்த வருடம் அருண்,வெங்கட், பாபு,டெரர் புண்ணியத்துல பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்கள் கிடைத்தது(
அய்யய்யோ அந்த பிளாகுக்கு போனா என் மானம் கப்பல் ஏறிடுமே).
அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே.
அக்டோபர்:
தமிழ் வலைப்பதிவர்கள் போரம் சண்டை ஆரமித்தது இந்த மாதம்தான். நானும் இன்னும் சிலரும் போரம் விட்டு வெளியேறினோம். பதிவர் ராஜன் திருமணத்துக்கு போய் அதுவும் சர்ச்சைக்குள் ஆகியது. மண்டப வாடகை பேமஸ் ஆனது. மங்குணியை மீட் பண்ணியது இங்குதான்.
நவம்பர்:
பதிவர் ஜெட்லியின் திருமணத்துக்கு போனேன். மறுபடியும் சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை(
எவ்ளோ சந்தோஷம். ஹிஹி). PSV புண்ணியத்தில் நானும், பாபுவும் கப்பலை சுற்றி பார்த்தோம்.
டிசம்பர்:
எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(
மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே). இருவரும் நண்பர் எஸ்.கே வை சந்தித்தோம். அவர் வீட்டிலும் ஓசி டீ. சிபி சென்னைக்கு வந்து எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார். விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....
டிஸ்கி: இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா இருக்கும் ஒரே நண்பன்.
....