Horoscope

வெள்ளி, அக்டோபர் 24

கத்தி - மில்லியன் டாலர் கேள்விகள்


1. ப்ளூ பிரிண்ட் வச்சி ஜெயிலரால கண்டு பிடிக்க முடியாதத  ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறாரோ ?
2. அது ஏன் மேப் பார்க்கும்போது டேபிளுக்கு கீழ பார்க்கிறாரோ(உள்ளத்தை அள்ளித்தா பட பாட்டுக்கு பன்னிக்குட்டி ராமசாமி திரைக்கு கீழ போயி பார்த்த மாதிரி)
3. எந்த ஏர்போர்ட்ல இமிக்கிரேஷன் பாரம் பில் பண்ற இடம் வரைக்கு விசிட்டர்ஸ அலவ் பண்றாங்க? சதீஷும் சமந்தாவும் எப்படி அங்க போனாங்க?
4.  வில்லன் ஜீவா விஜய் தப்பிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணி அவனோட ஆளுக ரெண்டு பேரையும் கூட அனுப்புறான். அட மாங்கா மண்டையா அதுக்கு நீயே தப்பிக்கலாமே.
5. கூட  வந்த ரெண்டு பெரும் என்ன ஆனாங்க? அவனுக ஏன் கத்தி விஜய்யை கொலை பண்ண கடைசி வரைக்கும் வரல?
6. அந்த வில்லன் என்ன ஆனான்?
7. 3 நாளா போலீஸ் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கல?
8. எல்லோருக்கும் குளிக்கிறப்ப தண்ணி நிக்கிற மாதிரி காட்டுறாங்க. இங்க எல்லோருமே போர் தண்ணிலதான்  குளிக்கிறாங்க. பிறகு எப்படி தண்ணி நிக்கும்?
மீதி கேள்விகளை யாரும் கேட்கலாம்



14 கருத்துகள்:

வானரம் . சொன்னது…

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிப்பு போலீஸ் பதிவு போட்டிருக்கறதா சொன்னாங்களே , அது எங்கே ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த கேள்விகளுக்குலாம் மில்லியன் டாலர் கொடுக்கிறேன்னு சொன்ன மாங்கா மடையன் யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////1. ப்ளூ பிரிண்ட் வச்சி ஜெயிலரால கண்டு பிடிக்க முடியாதத ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறாரோ ? /////

ஜெயிலருக்கு கண்ணுல கோளாறு, புளு கலர்லாம் தெரியாதாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////2. அது ஏன் மேப் பார்க்கும்போது டேபிளுக்கு கீழ பார்க்கிறாரோ(உள்ளத்தை அள்ளித்தா பட பாட்டுக்கு பன்னிக்குட்டி ராமசாமி திரைக்கு கீழ போயி பார்த்த மாதிரி) /////

அப்புறம் டேபிளுக்கு கீழ பாக்காம டேபிளுக்கு மேலயா பாப்பாங்க போலீசு..?

ஆமா அதென்ன திரைக்கு கீழ போயி பாத்தவன்னு என்னைய மட்டும் சொல்ற..... அப்பவும் தெரியலேன்னு நீ திரைய தூக்கி பாத்தியே அத மறந்துட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////3. எந்த ஏர்போர்ட்ல இமிக்கிரேஷன் பாரம் பில் பண்ற இடம் வரைக்கு விசிட்டர்ஸ அலவ் பண்றாங்க? சதீஷும் சமந்தாவும் எப்படி அங்க போனாங்க? /////

ஏர்போர்ட் சீன் வர முன்னாடி எந்த ஊரு ஏர்போர்ட்னு பில்டிங் வெளில கொஞ்ச நேரம் காட்டுவாங்களே, காட்டலையா? (ஹீரோ சென்னைக்கு போன உடனே செண்ட்ரல் ஸ்டேசனை 10 செகண்ட்டு காட்டுவானுங்கள்ல அந்த மாதிரி) ஆமா சதீஷும் சமந்தாவும் ஏர்போர்ட்டுக்கு மாட்டு வண்டிலயா போயிருப்பாங்க? எப்படி போனாங்களாம், கேக்குறாம் பாரு கேள்வி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////4. வில்லன் ஜீவா விஜய் தப்பிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணி அவனோட ஆளுக ரெண்டு பேரையும் கூட அனுப்புறான். அட மாங்கா மண்டையா அதுக்கு நீயே தப்பிக்கலாமே.////

அவன தப்பிக்க சொல்லி டைரக்டர் சொல்லலையே... அப்புறம் எப்படி தப்பிப்பான்......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////5. கூட வந்த ரெண்டு பெரும் என்ன ஆனாங்க? அவனுக ஏன் கத்தி விஜய்யை கொலை பண்ண கடைசி வரைக்கும் வரல?/////

அவங்களுக்கு டைரக்டர் ஆட்டோவுக்கு காசு கொடுக்கல, அதான் அவங்களால வரமுடியல.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////6. அந்த வில்லன் என்ன ஆனான்? ///

யோவ் வில்லன் என்ன ஆனான்னு காட்டுறதுக்கா படத்த எடுக்குறாங்க.... வில்லனுக்கு கொடுத்த காசுக்கு அவ்ளோதான்யா காட்ட முடியும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////7. 3 நாளா போலீஸ் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கல?////

அந்த 3 நாளா போலீஸ் யூனிபார்ம் வாடகைக்கு கிடைக்கல சார், அதான்...... அவங்க வரல...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// 8. எல்லோருக்கும் குளிக்கிறப்ப தண்ணி நிக்கிற மாதிரி காட்டுறாங்க. இங்க எல்லோருமே போர் தண்ணிலதான் குளிக்கிறாங்க. பிறகு எப்படி தண்ணி நிக்கும்? ////

போர்ல இருந்து தண்ணி தன்னாலேயா வருது? ங்கொய்யால பம்ப ஆஃப் பண்ணிட்டா தண்ணி நின்னுட போவுது....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மீதி கேள்விகளை யாரும் கேட்கலாம்
////

ஆமா யார்வேணா கேக்கலாம்னு கலக்டர் பர்மிசன் கொடுத்துட்டாரு.... அய்யா வாங்க, அம்மா வாங்க... எல்லாரும் வந்து உங்க இஷ்டம் போல கேள்விய கேளுங்க......!

செல்வா சொன்னது…

தோழர் ப.ரா அவர்களுக்கு,

ரமேஷ் அவர்களின் கேள்விகளுக்கு மிகத் துல்லியமாகவும், விளக்கமாகவும், உண்மையாகவும், சரியாகவும் தாங்கள் பதிலளித்திருப்பதாகத் தெரிகிறது. அவர் கொடுப்பதாகச் சொன்ன அந்த மில்லியன் டாலரை தங்களுக்குக் கொடுத்துவிட்டாரா?

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ரமேஷ் சார்!நலமா?///உங்கள் அத்தனை கேள்விகளுக்கும்,ப.ரா சார் சிறப்பாகப் பதிலளித்திருக்கிறார்.எனக்கு அவ்வளவு திறமை இல்லாததால்,அவர் பதில்களையே என் பதில்களாக ஏற்றுக் கொள்ளவும்.///அவருக்குக் கொடுக்கப் போகும்(?!)அந்த மில்லியனில் எனக்கும் சற்று ஈய்ந்துதவுமாறு பணிவுடன்............நன்றி!

பெயரில்லா சொன்னது…

welcome back sirippu!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது