டெரர் கும்மி நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு டிவி வாங்கினாங்க. இருக்கிறது அத்தன பேரு. ஆனா பாருங்க டிவிகாரன் ஒரே ஒரு ரிமோட் தான் கொடுத்தான். அதனால எல்லாரும் சண்டை போட்டு ஆளாளுக்கு ஒரு சேனல் மாத்திட்டு இருந்தாங்க.
அருண் பிரசாத் வாங்க பழகலாம்(விருந்தாளிகளை வரவேற்கும்) நிகழ்ச்சி பார்க்கிறார்.
அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி பன்னிக்குட்டி தோட்டக்கலை நிகழ்ச்சி பார்க்கிறார்.
அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி ரமேஷ் சமையல் நிகழ்ச்சி பார்க்கிறார்.
அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி டெரர் வயலும் வாழ்வும் பார்க்கிறார்.
அப்படின்னா அங்க என்ன நடந்திருக்கும்?
உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன்(வாங்க பழகலாம்)
முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள்,நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். (தோட்டக்கலை)
வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில்...(சமையல்)
வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அதில் கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். (வயலும் வாழ்வும்)
டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை(சமையல்)
நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். (தோட்டக்கலை)
இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். (சமையல்)
விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு...(தோட்டக்கலை)
ஒரு பெரிய குழி தோண்டவும். (வயலும் வாழ்வும்)
வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் (வாங்க பழகலாம்)
குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும்.(வயலும் வாழ்வும்)
நன்றி வணக்கம்.
இவங்க எல்லோரும் இப்படி சேனலை அடிக்கடி மாத்திக்கிட்டு இருந்ததை பக்கத்து வீட்டு தாத்தா கேட்டுக்கிட்டு இருந்தார். அவர் காதில் இப்படித்தான் விழுந்தது.
உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன். முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு ஒரு பெரிய குழி தோண்டவும். வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும். நன்றி வணக்கம்.
இதை கேட்டுக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு தாத்தா பாட்டியை கூட்டி கொண்டு ஓடி போனவர்தான். இன்னும் வரலை.
23 கருத்துகள்:
தனியாக கீழே இருக்கும் பாரா தேவையில்லை..
எங்களுக்குலாம் நல்லாவே புரிஞ்சிடிச்சு.. நாங்கலாம் ஜீனியஸாக்கும்
u r brilliant :)
The paragraph only for stupid babu
டி.வி நிகழ்ச்சி அருமை...
தம்பி...நீ உன் குடும்பத்தோட என் வீட்டுக்கு ஒரு தடவை டீ சாப்பிட வரனும்......
என் வீட்டுத் தோட்டத்தை நான் நல்லா அழகு படுத்தி வச்சிருக்கேன். பாலிடாயில்கூட ஒரு லிட்டர் வாங்கி வச்சிருக்கேனா...உம்மேல எம்புட்டு பாசம்னு பாத்துக்க...
குடிப்பது தவறென்பதால் நான் எதயும் குடிப்பதில்லை :)
//The paragraph only for stupid babu//
thoo... Paradesi ...
இப்படியே ஏழுநா மூணுவாட்டி செய்யவும்...
நன்னி...
──────────────────────────────┼───────────────────┼────
───────────────────────────────────────────────────────
──┼┼────┼───┼┼┼─┼┼┼─┼┼┼┼┼───┼┼┼┼┼─────┼┼┼┼┼───┼────┼┼──
─┼──┼───┼──┼───┼───┼──┼─────┼──┼──────┼──┼────┼───┼──┼─
┼─┼──┼──┼─┼┼──┼─┼─┼─┼─┼───┼┼┼┼┼┼┼┼──┼┼┼┼┼┼┼┼──┼───┼──┼─
┼─┼──┼──┼─┼─┼─┼─┼─┼─┼─┼───┼────┼──┼─┼────┼──┼─┼───┼──┼─
─┼──┼┼┼┼┼──┼───┼───┼──┼────┼┼┼┼──┼───┼┼┼┼──┼──┼┼┼┼┼┼┼┼─
───────────────────────────────────────────────────────
───────────────────────────────────────────────────────
░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓▓▓▓░░░░▓▓▓░░▓▓▓▓░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░▓░░▓░░░░░▓░░░▓░░▓░░░░▓▓░░▓▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓▓▓▓░░▓░░▓▓░░░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░▓░░░░░░░░▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▇▍▍▍▍▍▍▍▍▍▍▍▇▇▇▇▍▍
▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▇▍▍▍▍▇▍
▇▇▇▇▇▍▍▍▍▇▇▇▇▍▇▇▇▇▇▍▍▇▇▍▇▇▇▍▍▇▍
▇▍▍▇▍▍▍▍▇▇▍▍▍▇▍▍▍▇▍▍▇▍▍▇▍▍▍▇▍▇▍
▇▍▍▇▇▇▍▍▇▍▇▍▇▍▇▍▍▇▍▍▇▍▍▇▍▍▍▇▍▇▍
▇▍▍▇▍▍▇▍▇▍▇▍▇▍▇▍▍▇▍▍▇▍▍▇▍▍▍▇▍▇▍
▇▍▍▇▍▍▇▍▇▇▍▍▍▇▍▍▍▇▍▍▇▍▍▇▍▍▍▇▍▇▍
▍▍▍▍▍▍▇▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▇▍▍▍▍
▍▍▍▍▍▇▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▍▇▇▇▍▍▍▍▍
///////ஆனா பாருங்க டிவிகாரன் ஒரே ஒரு ரிமோட் தான் கொடுத்தான்.//////
ரெண்டு ரிமோட்டு கொடுத்திருந்தா மட்டும்.......?
/////அருண் பிரசாத் வாங்க பழகலாம்(விருந்தாளிகளை வரவேற்கும்) நிகழ்ச்சி பார்க்கிறார். ///////
இப்படியும் ஒரு நிகழ்ச்சியா?
////அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி பன்னிக்குட்டி தோட்டக்கலை நிகழ்ச்சி பார்க்கிறார். /////
அப்படின்னா என்ன?
///அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி ரமேஷ் சமையல் நிகழ்ச்சி பார்க்கிறார். ////
சமையல் நிகழ்ச்சி நடத்த வேண்டிய அளவுக்கு திறமைய வெச்சிக்கிட்டு மூதேவி வெட்டி வேடிக்க பாத்திருக்கு..........
/////அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி டெரர் வயலும் வாழ்வும் பார்க்கிறார். /////
வெவசாயத்துல அவனுக்கு தெரிஞ்சது உழுது போடுறது மட்டும்தான்...... அதுக்காக வயலும் வாழ்வு பாத்து நாலெஜ் டெவலப் பண்ணிக்கிறானா?
///அப்படின்னா அங்க என்ன நடந்திருக்கும்?///
எவனாவது கடுப்பாகி ரிமோட்டை ஒடச்சிருப்பான்.......
////இவங்க எல்லோரும் இப்படி சேனலை அடிக்கடி மாத்திக்கிட்டு இருந்ததை பக்கத்து வீட்டு தாத்தா கேட்டுக்கிட்டு இருந்தார்./////
இது நீதானே....? (அதான் எல்லாத்தையும் கரெக்டா சொல்லி இருக்கே?)
////வெளங்காதவன்™ கூறியது...
இப்படியே ஏழுநா மூணுவாட்டி செய்யவும்...
நன்னி...////
அப்போ எட்டாவது நா நீங்க வந்து செஞ்சு விடுவீங்களா...?
ஹீ ஹீ... நாலு பெரும் சேர்ந்து இன்னும் என்னென்ன கிறுக்குத்தனம் பண்ண போறாங்களோ?
அப்புறம்,..................யார்,யாரு இப்போ கம்பி எண்ணுறாங்க????????ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!
பயந்து ஓடுனது பக்கத்துவீட்டு தாத்தாமட்டுமில்லீங்க நாங்களும் தா டீயே வேனாம்பா ஆள விடுங்க சாமி
நிறைய பேரு அந்த பதிவால பாதிக்கப்பட்டு இருக்காங்க போல?
எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து இம்சை தரும் விருந்தாளிகளை உங்க வீட்டுக்கு அனுப்பிவைக்குறேன். அந்த ஷ்பெஷல் டீயைப் போட்டுக்குடுங்க ரமேஷ்..
(போலீஸ் கேஸானா உங்களை மாட்டிவிட்ரலாம்ல..)
கருத்துரையிடுக