Horoscope

வியாழன், ஆகஸ்ட் 12

ஒரு கூடை பல்ப்

என்னோட அண்ணன் பொண்ணு MBA படிச்சிக்கிட்டு(ஹாஸ்டல்) இருக்கும்போது அவளை பாக்குறதுக்காக போகலாம்னு பிளான் பண்ணினேன். என்னை சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள்.

அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன். வாங்கப்பா அன்னிக்கு லீவ். என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.

சரி அவளோட Friends-சையும் பாத்து பேசிட்டு வருவமேன்னு அன்னிக்கு காலைல நல்ல குளிச்சிட்டு(இன்னிக்காவது குளிச்சியே), நல்லா ஷேவ் பண்ணிட்டு சென்ட் எல்லாம் போட்டுட்டு இப்ப இருக்குற அழகை விட  ஒரு படி மெருகேத்திட்டு  என் அண்ணன் மகளை பார்க்க (அவ Friend-சை பாக்கன்னு                      ஜொள்ளு) ஹாஸ்டல் போனேன்.

என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்., என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்). இப்ப வருவாங்கப்பா அப்டின்னு அவ சொல்ல மறுபடியும் பேசிக்கிட்டு இருந்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க. வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"

என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா?  ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க. ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

இருந்தாலும் நம்ம வள்ளுவர் சொன்ன வேதவாக்கை மனசுல வச்சிக்கிட்டு வீடு திரும்பினேன். வள்ளுவர் என்ன சொன்னார்ன்னா...

உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை  நேசி. அவளது தோழிகளை அல்ல..
.
.

65 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

// ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா? //

யூத்தாமா..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஹா ஹா ஹா... மொத்த முகத்திலும் கரியா...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அவங்களுக்கு உங்க முகத்த பாத்தவுடனையே தெரிஞ்சிருக்கும்... மொசப் புடிக்கிற மனுசன மூஞ்ச பாத்த தெரியாதா...

அருண் பிரசாத் சொன்னது…

விடு தல, உண்மையதான சொன்னாங்க இதுக்கு போய் Feel பண்ணலாமா?

அருண் பிரசாத் சொன்னது…

//அண்ணன் பொண்ணு MBA //
//சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள். //

அவ்வளோ வயசானவரா நீங்க?

ஓகே தாத்தா.

அருண் பிரசாத் சொன்னது…

ஞாயிறு கிழமை லீவ் - என்னா கண்டுபிடிப்பு

//காலைல நல்ல குளிச்சிட்டு//

என்னாது குளிச்சிட்டீங்களா? சும்மா, தலைக்கு தண்ணி தெளிச்சதைலாம் குளிச்சேன்னு சொல்லகூடாது

கருடன் சொன்னது…

//"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"//

அப்படியா டாடி கேட்டாங்க?

அருண் பிரசாத் சொன்னது…

//இப்ப இருக்குற அழகை விட ஒரு படி மெருகேத்திட்டு//

ஏற்கனவே அரவிந்தசாமி கலரு, மெருகேத்தராரு. என்ன செஞ்சாலும், தேறாது. இருக்குறதுதான் வரும்

கருடன் சொன்னது…

//சென்ட் எல்லாம் போட்டுட்டு //

பினாயில் எடுத்து மேல ஊத்திகிட்டு இந்த build -up...

கருடன் சொன்னது…

@அருண்
//ஏற்கனவே அரவிந்தசாமி கலரு, மெருகேத்தராரு. என்ன செஞ்சாலும், தேறாது. இருக்குறதுதான் வரும்//

காக்க குளிச்சாலும் வெளுக்காது சொல்றிங்களா?

அருண் பிரசாத் சொன்னது…

@ Terror

//அப்படியா டாடி கேட்டாங்க?//

அப்படியா தாத்தா கேட்டாங்க?னு சொல்லுங்க பாண்டி

அருண் பிரசாத் சொன்னது…

//நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்//
//"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"//

பின்னே ஷாக்கா இருக்காதா?

தாத்தாவை அப்பானு சொன்னா?

அருண் பிரசாத் சொன்னது…

//ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா? //

யாரு? யாரு? யாரு அது?

கருடன் சொன்னது…

//என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்).//

கடமை இல்ல பாஸ்.... காசு கொடுத்து சூனியம்...

செல்வா சொன்னது…

ஹை.. ஜாலி .. நான்தான் முதல் ..!!
வடை எனக்கே ..!!

அருண் பிரசாத் சொன்னது…

//ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க//

ஒரு பொண்ணு சொன்னாலும் குரூப்பா சொன்னாலும் உண்மை உண்மைதான்.

பொண்ணுங்க பொய் சொல்லமாட்டாங்கபா, நம்புங்க.

செல்வா சொன்னது…

///இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? ///
ஒரு கூடை சன் லைட் ..!!
ஒரு கூடை மூன் லைட் ..!!
ஹய்யோ சாமி ..

கருடன் சொன்னது…

@அருண்
//பொண்ணுங்க பொய் சொல்லமாட்டாங்கபா, நம்புங்க.//

அதுலயும் இந்த மாதிரி விசயத்துல அப்பா கிட்ட பொய் சொல்லவே மாட்டாங்க....

அருண் பிரசாத் சொன்னது…

//இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? //

சும்மாவா! தன் விணை தன்னை சுடும்.

எத்தனை பேருக்கு பல்பு குடுத்திருப்பீங்க. ஆண்டவன் இருக்குறான்யா.... (அய்யய்யோ.... அனானி வந்துட போறான்... எஸ்கேப் ஆகுடா அருண்)

அருண் பிரசாத் சொன்னது…

@ Terror

//அட நம்ப ரமேஷ்தான்........ இது 15 வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை...//

அப்போ... 15 முன்னாடியே ரமெஷ் தாத்தான்னா இப்போ அவரை எப்படி கூப்பிடுற்து பாண்டி

அருண் பிரசாத் சொன்னது…

//உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..//

எம்பூட்டு நல்லவன்யா நீங்க...

கருடன் சொன்னது…

//ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க.//

குருப்ப சொன்னாங்கள... அப்போ உண்மைதான்... ரமேஷ் காதுகிட்ட என்ன வெள்ளமுடி.... ச்சா என்ன காதுகிட்ட மட்டும் கருப்பு முடி...

அருண் பிரசாத் சொன்னது…

//உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..//

எம்பூட்டு நல்லவன்யா நீங்க...

அருண் பிரசாத் சொன்னது…

சரி பாண்டி, நம்ம லொள்ளு ஓவரா போகுது மத்ததெல்லாம் ரமெஷ் கமெண்ட் பப்ளிஷ் பண்ண பிற்கு வெச்சிக்கலாம்.

கருடன் சொன்னது…

@அருண்
//சரி பாண்டி, நம்ம லொள்ளு ஓவரா போகுது மத்ததெல்லாம் ரமெஷ் கமெண்ட் பப்ளிஷ் பண்ண பிற்கு வெச்சிக்கலாம்.//

பதிவுல எதாவது லைன் கலாய்க்க மறந்து இருந்த அதா ஜெய் தல பாத்துக்கும்... மத்தவங்களும் கும்மாட்டும்...

(Comment moderation போட்டாலும் பிளான் பண்ணி கும்மி அடிக்கும் சங்கம்..)

சௌந்தர் சொன்னது…

சரி சரி விடுங்க விடுங்க இதுக்கு போய் இப்படி குறள் எல்லாம் சொன்னா எப்படி..

க ரா சொன்னது…

ரசித்து சிரித்தேன் நண்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@arun and teror
romba nallavanga neenga

settaikkaran சொன்னது…

//உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..//

இந்த வள்ளுவர் யாரு? அவர் எழுதின புத்தகம் இப்போ அவுட்-ஆஃப்-பிரிண்ட்டோ? யூத்தாம்....! :-)

Praveenkumar சொன்னது…

அம்புட்டையும் மறைக்காம எழுதயிருக்கீங்க....! சிரிக்க வைத்தது சூப்பர். (அந்த நேர்மைக்காவது அண்ணனு சொல்லியிருக்கலாம்)...

கடைசியில சொன்ன வரிகள் சிந்திக்க வைத்தது.

Jey சொன்னது…

ஹை ஹை ஹை ...

Jey சொன்னது…

///என்னை சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள்.///
ஏழரை கழுதை வயசான அப்பானுதான் கூப்பிடுவாங்க... என்னய்யா வர வர உம்ம காமெடிக்கு அளவே இல்லாம போய்ட்டிருக்கு...

Jey சொன்னது…

//அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன்//

பிளனெல்லாம், பலமாத்தான் போட்டிருக்கீரு.....( ஆக இப்பயும் நீங்களாத்தான்... ஜொள்ளுக்கி ரெடியாயிருகீரு...)

Jey சொன்னது…

// என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.//

நாம மட்டும் சித்தாப்பனு சொன்னா பத்தாது, குருப்பயே கூட்டி சொல்லச் சொன்னாதான் இந்த மனிஷன் திருந்துவாருன்னு, அங்கயும் ஒரு திட்டம் போட்ருக்காக.... இது தெரியாம தல போய் மாட்டிருக்கு ( என்ன இருந்தாலும் சின்ன வயசுலேர்ந்து பயபுல்ளய கவனிச்ச அம்மனியில்லையா..., அதா ஒரு கோட்டத்தையே தயார் பண்ணிருக்கு..)

Jey சொன்னது…

//காலைல நல்ல குளிச்சிட்டு//

நம்பிட்டோம்... ஏன்னா போர பர்ப்பஸ் அப்படி..

Jey சொன்னது…

//என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்.///

கண்ணு ரெண்டும் வேற எங்கயோ பராக்கு பாத்திண்டிருந்திருக்குமே..

Jey சொன்னது…

///கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க.///

இப்பதான் ஆட்டம் களை கட்டுது...(தல பல்பு வாங்க ரெடியாயிருப்பீங்களே..)

Jey சொன்னது…

//வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ///

என்னப்ப டேமேஜர் ரமேஷூ..., அவங்க தத்தானு கூபிடலைனு இவ்வளவு ஷாக்கா!!!!, பாவம், குளிச்சி பவுடர் பூசி கொஜ்சம் மேக்கப் போடதுனால ஏமாந்துட்டாங்க போல... நீரு கில்லாடிதாம்ய்யா...

Jey சொன்னது…

///என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா?///

ஹே.. ஹே... ஹேய்... சிரிச்சி முடியல ராசா... வர வர உம்ம காமெடி உச்சத்துக்கு போய்ட்டிருக்கு....

Jey சொன்னது…

///ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..///

எனக்கென்னமோ நீரு மேக்கப் போட்டு தாத்தானு சொல்லவிடாம, அப்பானு சொல்லவிச்சி ஒத்த ஆளா அத்தனை பேருக்கும் பல்பு குத்தாஆரிதான் தெரியுது...

Jey சொன்னது…

///உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..///

யோவ் உண்மையிலேயே தில்லாலங்கடிதாம்ய்யா... நல்லா கும்முவாங்குரா மாதிரி பதிவெழுதிட்டி கடைசி நாலு வரியில நெஞ்ச நக்கி தப்பிசிடுரீரு... என்னமோ போய்யா...
(அப்பாடா, காலியிலேர்ந்து நெட் பக்கம் வரமுடியலைனு ரொம்ப ஃபீலிங்க இருந்தது.... இன்னிக்கு நல்லா போய் தூங்கலாம்...)

பெயரில்லா சொன்னது…

@Ramesh
//@arun and teror
romba nallavanga neenga//

அருண் மற்றும் டெரர்.. உங்கலுக்கு பிடிக்கலன விட்டு விடுங்ள். அதை விட்டு விட்டு ரமேஷ் மற்றும் எங்கள் மனதை புன்படுத்த வேண்டாம்.

இப்படிக்கு
அனனியாக வந்து அலபரை கொடுக்கும் - டெரர்ர்ர்ர்ர்ர்ர் பாண்டி...

அருண் பிரசாத் சொன்னது…

@ டெரர்

எலேய்... நீதானா அந்த அனானி, கழுகு பக்கம் போய்டாத கொலைவெறில இருக்காங்க

சீமான்கனி சொன்னது…

இடம், பொருள், ஏவல், பில்லி, சூனியம் அறிந்து ஜொள்ளு விடனும் அப்பா....ஹி...ஹி...ஹி...

ஜில்தண்ணி சொன்னது…

செம பல்பாஆஆஆஆஆஆஆஅ

அண்ணே இப்ப அந்த பக்கம் போயிடாதீக வாங்க தாத்தான்னு சொல்லிடப் போதுவோ :)

யூத்தாமாம் யூத்து :)

ஜில்தண்ணி சொன்னது…

நல்ல வேலை அண்ணே

அந்த கரடி பொம்ம வேணும்னு கேக்காம விட்டுதுவோலே :)

பனித்துளி சங்கர் சொன்னது…

/////என்னப்பா நல்லா இருக்கீங்களா?"
என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே//////


நல்லவேளைக்கு நண்பரே தாத்தானு சொல்லாம விட்டாங்களே ! அதுவரைக்கும் சந்தோசப்படுங்க .
பதிவின் ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது . உலகத்தில் மிகவும் சிரமமான ஒன்று அனைவரையும் சிரிக்க வைப்பதுதான் . அதையே மிகவும் எளிதாக செய்யும் உங்களுக்கு எனது வாழத்துக்கள் .

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

யோவ் யூத்து பல்ப் எல்லாம் பிரகாசமா எரிஞ்சுருக்கு!

GSV சொன்னது…

//உலகத்தில் மிகவும் சிரமமான ஒன்று அனைவரையும் சிரிக்க வைப்பதுதான் . அதையே மிகவும் எளிதாக செய்யும் உங்களுக்கு எனது வாழத்துக்கள் .// Repetuuuuuuuuuuuuuuuuuuuuu

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க ரமேஷ் யூத்துதான் யூத்துதான் யூத்துதான்....
விட்டு தள்ளு ரமேசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இந்திரா வாங்க முதல் போனி நீங்கதான்.

@ அருண் & டெரர் அத்தனை கமெண்டுக்கும் reply பண்ணினா எனக்கு ஆயுசே முடிஞ்சிடும். Comment Modration போட்டும் அடங்க மாட்டேங்கிறீங்களே. எனக்கும் நேரம் வரும் அப்ப வச்சிக்கிறேன்..

@ வெறும்பய ஹிஹி

//அவங்களுக்கு உங்க முகத்த பாத்தவுடனையே தெரிஞ்சிருக்கும்... மொசப் புடிக்கிற மனுசன மூஞ்ச பாத்த தெரியாதா...//

நோ bad வோர்ட்ஸ் ப்ளீஸ்

//ஹை.. ஜாலி .. நான்தான் முதல் ..!!
வடை எனக்கே ..!!//

செல்வா தொப்பி தொப்பி...

@ சௌந்தர் நன்றி. விடுங்க பாஸ். குரல் சொல்றது தப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இராமசாமி கண்ணண் நன்றி

//
இந்த வள்ளுவர் யாரு? அவர் எழுதின புத்தகம் இப்போ அவுட்-ஆஃப்-பிரிண்ட்டோ? யூத்தாம்....! :-)//

@ சேட்டைக்காரன் என்னோட அக்கவுண்டுக்கு 200$ அனுப்பு தல நான் பிரிண்ட் தரேன்..

@ பிரவின்குமார் நன்றி

@ Jeyவயசான உங்களை சொல்லிருந்தா பீல் பண்ணிருக்க மாட்டேரு. நான் எப்பவுமே யூத் தான் ராசா...

//இப்படிக்கு
அனனியாக வந்து அலபரை கொடுக்கும் - டெரர்ர்ர்ர்ர்ர்ர் பாண்டி...//

ஏய் டெரர் உன்னை பூக்குழி இறக்கினாதான் சரியா வரும்....

@ சீமான்கனி & ஜில்தண்ணி - யோகேஷ் சொல்லுங்க பெரியண்ணா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நல்லவேளைக்கு நண்பரே தாத்தானு சொல்லாம விட்டாங்களே ! அதுவரைக்கும் சந்தோசப்படுங்க .
பதிவின் ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது . உலகத்தில் மிகவும் சிரமமான ஒன்று அனைவரையும் சிரிக்க வைப்பதுதான் . அதையே மிகவும் எளிதாக செய்யும் உங்களுக்கு எனது வாழத்துக்கள் .//

நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫. & GSV இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

//யோவ் யூத்து பல்ப் எல்லாம் பிரகாசமா எரிஞ்சுருக்கு!//

விடுங்க மாப்பு ...

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) நன்றி

அனு சொன்னது…

இந்த வயசுலயும் ஒரு 40 வயசு இளைஞர் மாதிரி இருக்கீங்க.. உங்களைப் பாத்தா அப்படி சொன்னாங்க சித்தப்பா??

சரி விடுங்க.. ஒரு பதிவுக்கு மேட்டர் கிடைச்சதேன்னு சந்தோஷப் படுங்க...

பெயரில்லா சொன்னது…

Rompa nala kekkanum-nu irunthen..
athu enna "rompa-nallavan(sathiyama)" ????

rompa kevalama.. sathiyama... attu madhri irukku onka name suffix.

But unlike ur name prefix, ur blog is interesting. Keep it up.

மங்குனி அமைச்சர் சொன்னது…

உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை நேசி. அவளது தோழிகளை அல்ல..///

வேற வழி , இப்படி சொல்லித்தான் சமாளிக்கணும்

மங்குனி அமைச்சர் சொன்னது…

"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"////

இதெல்லாம் பாக்கும் போது தான் கடவுள் இருக்கிறார் அப்படிங்குற நம்பிக்கை வருது

மங்குனி அமைச்சர் சொன்னது…

இந்திரா கூறியது...

// ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா? //

யூத்தாமா..////

ஒன்னும் இல்லை சும்மா காபி, பேஸ்ட் பண்ணி பாத்தேன்

Maduraimohan சொன்னது…

விடுங்க பாஸ் இதெலாம் சகஜம் :)

கருடன் சொன்னது…

@பெயரில்லா சொன்னது…
//Rompa nala kekkanum-nu irunthen..
athu enna "rompa-nallavan(sathiyama)" ????

rompa kevalama.. sathiyama... attu madhri irukku onka name suffix. //

அண்ணாச்சி ரமேஷ் கேவலமா இருந்தலும் ஆம்பல சிங்கம்.. பாருங்க பெயர் சொல்லி இருக்கு... அப்புறம் உங்கள பத்தி இந்த கழுகு கேவலமா பேசி இருக்கு... அங்க பேய் இரண்டு கும்மு கும்முங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Thanks for all. Im not able to access internet.

Nonsense peyarillaa ill kill u later.

sent from mobile.

Unknown சொன்னது…

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்---

nanumthan..enta blog padichutu..

Avvna neeeu...

super...

Chitra சொன்னது…

என்னப்பா, இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... பாவம் சார், நீங்க!

Unknown சொன்னது…

enga..nan photoa comentsai kanum???

vinu சொன்னது…

உன் நண்பனை நேசி, அவனது தோழிகளை அல்ல


appudeenum eduthukkaalaama

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது