Horoscope

ஞாயிறு, மே 8

எங்கேயும் காதல்!!!!


 1.ஆலந்தூரில் +2 படிக்கும் மாணவன் அருணுக்கும் அதே வகுப்பை சேர்ந்த ராணி என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது: பள்ளிக்கூட காதல்

2. சேலத்தில் உள்ள முக்கியமான கல்லூரியில் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணுக்கும், கிருஸ்துவ மதத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெற்றோர்கள் எதிர்ப்பு: கல்லூரி காதல்

3. சிவகாசி அருகில் முப்பத்தி ஏழு வயதான கந்தன் என்பவர் கொத்த வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்த இடத்தில் பிச்சையம்மா என்ற பெண்ணுடன் காதல்: ஏழைக் காதல்

4. IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது: IT காதல்

5. நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்: சினிமா காதல்

6. கரூர் அருகே நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பவர் அதே ஊரை சேர்ந்த வாணி என்ற கல்லூரிப்பெண்ணை காதலித்து வருகிறார். கணேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது: கள்ளக் காதல்

# விமர்சனம் படித்தும் கொழுப்பெடுத்து மொக்கை படத்துக்கு போய் மெண்டல் ஆனோர் சங்கம். எங்களுக்கு கிளைகள் ஏதும் கிடையாது!!!

# எங்கேயும் காதல்- பிரபுதேவா & நயன்தாராவுக்கு மட்டும்..

புதன், ஏப்ரல் 27

கோ விமர்சனம்


கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன். இந்த லிங்க் எல்லாம் கிடைச்சது. 


என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா  எழுதுறது.

ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை(ஒரு வேலை உங்க பதிவை படிக்க அறிவாளிங்க மட்டும் வர்றாங்க போல). இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு தத்துவம் பேசிக்கிட்டு பித்து பிடிச்சு அலையுற ஒருத்தன் வேணும்கிறது. அண்ணனோட விமர்சனம் படிங்க. எவ்ளோ அழகா வாந்தி எடுத்திருக்கார் சீ விமர்சனம் எழுதிருக்கார். 

சீனே இல்லாத நல்ல படத்தை 18+ ன்னு போட்டு உங்களால விமர்சனம் எழுத முடியுமா? உலகத்துல இப்படி ஒரு விமர்சனம் முடியுமா? என்னது அந்த லிங்கு வேணுமா? அட போங்க பாஸ். போய் இந்த வீடியோ பார்த்துட்டு புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..

 
இந்த வீடியோவுக்கும் அந்த பதிவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நம்புங்க. ப்ளீஸ். ஹிஹி..
...

ஞாயிறு, ஏப்ரல் 24

இது எந்த ஊர்..சிங்கப்பூர்!!!

மேகம் மாலை சூட
மின்னல் ஒளி வீச
இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க

பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

போலீஸ் வந்த சந்தோஷத்தில் மிகவும் மகிழ்ச்சியாக லிட்டில் இந்தியா வந்து போலீஸ் மற்றும் அவரது நண்பர் குடும்பத்திற்கும் ஓசி சோறு வாங்கி கொடுத்தார் பிரபல பதிவர் வைகை. 

இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.

மறுநாள் வைகை, வெறும்பய ஜெயந்த், மாணவன் சிம்பு, அன்புடன் நான் கருணாகரசு, ஜெயந்தின் நண்பர், போலிசின் நண்பன் விஜய், தேவாவின் தம்பி பிரேம் மற்றும் போலீஸ் லிட்டில் இந்தியாவில் ஒரு வரலாறு, புவியியல், சமூகவியல்,அறிவியியல் காணாத சந்திப்பு நடத்தினர். இதுவரை இப்படி ஒரு பதிவர் சந்திப்பு நடந்ததில்லை என்று பதிவுலக வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,கருணாகரசு..
 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,வெறும்பய ஜெயந்த்..

 தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,ஜெயந்த்..

தேவாவின் தம்பி டீ வாங்கி கொடுத்தாரு. சாப்டு போகலாம்னு சொன்னாரு. வெயிட் பண்ணலாம்னு போலீஸ் நினைத்தார். மாணவனும், வைகையும் கூப்பிட்டு போயிட்டாங்க. சாப்பாடும் வாங்கி தரலை(எல்லோரும் ஹோட்டல் போன நேரம் ஹோட்டல்ல சாப்பாடு காலி. அவ்வ்வ்வ்வ்)
சாப்பாடு காலியான ஹோட்டல் வாசலில் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்... 
 காபியுடன் வரும் சர்வரை பார்த்த மகிழ்ச்சியில்..

அன்று மாலை சிங்கப்பூரில் வெறும்பய ஜெயந்த் செலவில் நடத்தப்படும் டாஸ்மாக் ஒயின்ஸ்க்கு அண்ணன் வைகை தலைமையில் போனோம். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வரும்போது மாணவனை மட்டும் காணவில்லை. பார்த்தால் தனியாக போய் அந்த ஒயின் ஷாப்பில் உள்ள பிகரிடம் போன் நம்பரை அந்த பிகரின் காலில் விழுந்து கெஞ்சி வாங்கி வந்தார். இப்போது தினமும்  ரெண்டு மணிநேரம் கடலை போடுவதாக தகவல் கிடைக்கிறது. 

 அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..
பின் இரவு சாப்பாடுக்கு போகும்போது வைகை திடீர்னு ஒரு அதிர்ச்சியான செய்தி சொன்னார். அது என்னன்னா "நான் என் பர்சை மறந்து வச்சிட்டு வந்திட்டேன்". நல்லவேளை மாணவனும்,ஜெயந்தும் பில் பே பண்ணிட்டாங்க. இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!!!

எங்கே வைகை போட்டோ என்று கேக்குறீங்களா. எவ்ளோ பிரைட்டா லைட் போட்டு போட்டோ பிடிச்சாலும் அவர் டார்க்காத்தான் தெரியுறாரு. என்ன பண்றது. ஹிஹி.

....





 

புதன், ஏப்ரல் 13

சிங்கப்பூரில் வேட்டை ஆரம்பம்

இந்தியாவுல எல்லோரும் ஓட்டு போட்டாச்சா? ரைட்டு. வாக்கு பதிவு நல்ல படியா முடிஞ்சது. இங்கயும் ரொம்ப போரடிக்குது. அதான் சிங்கப்பூர் போய் அங்க உள்ள திருட்டு பசங்களான

மாண்புமிகு மாணவன்(ஏதாச்சும் சொன்னா சேவைய நிறுத்திடுவானே. அதான் மரியாதை. ஹிஹி)
வயதான வைகை
வெட்டியான வெறும்பய

இவங்களை வேட்டையாடி கைது செய்ய சிரிப்பு போலீஸ் இன்னும் சில மணித்துளிகளில் சிங்கப்பூர் கிளம்புகிறார். அவர் அங்கு வரும்போது அவருக்காக விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...அடுத்த வாரம் சந்திப்போம்..
....

 

திங்கள், ஏப்ரல் 11

சேலத்தில் நான்..

ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். போகும்போது பாசக்கிளிகள் வடிவேலு காமெடி பார்த்தேன். அதுல அல்வா வாசு வடிவேலுகிட்ட புதுசா ஹாஸ்பிடல் திறந்திருக்கோம் வந்து ஒரு ஊசி போட்டுட்டு போங்கன்னு சொல்லுவாரு. நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது? 

நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை. அப்புறமா வெங்கட்டுக்கு போன் பண்ணினேன். 9 மணிக்கு போன் பண்ணி கூப்பிட்டா 12 மணிக்கு வந்து சேர்ந்தார். என்ன ஒரு நேரம் தவறாமை. அவருடன் பதிவர் "சேலம் தேவா" அவர்களும் வந்தார்.
நானும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

வெங்கட் ராமராஜன் ரசிகராம். ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை அணிந்திருந்தார். இவரை கண்டு பிடித்து தருபவர்களுக்கு  இவரை பார்த்து ரோட்டில் மாடுகள் மிரண்டு ஓடியதாக கேள்விப்பட்டேன். 
சேலம் தேவாவும் ராமராஜன் கலர் சட்டையில் வெங்கட்டும்

மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்பிட்டு நான்தான் பணம் தருவேன் என்று வெங்கட் கெஞ்சி கதறி என் கையில் இருந்த பில்லை புடுங்கிக் கொண்டார். அவர்தான் பில் பே பண்ணினார்.
பில் கொண்டுவந்த சர்வரை மிரட்டிய வெங்கட்-ராமராஜன் கலர் சட்டையில்

பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)பதிவர் சந்திப்பு இனிமையாக முடிந்தது.
நானும் சேலம் தேவாவும்

முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடிமகன்களும் நாளைக்கு மறக்காம போய் ஓட்டு போடவும். எப்படி ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?

முக்கிய குறிப்பு 2: சேலம் சித்த வைத்தியரிடம் வாங்கிய லேகியம் சாப்பிட்டு நண்பர்கள் டெரர்,பன்னிகுட்டி, மாலுமி மற்றும் நரி மிகவும் நலமாக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
..


சனி, ஏப்ரல் 9

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி நாளை காலை சேலம் வருகிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர,என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். என் நம்பர்: 9791036735.

இது கோகுலத்தில் சூரியன் வெங்கட்க்கு:

அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என VKS சார்பில் எச்சரிக்கை செய்கிறேன். என்னை வரவேற்று பேனர் எதுவும் கட்டவேண்டாம். ப்ளீஸ். 

டெரர் கும்மி நண்பர்களுக்கு: சேலம் சித்த வைத்தியரிடம் லேகியம் வேண்டும் நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.

ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து  பேரை சொல்லிட்டு பணம் குடுங்க..

டெரர் 250.,
மங்குனி 250..
பன்னிக்குட்டி 500..

அட சண்டை போடாம வாங்க பக்கிகளா...
ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல..
...

வெள்ளி, ஏப்ரல் 1

பவர் ஸ்டார் சீனிவாசனை புறக்கணித்த சிபிக்கு கண்டனங்கள்

இப்ப எலெக்சனைவிட  நம்ம புது டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் இப்போ ஹாட் டாபிக். அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை(இந்த படத்துக்கு டிக்கெட் தேவையா?படம் பார்த்தாலே டிக்கெட் வாங்கிடலாமே)

எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.
 (பேஷன்ட்டுக்கு தூரப்பார்வை செக் பண்ணும் டாக்டர்)

இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின்  பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.

ஆனந்த விகடனில் அவரது பேட்டி:

எந்த தைரியத்தில் நீங்க நடிக்க வந்திருக்கீங்க?

நம்பிக்கை சார். நம்பிக்கை. நடிக்கணும்கிற வெறியோட(கடிச்சு வச்சிருவாரோ?) இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து இருக்கேன். இந்த பவர் ஸ்டாரின் பவர(500W இருக்குமா?), என்னோட விஸ்வரூபத்தை வெயிட் பண்ணி பாருங்க.
(படம் பார்த்துட்டு காசு போச்சேன்னு மக்கள் எப்படி அழுவாங்கன்னு டெமோ காட்டும் டாக்டர்)


அக்குபஞ்சர் டாக்டர் ஆனா உங்களுக்கு மக்கள் மீது அப்படி என்ன கோபம்?

ஏன் எல்லோரும் இப்படியே கேட்குறீங்க? எப்பவுமே "என் வழி தனி வழி"ன்னு புரிஞ்சுக்கோங்க.  சினிமா சரித்திரத்தில் எனக்குன்னு ஒரு இடம் வேணும்(டேய் அந்த பாத்ரூம ரெடி பண்ணு) . "ஆனந்த தொல்லை"ன்னு ஒரு படத்தில் நான் பண்ற வில்லன் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது(விடுங்க பாஸ் உங்க படம் பார்த்த பிறகு அவனவன் படம் பாக்குறதையே நிப்பாட்டிடுவான்). 

"திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). "வெயிட் அண்ட் சி".

"திருமா" படம் "தசாவதாரம்" கமலுக்கு போட்டியா?

ம்ஹூம்.இல்லவே இல்லை. இந்த பவர் ஸ்டாருக்கு போட்டின்னா, அது சூப்பர் ஸ்டார் மட்டும்தான்(பாஸ் மேக்கப் போடாம இருக்குற சூப்பர் ஸ்டார் பத்திதான சொன்னிங்க). அந்த ரேஞ்சுக்கு நானும் வரணும்னு வைராக்கியம் உள்ளுக்குள்ள உறைஞ்சு  கிடக்கு.


 யாரோ ஒரு நடிகையை செட்டப் பண்ணி வெச்சு இருக்கீங்கலாமே?

சும்மா கிளப்பிவிடாதீங்க பாஸ். என் மனசுக்கு யாரை பிடிச்சாலும் நான் வெளிப்படையா சொல்லிடுவேன். சினிமா உலகத்தில் எனக்கு பிடிச்ச ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் மட்டும்தான். நிச்சியம் அவங்க என்கூட சேர்ந்து நடிப்பாங்க பாருங்க(ஹிஹி. அவங்க ஆயாகூட நடிக்க மாட்டாங்க. ரஜினியே படையாப்பாவுல இருந்து ட்ரை பண்ணி எந்திரன்லதான் கிடைச்சாங்க. இருந்தாலும் உங்கள் தன்நம்பிக்கைய பாராட்டுறேன்)
(அடுத்த எலெக்சன்ல எல்லோருக்கும் என்னோட ஆறு படங்கள் அடங்கிய புளூ-ரே இலவசம்)

இந்த ஆனந்த தொல்லைகளுக்கு எல்லாம் உங்களோட எதிர்கால அரசியல் பிளான்தான காரணம்?

ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க(போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு-இது விகடன் கமெண்ட்)(ரசிகர்கள் இருக்காங்க. உங்களுக்கு இருக்காங்களா? அத சொல்லுங்க பாஸ்). குறிப்பா பெண்களோட ஆதரவு எனக்கு நிறைய இருக்கு. இது போதும் எனக்கு. 

டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்குன்னா பேட்டி எடுத்தவன் இன்னும் நல்ல நிலைமைல இருப்பாருன்னா நினைக்கிறீங்க?

டிஸ்கி 2: எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன். பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. 
...

வியாழன், மார்ச் 31

சரவெடி

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? என்னடா உலகம் இது. நல்லவனை எல்லாம் தேடமாட்டாங்க. ஊர்ல உள்ள அயோக்கிய பயலுக(பன்னிகுட்டி,டெரர் மாதிரி ஆளுங்க காணோம்னா உடனே தேடுவாங்க) நான் காணாம போனதும் எனக்கு ஆணி அதிகம்ன்னு தப்பா நினைச்சிடாதீங்க. போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. 

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம்  இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)
=========================================================
பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப 
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா?
ஹிஹி

இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல) மற்றும் அவங்க பொண்ணு தூயாவை ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தேன்.

காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. சிபி வேற போன் பண்ணி என்னய்யா ஓசி சாப்பாடான்னு கேட்டு வெறுப்பேத்திட்டார். சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.

=========================================================
வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.

வடிவேலு எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அவர்களை வா, போ அப்டின்னு ஒருமையில்தான் கூப்பிடுவார்(ரஜினி,அர்ஜுன்,கமல், அஜித்,விஜய்..). ஆனா விஜயகாந்தை மட்டும் வாங்க போங்கன்னுதான் சொல்லுவார்(தவசி,எங்கள் அண்ணா). அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)
=========================================================
அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். யாராச்சும் பொன்னர் சங்கர் பாட்டு கேட்டீங்களா?
=========================================================
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).
=========================================================
சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...
கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...
சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்....   
ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive...
=========================================================

திங்கள், மார்ச் 28

மணிஷர்மாவின் ஏமாற்று வேலை

மணிஷர்மா தேவாவின் சிஷ்யன் அப்டின்னு  நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா அவரு காப்பி அடிக்கிறதுல தேவாவையே(நம்ம பதிவர் தேவா இல்லை. தேனிசை தென்றல் தேவா) மிஞ்சிட்டாரு.

ஒரே பாட்ட எத்தனை படத்துல போடுவாருன்னு தெரியலை. இந்த மூணு பாட்டையும் கேட்டு பாருங்க.

ஸ்டாலின்(சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம்)



சிங்கம் புலி(ஜீவா நடித்தது)




மாப்பிள்ளை(தனுஷ் நடித்தது)




சிங்கம் புலி,மாப்பிள்ளை ரெண்டும் இப்ப உள்ள படங்கள். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரே பாட்ட பல படங்கள்ல போடுவாரு இவரு. இவரோட பாட்டு எல்லாமே தெலுங்கில் இருந்து தமிழ் இல்லைன்னா தமிழ்ல இருந்து தெலுங்கு இப்படித்தான் இருக்கு.

ஹலோ மணிஷர்மா உங்களுக்கு கைவரம் சரக்கு இல்லன்னா எங்க டெரர் பதிவே எழுதாம பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிற மாதிரி நீங்களும் மியூசிக் பண்ணாம மியூசிக் டைரக்டர்ன்னு சொல்லிட்டு திரிங்க. நாங்க ஒன்னும் கேட்க மாட்டோம். ஆனா ஒரே பாட்ட பத்து படத்துல போட்டு உயிரை வாங்காதீங்க. ப்ளீஸ்..
...

ஞாயிறு, மார்ச் 13

செல்வா கதைகள்

செல்வா மிகப்பெரிய அறிவாளி என்பது செல்வா கதைகள் படிக்கும் எல்லோருக்கும் தெரியும். செல்வா ஒரு நாள் வெளியூரிலிருந்து வரும் அவரது நண்பர் இம்சை பாபுவை வரவேற்க ரயில்வே ஸ்டேஷன் சென்றார். 

அங்கு வாசலில் இருந்த ரயில்வே ஊழியர் செல்வாவிடம் பிளாட்பாரம் டிக்கெட்க்கு மூன்று ரூபாய் கேட்டார். அதற்க்கு செல்வா நானும்,பாபுவும் பிச்சை எடுக்குற பிளாட்பாரம்ல எங்களுக்குத்தான் காசு போடுவாங்க. இங்க நீங்க கேக்குறீங்களே. நீங்கதான் இந்த ஏரியா  பிச்சைக்காரரா என்று கேட்டார் அப்பாவியாக.

அதற்க்கப்புறம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல பாபுவும்,செல்வாவும் கதற கதற அடிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

நீதி: செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...
...

ஞாயிறு, மார்ச் 6

பதிவுலகிற்கு விடிவுகாலம்

எலெக்ஷன் வர போகுது. இனி நம்ம தலைவர்கள் கலர்கலரா விடுற ரீலா காதால கேட்கலாம். ஆனா அதெல்லாம் நடக்காது. இருந்தாலும் நமக்கும் பொழுது போகணும்ல. அவங்க சொல்ற பொய்ய ரசிச்சு கேட்போம். நம்ம பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க. என்னன்னு கேட்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)

சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்ல வாங்குற காசுக்கு வேலை செய்வேன்.முக்கியமா பிட்டு பட விமர்சனம் எழுத மாட்டேன். எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன். முக்கியமா ப்ளாக்ல பிகர் படம் போட்டு டிஸ்கி எழுத மாட்டேன்(அய்யயோ ட்விட்டர்ல உள்ளதை எல்லாம் சேத்து பதிவா போடுவாரே)

அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்(அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி

கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன். (செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?)

டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன். (ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!!)

பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்.(இத நீ மறந்திட மாட்டியே

கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி  VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க)

ப்ரியமுடன் வசந்த்: இனிமே வித்தியாசமா யோசிக்காம மொக்கை போஸ்ட் மட்டுமே போடுவேன்.(மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?)

வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?
வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?)

மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம்.(போரம்ல உங்க சேவை தொடரும்ல?)

சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
........


வியாழன், மார்ச் 3

சிங்காரச் சென்னை

முஸ்கி: இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்

 பாரீஸ் கார்னர் 

 அந்தக்கால ஆம்புலன்ஸ் 

 மவுன்ட் ரோடு-1905

 அரசினர் இல்லம் 

 பர்மா பஜார் ரோடு-1915

 ஹை கோர்ட்டு 

 எக்மோர்-1920

 ஹை கோர்ட்டு 

 ஹை கோர்ட்டு 

 கபாலீஸ்வரர் கோவில்-1906

 கூவம்-1925

 ஹை கோர்ட்டு-1895
 
மெரீனா  பீச்

 மெரீனா-1890

 நேப்பியர் பாலம்-1895

 பைகிராப்ட் ரோடு-1890

 
 எஸ்பிளானட்-1910

 மவுப்ரே ரோடு-1885

டிஸ்கி: நெட்டில் கண்ணில் பட்டது. ரொம்ப சூப்பர். இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? 
....

சனி, பிப்ரவரி 26

பிரபல பதிவரின் ஏமாற்று வேலை-ஒரு பதிவரின் கண்ணீர் கதை

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார். ஆகா இந்த மாச கோட்டாவுக்கு ஓசி சோறு கிடைக்க போகுதேன்னு ஆசைப்பட்டு சரின்னு சொன்னேன். நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார். 

(அருண்,ஆயிரத்தில் ஒருவன் மணி)

நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன். நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).
(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). பத்து நிமிசத்துல ஜெய் அண்ணன் வந்தார். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் மணி, அருண் பிரசாத் வந்தனர். நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).
(நரி)

அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

பில் வந்தது. வழக்கம் போல யாராவது கொடுப்பாங்க அப்டின்னு நினைச்சேன். நரி "மச்சி எனக்கு கலெக்சன் ஆகலை. காசும் இல்லை" அப்டின்னு சொல்லிட்டான். ஆயிரத்தில் ஒருவன் மணிகிட்ட வாங்க முடியாது(பாவம் பலியாடா வந்து மாட்டிக்கிட்டாரு). ஜெய் அண்ணன் பர்சையே எடுத்துட்டு வரலை.

அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)

மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?

வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.
..

திங்கள், பிப்ரவரி 21

" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!

முஸ்கி: டிஸ்கியை படிக்கவும்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!

உலக கோப்பை ஆரம்பிச்சாச்சுல்ல

முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு
அவங்க நல்ல மனசை பாராட்டி சேர்த்துக்க
வேண்டிதா போச்சு)

போட்டி என்னான்னா..

உலககோப்பை லீக் ரவுண்ட்ல ஒரளவு
சமபலம் பொருந்திய Teams மோதும்
15 Matches இங்கே கொடுத்து இருக்கோம்..

இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்..

நீங்க கணிக்க வேண்டிய Matches..

1. Feb 24 - South Africa Vs West Indies

2. Feb 25 - Australia Vs New Zealand

3. Feb 26 - Sri Lanka Vs Pakistan

4. Feb 27 - India Vs England

5. Mar 04 - Bangladesh Vs West Indies

6. Mar 05 - Sri Lanka Vs Australia

7. Mar 06 - England Vs South Africa

8. Mar 07 - Kenya Vs Canada

9. Mar 08 - Pakistan Vs New Zealand

10. Mar 12 - India Vs South Africa

11. Mar 17 - England Vs West Indies

12. Mar 18 - Sri Lanka Vs New Zealand

13. Mar 18 - Ireland Vs Netherland

14. Mar 19 - Australia Vs Pakistan

15. Mar 20 - India Vs West Indies


விதிமுறைகள் :

1. ஒரு சரியான விடைக்கு ஒரு Point.
So., அதிக Points எடுத்தவர் Winner..

2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )

3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..

4. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
போடவும்., ( கணிப்பு Comment மட்டும்
Publish செய்யப்படும்.. )

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

6. Last Date : FEB 24 , மதியம் 12 மணி.

7. 15 கணிப்பையும் ஒரே Comment-ல்
போட வேண்டும்..

8. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

9. Anony Comment ஏற்றுக்கொள்ளபடாது.

10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

11. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு.  அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. வெங்கட்டை கலாய்ப்பவர்கள் இங்கு கலாய்க்கலாம்.No Comment moderation. Enjoyyyy. உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும்.
..

வெள்ளி, பிப்ரவரி 18

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு

நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. அவ்ளோ வேலை இப்போ. வீட்டுக்கு வந்து ப்ளாக் பக்கம் வரலாம்னு பார்த்தா வேளச்சேரி ஏரியாவுல ரோடு அகலப்படுத்துறேன்னு சொல்லி நைட் BSNL Connection Wire-ரையும் சேர்த்து கட் பண்ணிடுறாங்க.

ஒரு வாரமா வீட்டுலையும் நெட் சரியா வேலை செய்யலை. சரி ஒரு பிரபல பதிவரின் வளர்ச்சியை தடுக்க கவர்மெண்டே சதி செஞ்சா என்ன பண்ண முடியும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். அவனோட Engagement-க்கு. இன்னிக்கு ட்ரீட் தர்றேன்னு சொன்னான். சரி இன்னிக்கு ராத்திரி ஓசி சாப்பாடு சாப்பிடலாம்னு மதியத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. 

இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். 

நான்: இல்லடா என்னோட இன்னொரு பிரண்டு பாரின்ல இருந்து வந்திருக்கான் அவனோட ட்ரீட் இன்னிக்குன்னு 

பிரண்டு: அப்டின்னா உள்ளூர்காரன் கூப்டா வர மாட்ட அப்டித்தான?

நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி

பிரண்டு: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ(Just miss)..

நான்: விடு விடு. இன்னொரு நாள் ட்ரீட் கொடு

பிரண்டு: இன்னிக்கு வந்தா வா. இல்லைன்னா ட்ரீட் கிடையாது.   

சரி அங்க போய் சாப்பிட்டு இவன் ட்ரீட்டுக்கு நாளைக்கு வருவோம்னு பார்த்தா இன்னிக்கு நைட் இவன் துபாய் கிளம்புறான். 

அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? 
அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

டிஸ்கி: அடுத்த மாசம் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்). ஆனா அவனுக ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே ட்ரீட் தான் கொடுப்பாங்களாம். இவனுகளை என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?
...

புதன், பிப்ரவரி 16

மளிகைக் கடை பாக்கி

பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760
பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120
அரிசி(சோத்துக்கு)- Rs.900
கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)- Rs.400
வெங்காயம்(நாங்களும் பணக்காரன்னு காட்டனும்ல)- Rs.300
கடலை எண்ணெய்(இதுவும் சத்தியமா கடலை போட இல்லை)-Rs.320
நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)-Rs,.430
முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்)-Rs.300
அப்பளம்(எதிரிகளை அப்பளமாக நொறுக்க)-Rs.45
பழைய பாக்கி - Rs.3450
Total: Rs.7490/-

இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி. 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. அதனால இந்த மளிகை கடை பாக்கிய(பாக்கியத்தை இல்லை) என் ஆருயிர் நண்பன் டெரர் அவர்கள் செட்டில் செய்வார்கள் என்பதை பதிவுலகிற்கு எருமையுடன் பெருமையுடன் தெரிய படுத்திக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 :டெரர் பஸ்சா போடுற? நீ போட்ட பஸ்க்குத்தான் இந்த பதிவு. இந்த பதிவு மொக்கைன்னு சொல்றவங்க உன்னை காறி துப்பட்டும்.

டிஸ்கி 2 : டெரர் போட்ட பஸ்:

Terror Pandian - Buzz - Public - Muted
ஊசி போன பாரிக் ரைஸ்சா இருந்தாலும் ஊருக்கா வச்சி சாப்பிட்டா உற்சாகமா தான் இருக்கு.

விளக்கம் : ஊர சுத்திட்டு வந்து. மிஞ்சி போன ரைஸ் வாங்கிட்டு ஹோட்டல்காரன குத்தம் சொல்லி புண்ணியம் இல்லை.. :(



Terror Pandian - அட நீங்க வேற எஸ்.கே சாப்பிட்டு முடிச்சிடேன்... ரைஸ் ஊசி போச்சி, புதுசா ஆர்டர் பண்ண வர 30 மினிட்ஸாகும், பசி வேற. அதானால அதையே ஊருக்கா வச்சி சாப்பிட்டேன். இதை பதிவா போட்டா எனக்கும் ரமேசுக்கும் என்ன வித்தியாசம். அதான் பஸ் போட்டேன்...
 
எஸ். கே - முடிஞ்ச வரை இவ்வளவு லேட்டா சாப்பிடறத மாற்ற முயற்சி பண்ணுங்க! உங்க உடம்புக்கு நலது!
 
எஸ். கே - வலைப்பூ என்பதே டைரி மாதிரி நமக்கு பிடிச்சதை எழுதுறதுக்கு ஆரம்பிக்க பட்டதுதானே! (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))


டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..............

ஞாயிறு, பிப்ரவரி 13

காதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை

அன்பே
ஆருயிரே
இந்த வருசமாவது
ஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது
உன்னோடு 
ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க
என் மனது
ஏக்கம் கொண்டு
ஐலேசா பாடுகிறது
ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
ஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ்  வார்த்தை எதுவுமே இல்லியா?. அவ்வ்வ்வ்வ்வ்வ்)
காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்

டிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்)

டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..

டிஸ்கி 3: இது ஒரு காலத்துல இந்திரா அழைத்த தொடர்பதிவுக்காக எழுதினது. அப்பாடி ஒரு வேலை முடிஞ்சது.
...

வியாழன், பிப்ரவரி 10

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

இவரை பத்தி எழுதனும்னா  ஒரு கண்டைனர் நிறையா பேப்பரும் பேனாவும் வாங்கணும். பதிவு எழுதுங்கன்னு சொன்னா 40 பக்கத்துக்கு எழுதுறவரு. சரியான பட்டிக்காட்டானுங்க இவரு. பாவம் நரி கூட சேர்ந்து பிளாக் அட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை.

இன்னிக்கு அவருக்கு பிறந்த நாளுங்க. எல்லோரும் அவர் மறுபடியும் ப்ளாக் எழுத  வந்திடக் கூடாதுன்னு வரணும்னு வேண்டி அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்.

அவர்தான் பிரபல பதிவர் பட்டிக்காட்டான் ஜெய் அண்ணா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா....
....

செவ்வாய், பிப்ரவரி 8

தொழிலாளி.... கிர்ர்ர்ர்ர் (எதிர் பதிவு)

இந்த பதிவு இதற்கு எதிர்பதிவு..

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி. எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல பஸ்ல ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.

உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.

அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்).

சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு  வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன்  ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது.

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை பேர சொல்றது(தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவான். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக.

அது மாதிரி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு மீட்டிங் வச்சா அந்த நேரத்துல செல்போன்ல பிகர்கிட்ட வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு மீட்டிங் வச்சா பிகரோட கடலை போடுவானுக. பின்ன மேனேஜர்க்கு கோவம் வந்து பேச ஆரமிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் மாலுமி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா மேனேஜர் கிட்ட முழு விபரம் கேளுங்க. அரை குறையா டீடேய்ல் கேட்டுக்க வேண்டியது அப்புறம் தப்பா வேலைய செஞ்சிட்டு அப்பாவி மேனேஜரை மனசுக்குள்ள திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா சொல்லுவீங்கன்னு சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா டீடைல்ஸ் வேணும்னு மேனேஜர் கிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்குவ? அப்ரைசல் டயத்துல மட்டும் எப்படிடா கரெக்டா வேலை செய்யுறீங்க?


இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை அப்பாவி மேனேஜர்க்கு ஜால்ரா போடற வேலை எல்லாம் செய்யுது. மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....


இந்த லூசுகளுக்கு கீழ ஒரு சின்ன லூசு(ஜூனியர்ஸ்) இருக்கும் இந்த லூசு மாச மாசம் அந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். சின்ன லூசு கரைக்டா ரிப்போர்ட் கொடுக்க பெரிய லூசு பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும். ரிப்போர்ட் மோசமா இருந்தா இது ஜூனியர்ஸ் பண்ணினது அப்டின்னு சொல்லி அவங்க மேல பழியை போடும்.


டெரர் : ஏண்டா நாயே, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு. ஆபீஸ் வர வேண்டியது. பிகர் கூட கடலை போட வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது (இவன் ஒரு கம்பனில அடிமாடா இருக்கான்)


டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது